Skip to main content

சில்லறைகளுக்கு பதில் சொல்ல முடியாது - வெடித்த திருமா!

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

இலங்கை விவகாரம் தொடர்பாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திருமாவளவன் அந்நாட்டு அதிபரை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் இதுதொடர்பாக பேசியதாவது, " இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்தொழித்த ராஜபக்சே குடும்பம், தற்போது மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளது. கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை புலிகளையும், தமிழ் மக்களையும் அப்புறப்படுத்திவிட்டு நாடாளுமன்ற வாசலை  தொட்டு கும்பிட்டுவிட்டு ராஜபக்சே நாடாளுமன்றம் சென்றதன் காணொளியை நாம் யாரும் இன்றளவும் மறந்திருக்க மாட்டோம். தற்போது அந்த இனப்படுகொலை குற்றவாளிகள் அந்த நாட்டு சட்டப்படி தேர்தலில் மீண்டும் நின்றார்கள், வென்றார்கள்.

அவர்கள் ஆட்சிக்கு வந்த இந்த சில தினங்களில் ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர்கள் மூவாயிரம் பேரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் அடித்து விரட்டி உள்ளனர். துப்பாக்கியால் சுடாமல், பாட்டிலாலும், கற்களாலும் அடித்து தமிழக மீனவர்களை துரத்தி உள்ளார்கள். இந்நிலையில், தற்போது கோத்தபய ராஜபக்சே பொறுப்பேற்றுள்ள நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் என்ற ஒரு சட்டத்தை அவசர கதியில் தற்போது கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி ராணுவமே ஆயுதங்களுடன் இனி ரோந்து பணிகளில் ஈடுபடலாம் என்ற வழிவகையை இந்த சட்டத்தின் படி அவர்கள் ஏற்படுத்தியுள்ளார். இது யாரை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது. முழுவதுமாக தமிழர்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டே இந்த சட்டத்தை மிக அவசர கதியில் கொண்டு வந்துள்ளார்கள்.
 

f




அதன்படி போலீசாரை கொண்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதை விட்டுவிட்டு அதன் முழு பொறுப்பையும் தற்போது ராணுவத்திடம் ஒப்படைத்துள்ளனர். இதன் முதல் நோக்கம் தனக்கு எதிராக யாரும் இருக்க கூடாது என்று நினைக்கிறார். அவர் ஏற்கனவே மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிர் பிழைத்தவர். எனவே தன்னுடைய உயிருக்கு மீண்டும் ஏதேனும் அச்சுறுத்தல் வந்துவிடக்கூடாது என்று இத்தகைய முடிவினை எடுத்துள்ளார். அவர் தமிழர்களுக்கோ, அவரது உரிமைகளுக்கோ எந்த காலத்திலும் பாதுகாப்பு அளித்தது இல்லை, அளிக்கப்போவதும் இல்லை என்பது நூறு சதவீதம் உண்மை. அவர்களை நாம்தான் பாதுகாக்க வேண்டும். கோத்தபய ராஜபக்சே பதவியேற்புக்கு சென்ற இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.மோடியின் வாழ்த்துக்கடிதத்தையும் அவரிடம் அமைச்சர் ஜெய்சங்கர் கொடுத்துள்ளார். அதுமட்டும் இல்லாது இலங்கை அதிபரின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா இருக்க வேண்டும் என்று மோடி விரும்புவதாக அவரிடம் சொல்லி அதற்கான அவரின் சம்மதத்தையும் பெற்றுள்ளார்கள். இன்னும் சில நாட்களில் அவர் இந்தியாவிற்கு வர உள்ளார். இவர்களிடம் நாம் மனித நேயத்தை எதிர்பார்க்க முடியுமா? இந்தியா தமிழர்களின் நலனுக்காக எதையாவது செய்யுமா என்றால் எதுவும் செய்யாது. கோத்தபய ராஜபக்சே இலங்கையின் மோடி.

நாம் தமிழர்களுக்காக மோடியை எதிர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சில சில்லறைகளின் பேச்சுக்களுக்கெல்லாம் நம்மால் பதில் சொல்ல முடியாது. நாம் ஏதோ இந்துக்களை எதிர்ப்பதை போன்ற ஒரு தோற்றத்தை உண்டாக்கப் பார்க்கிறார்கள். நமது இலக்கை, நமது எதிர்கால பயணத்திற்கு இத்தகைய நபர்கள், அவர்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்ய முயன்று பார்ப்பார்கள். அதில் அவர்கள் வெல்ல போவதில்லை. தோல்வியே அவர்களுக்கு பரிசாக கிடைக்கும். அதற்கெல்லாம் நாம் அஞ்சபோவதில்லை, பின்வாங்கப்போவதுமில்லை. அவர்களுக்கெல்லாம் விடுதலைச் சிறுத்தைகள் எப்படிபட்டவர்கள், எத்தகைய மன உறுதி கொண்டவர்கள் என்பதை காலம் கற்று கொடுக்கும். அவர்களின் வெற்று கூச்சலுக்கெல்லாம் நாம் பயப்பட போவதில்லை, தொடர்ந்து மக்களுக்காக பயணிப்போம்" என்றார்.

 

 

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.