Skip to main content

குடிக்க தண்ணீர் கொடுக்கவில்லை; வாஷிங் மிஷின் கொடுப்போம் என்கிறார்கள்! - உதயநிதி விமர்சனம்!

Published on 26/03/2021 | Edited on 26/03/2021

 

k


தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது. திமுக, அதிமுக கட்சிகள் தேர்தலை முன்னிட்டு பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது. திமுக தரப்பில் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இந்த தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது, வாரிசு அரசியல் என்று உங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,


கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நாம் தேர்தல் தொடர்பாகப் பேசி இருந்தோம். தற்போது நீங்கள், திமுக வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளீர்கள். உங்கள் தந்தை ஸ்டாலினை விமர்சனம் செய்பவர்கள் கூட அவர் அரசியலில் கடந்து வந்த பாதையை ஏற்றுக்கொள்வார்கள். அண்ணா காலத்தில் ஆரம்பித்து 'மிசா' சிறை வாசத்தைப் பார்த்து, மேயராக, பிறகு அமைச்சராக இருந்துள்ளார். நீங்கள் இளைஞரணித் தலைவராகப் பொறுப்பேற்றீர்கள். தற்போது சட்டமன்ற வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளீர்கள். இது எதிர்க்கட்சிகள் உங்களை விமர்சனம் செய்ய ஏதுவாக இருப்பதாகப் பொதுவாகக் கூறுகிறார்கள். இதை எப்படிக் கடந்து செல்கிறீர்கள்?


தலைவர் தனது 14 வயதில் இருந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் கால் தடம் படாத இடமே தமிழகத்தில் இல்லை என்று கூறலாம். ஏறக்குறைய தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் கட்சிக் கொடி ஏற்றியுள்ளார். நானும் சிறு வயதில் இருந்தே திமுகவில் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். தேர்தல் பிரச்சாரத்துக்கு தொடர்ந்து சென்று வந்துள்ளேன். தலைவர் கலைஞர் உடன் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்துள்ளேன். அவர் பேசுவதை அருகில் இருந்து பார்த்துள்ளேன். அப்படி வளர்ந்தவன் நான். அரசியல் எனக்கு புதிது அல்ல. அப்போது இந்த மாதிரி செல்ஃபோன்கள் கிடையாது, சமூக ஊடகங்கள் கிடையாது. தாத்தாவுக்காக சேப்பாக்கத்தில் வீடு வீடாகப் பிரச்சாரம் செய்துள்ளேன். அப்பாவுக்காக ஆயிரம் விளக்கில் நிறைய முறை பிரச்சாரம் செய்துள்ளேன். எனவே அரசியலுக்கு அவர்கள் கூறுவது போன்ற நேற்றைக்கு வரவில்லை. தொடர்ந்து அரசியலில் தான் இருக்கிறேன். சினிமாவுக்கு வந்த பிறகு கொஞ்சம் ஒதுங்கி இருந்தேன். பிறகு தலைவர் ஒருநாள் கூப்பிட்டு கிராம சபைக் கூட்டத்திற்கு நீ செல்ல வேண்டும் என்று கூறினார். பிறகு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கும் என்னை அனுமதித்தார். இந்த கூட்டங்கள் என்னை அரசியல் ரீதியாகத் தயார்ப்படுத்த மிகவும் உதவியாக இருந்தது. 


கட்சி ரீதியாக நீங்கள் செய்வதைக் கூறியிருக்கிறீர்கள். உங்கள் மீதான விமர்சனத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள். அதற்கு உங்களிடம் என்ன பதில் இருக்கிறது? 


அவர்கள் கூறுவதற்கெல்லாம் நம்மால் பதில் அளித்துக்கொண்டிருக்க முடியாது. அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்கிறார் என்று பெருமையாகச் சொல்ல வேண்டும். அதற்காகத்தான் நான் தொடர்ந்து கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். நான் இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பேற்ற அன்றே உங்களுக்கு எப்படி இந்த பொறுப்பை வழங்கினார்கள் என்று கேட்டார்கள். இது குடும்ப அரசியல் என்று கூறினார்கள். ஆமாம், என்னிடம் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டது. அதற்கு உண்மையாக உழைக்க எனக்கு நேரம் தர வேண்டும். அதன் பிறகு தவறு இருந்தால் என்னை விமர்சனம் செய்யுங்கள் என்று தான் தெரிவித்திருந்தேன். 


அனிதாவில் தொடங்கி சிஏஏ போராட்டம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் திமுக போராட்டம் நடத்தியுள்ளது. ஆனால், பிரச்சாரத்தில் இதை எல்லாம் தாண்டி பெண்களுக்குப் பணம் கொடுப்போம் போன்ற வாக்குறுதிகள் தான் பிரதானமாக இருக்கிறது. போராட்டங்களை பிரதானப்படுத்துவதை விட்டுவிட்டு இந்த மாதிரியான அறிவிப்புகள் அதிகம் பேசப்பட்டு வருவது ஏன்? 


அனைத்தையும் செய்கிறோம், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதி தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. சிஏஏ சட்டம் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து எதிர்ப்போம் என்று தெரிவித்துள்ளோம். நான் பல்வேறு இடங்களில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்துவருகிறேன். குடிக்கத் தண்ணீர் தரமாட்டேன் என்கிறார்கள். அவர்கள் தரும் வாஷிங் மிஷினை வைத்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று என்னிடம் கேட்கிறார்கள். நாங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம்தோறும் உரிமைத்தொகை 1,000 ரூபாய் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளோம். நாங்கள் இவ்வாறு சொன்னதும் அதை உடனடியாக ஜெராக்ஸ் காப்பி எடுத்து 1,000 ரூபாய் என்பதை 1,500 ரூபாய் என்று அறிவித்துள்ளார்கள். இந்த 10 வருடங்களாக ஏன் கொடுக்கவில்லை. அதைத்தான் நான் கேட்கிறேன். கரோனாவுக்காவது கொடுத்திருக்கலாமே? பொங்கலுக்கு கொடுத்துள்ளார்களே என்று சொல்கிறீர்கள். போன பொங்கலுக்கு இவர்கள் கொடுத்துள்ளார்களா? தீபாவளிக்குக் கொடுத்திருக்கலாமே, தேர்தல் வரப்போகிறது என்றதும் மக்களைப் பற்றி இவர்களுக்கு நினைவு வருகிறது. இந்த ஏமாற்று வேலைகள் எல்லாம் இந்தத் தேர்தலில் எடுபடாது. நிச்சயம் அவர்கள் ஏமாந்து போவார்கள். 


 

 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.