Skip to main content

ஆட்சியில் இருந்தால் போர்... எதிர்கட்சியாக இருந்தால் மதக்கலவரம்... தமிமுன் அன்சாரி கடும் தாக்கு

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

 

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. நக்கீரன் இணையதளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
 

திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பது ஏன்? 
 

நாட்டின் ஜனநாயகம், பன்மை கலாச்சாரம், அரசியல் சட்டம், சமூக நீதி, ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கோடு இம்முடிவை எடுத்திருக்கின்றோம். மீண்டும் மோடி பிரதமராக வருவாரேயானால் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்து விடுவார். உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, சிபிஐ உள்ளிட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை முற்றிலுமாக சீரழித்து விடுவார். இந்த அபாயங்களிலிருந்து நாட்டை காப்பாற்ற ராகுல் காந்தி தலைமையில் ஒரு கூட்டணி ஆட்சி மத்தியில் அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.


 

narendra-Modi




இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற நீங்கள், இன்று அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? 
 

இரட்டை இலையில் போட்டியிட்டது ஒரு தேர்தல் வியூகம். அவ்வளவுதான். அதற்காக எமது தனித்தன்மைகளை, கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாதல்லவா? போன நாடாளுமன்ற தேர்தலில் மோடியா? லேடியா? என ஜெயலலிதா கேள்வியெழுப்பினார். அதனால் தமிழக மக்கள் அவருக்கு 37 எம்.பி.க்களை பரிசளித்தனர். 
 

உதய் மின் திட்டம், தேசிய புலனாய்வு முகமை, நீட் தேர்வு, தேசிய கல்வி கொள்கை ஆகியவற்றில் மாநில உரிமைகளுக்காக மோடி அரசோடு மோதினார். தனி ஆளுமையாக இயங்கினார். இன்றைய அதிமுக அரசு ஜெயலலிதாவின் நிலைபாட்டுக்கு எதிரான முடிவை எடுத்து, அதிமுகவை சீரழித்த பாஜகவோடு முரண்பாடான கூட்டணியை வைத்துள்ளார்கள். அதிமுக தொண்டர்களின் மன நிலைக்கு எதிரான கூட்டணி இது. இது வேண்டாம் என நானும், தனியரசும், கருணாசும் எச்சரித்தோம். அவர்களுக்கு ஏதோ நெருக்கடி. நாம் என்ன செய்ய முடியும்?

 

THAMIMUN ANSARI


 

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழ்நாட்டின் நலன்களை காக்க முடியும் என்று சொல்லுகிறார்களே?
 

இணக்கமாக இருப்பதற்கும், பயந்து நடுங்கி பதுங்குவதற்கும் வித்தியாசம் உண்டு. மத்திய அரசும், மாநில அரசும் இணக்கமாக இருக்க வேண்டும் என்று தான் நாங்களும் சொல்கிறோம். ஆனால் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொல்லவில்லையே? இந்த வேறுபாடுகளை புரிந்துக் கொள்ள வேண்டும்.

 

ஜெயலலிதா இருந்தாலே இந்த மாதிரியான கூட்டணித்தான் உருவாகியிருக்கும் என்று ஓ.பி.எஸ். சொல்லுகிறாரே?

 

அண்ணன் ஓ.பி.எஸ். அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுடன் அதிக நெருக்கம் பாராட்டுவது தெரிந்ததே. அதனால் தான் அதிமுகவில் பூசல்கள் உருவானது. இப்போது அவர் அப்படியெல்லாம் பேசாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.

 

எதிரி நாடுகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றால் மோடி தலைமையில்தான் மத்திய அரசு அமைய வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் மும்பை தாக்குதல் நடந்தும் தீவிரவாதத்தை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை வைக்கிறார்களே? 
 

தற்போது மோடி பிரதமராக இருக்கும்போது தானே, அஜாக்ரதை காரணமாக புல்வாமா தாக்குதல் நடைப்பெற்றது? வாஜ்பாய் ஆட்சியில் தானே மசூத் அஸார் போன்ற தீவிரவாதிகளை, அந்நிய சக்திகளிடம் ஒப்படைத்தார்கள்? அவர்கள் ஆட்சியில் தானே பாகிஸ்தான் ஆதரவு படைகள் கார்கிலுக்குள் நுழைந்தன?
 

 சீனாவின் எல்லை  அத்துமீறல்கள் மோடியில் ஆட்சியில் தானே அதிகரித்தது? இதையெல்லாம் மறைத்து விட்டு, காவி நிறத்தில் போலித்தனமான தேசபக்தியை கட்டமைக்க முயல்கிறார்கள். தேர்தல் நேரத்தில் இதை வைத்து போர் வெறியை தூண்டுவது, அவர்களின் மோசமான அரசியலை காட்டுகிறது.
 

 பாஜக எதிர்கட்சியாக இருந்தால் உள்நாட்டில் மதக்கலவரங்களை தூண்டுவார்கள். ஆட்சியில் இருந்தால் தேர்தல் நேரத்தில் போர் வெறியை தூண்டுவார்கள். நல்லவேளை மக்கள் இவர்களின் சித்து விளையாட்டுகளை புரிந்துக் கொண்டார்கள். அந்த கூட்டணி தலைவர்கள்தான் புரியாதது போல நடிக்கிறார்கள்.



சிறுபான்மையினர் நலம்பெற எந்த மாதிரியான திட்டங்களை காங்கிரஸ் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
 

நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைப்படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசு பதவிகளில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். நாடு முழுக்க விசாரணைக் கைதிகளாக உள்ளவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். சிறுபான்மையினருக்கு கல்வி வாய்ப்பளிக்கும் வகையில் அலிகர் பல்கலைக்கழகத்தின் கிளைகளை எல்லா மாநிலங்களிலும் அமைக்க முன் வரவேண்டும்.

 

Rahul-Gandhi


 

பாஜக அரசில் கிடைக்காத எதை, நீங்கள் காங்கிரசிடம் எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள்?
 

ராகுல் அவர்களின் ஸ்டெல்லா மேரீஸ் மாணவிகளுடனான கலந்துரையாடல் ஒரு சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாகும். பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை, நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதி விலக்கு, தமிழ் மொழி பாதுகாப்பு, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுதல், மீனவர்களுக்கு தனி அமைச்சகம், விவசாய கடன்கள் தள்ளுபடி ஆகியவற்றில் ராகுலின் கனிவான அணுகுமுறை நம்பிக்கையூட்டுகிறது.
 

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவங்களை வெளியில் கொண்டு வந்த நக்கீரன் மீது வழக்கு தொடுப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
 

நக்கீரன் மீது வழக்குகள் பாய்வது புதிதல்ல. புதைக்கப்பட்ட, மறைக்கப்பட்ட செய்திகளை மக்கள் மன்றத்திற்கு கொண்டு வந்து நீதியை நிலைநாட்டுவதில்  நக்கீரனின்  பணிகளை தமிழ் சமூகம் பாராட்டுகிறது.
 

இப்போது பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நக்கீரன் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது என்பதற்காக, ஆசிரியர் கோபால் அவர்களுக்கு சம்மன் அனுப்பியது அதிர்ச்சியளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
 

 


 

 

 

 


 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.