Skip to main content

கோயில்களில் ஆடு, கோழிகளை பலியிட தடை!சிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்க உள்துறை செயலாளருக்கு உத்தரவு

Published on 28/09/2019 | Edited on 28/09/2019

 

கோவில்கள் மற்றும் கோவில்களைச் சுற்றிலும் ஆடுகள், மாடுகள், கோழிகள் ஆகியவற்றை பலியிடக்கூடாது என்று தமிழ்நாடு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் 1950 மற்றும் திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.   அப்படி இருந்தும், பலியிடுதல் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2003ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா,  கோவில்களில் தெய்வத்திற்கு பலியிடுதல் என்ற பெயரில் ஆடுகள் மற்றும் பறவைகளை படுகொலைசெய்யக் கூடாது. அதுபோன்ற செயல்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இதனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.  எதிர்ப்புகள் வலுத்து வந்த நிலையில், அந்த உத்தரவை வாபஸ் பெற்றுவிட்டார்.

 

t

 

தற்போது, இந்து கோயில்களில் ஆடு, கோழிகளை பலியிட திரிபுரா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

t

 

திரிபுராவில் பிரசித்தி பெற்ற மாதா திரிபுரேஸ்வரி கோயிலில் பலிகொடுப்பதற்காக அம்மாநில அரசு தினமும் ஒரு ஆட்டை கோயில் நிர்வாகத்திற்கு வழங்கி வருகிறது.   அரசின் இந்த செயல்பாட்டை எதிர்த்து வழக்கறிஞர் சுபாஷ் பட்டாச்சார்ஜி திரிபுரா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,  ’’கோயில்களில் பலியிட ஆடுகளை வழங்க அரசு பணம் கொடுப்பதற்கு இந்திய சட்டத்தில் இடமில்லை.  உயிர்ப்பலிகளை அரசு தடுக்க வேண்டுமே தவிர, அரசே அதைச்செய்யக்கூடாது.

 

t

 

மாநிலத்தில் இந்துகோயில்களில் இனிமேல் ஆடு,கோழிகளை பலியிட தடை விதிக்கப்படுக்கிறது.  உள்துறை செயலாளர் இந்த உத்தராவை நடைமுறைப்படுத்த வேண்டும்.   கோயில்  நிர்வாகத்தினர்  இந்த உத்தரவை கடைப்பிடிக்கிறார்களா? அல்லது உத்தரவை மீறுகிறார்களா? என்பதை சிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏ

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

tripura assembly bjp mla video issue

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில், கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 60 இடங்களைக் கொண்ட திரிபுரா சட்டசபையில், பாஜக 32 இடங்களை கைப்பற்றி 2வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில், தற்போது திரிபுரா சட்டசபையில் மாநில பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

 

பொதுவாக சட்டசபைக்கு செல்லும் எம்.எல்.ஏ.க்கள், தங்களது தொகுதி மக்களுக்காக குரல் கொடுப்பார்கள்; தொகுதி பிரச்சனை குறித்து பேசுவார்கள் என்று நாம் எண்ணுவதே வழக்கம். ஆனால், தற்போது திரிபுரா சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பாஜக எம்எல்ஏவின் விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வடக்கு திரிபுராவைச் சேர்ந்தவர் ஜதப் லால் நாத். இவர் பக்பசா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட ஜதப் லால், ஆரம்பத்தில் சபாநாயகரும் மற்ற எம்.எல்.ஏ.க்களும் விவாதிப்பதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தார். அதன்பிறகு, சில நிமிடங்கள் கழித்து தன் மடியில் இருந்த செல்போனை ஆன் செய்து ஆபாசப்படம் பார்த்துக்கொண்டிருந்த ஜதப் லால், அதை மேடையின் மேல் வைத்து ஆனந்தமாக ரசித்துக்கொண்டிருக்கிறார். அப்போது, இதை பார்த்துக்கொண்டிருந்த மற்றொரு எம்.எல்.ஏ, ஜதப் லால் செய்யும் வேலைகளை தனது செல்போனில் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் லீக் செய்துள்ளார்.

 

இந்நிலையில், இந்த வீடியோ காட்சிகள் வைரலானதை அடுத்து, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த சர்ச்சைக்கு பதிலளித்த திரிபுரா பாஜக தலைவர் ராஜிப் பட்டாச்சாரியா, "இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும், பாஜக எம்.எல்.ஏ ஜதப் லாலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

- சிவாஜி

 


 

Next Story

3 மாநில தேர்தல்; கருத்துக் கணிப்புகள் சொல்வது என்ன?

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

3 state elections; What do the polls say?

 

3 வட கிழக்கு மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில் கருத்துக் கணிப்புகள் வெளியான வண்ணம் உள்ளன.

 

வட கிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திரிபுரா மாநிலத்திற்கு கடந்த 16 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் மீதமுள்ள மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

 

மேகாலயா மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகளும், நாகாலாந்து மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இரு மாநிலங்களிலும் காங்கிரஸ், பாஜக போன்ற முக்கியக் கட்சிகள் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் காண்கின்றன. இன்று பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. அதேபோன்று திரிபுரா தேர்தலில் பதிவான வாக்குகளும் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

 

இந்நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி நாகாலாந்தில் 81.94% வாக்குகளும் மேகாலயாவில் 74.32% வாக்குகளும் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என பெரும்பான்மையான ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 36 முதல் 45 இடங்களை பாஜக கைப்பற்றும் எனவும் இடதுசாரிகள் 6 முதல் 11 இடங்களை கைப்பற்றும் எனவும் டிஎம்பி 9 முதல் 16 இடங்களை கைப்பற்றும் எனவும் இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. மேகாலயாவில் பாஜக 5 இடங்களையும் காங்கிரஸ் 3 இடங்களையும் என்பிபி 20 இடங்களை கைப்பற்றும் என்றும் பிற கட்சிகள் 30 இடங்களை கைப்பற்றும் என்றும் டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது. நாகாலாந்தில் பாஜக கூட்டணி 38 முதல் 48 இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என இந்தியா டுடே தெரிவித்துள்ளது. மேலும், என்.பி.எஃப் 3 முதல் 8 இடங்களையும் காங்கிரஸ் 1 முதல் 2 இடங்களையும் பிற கட்சிகள் 5 முதல் 15 இடங்களையும் கைப்பற்றும் எனவும் இந்தியா டுடே தெரிவித்துள்ளது.