Skip to main content

வாக்குகளை வாங்குகிறாரோ இல்லையோ... சசிகலா உதவியால் தம்பிதுரைக்கு சீட்? கண்டிஷன் போட்ட ஓபிஎஸ், இபிஎஸ்! 

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்களாக தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன் ஆகியோர் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். தம்பிதுரையை டெல்லியில் விரும்பாத பா.ஜ.க. தலைவர்கள், அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுபவர். அத்துடன், சசிகலாவின் ஆதரவாளர் என்கிறார்கள்.

 

admk



மக்களவையில் போட்டியிட்டு தோற்றவருக்கு, சசிகலாவின் சிபாரிசில் மாநிலங்களவை பதவி தரப்பட்டிருக்கிறதோ என பா.ஜ.க. வினரை யோசிக்க வைத்துள்ளது தம்பிதுரையின் தேர்வு. அதற்கு நேரெதிராக சசிகலாவின் தீவிர எதிர்ப்பாளராக ஓ.பி.எஸ்.ஸுடன் சேர்ந்து அரசியல் செய்த கே.பி.முனுசாமிக்கும் வாய்ப்பு தந்துள்ளார் எடப்பாடி. கட்சியின் மூத்த நிர்வாகிகள் பதவிசுகங்களை அனுபவிப்பதால், தனக்கான வாய்ப்புக்காக கடந்தமுறை அன்புமணி மாநிலங்களவைக்கு நிறுத்தப்பட்டபோதே கலகக்குரல் எழுப்பியவர் கே.பி.முனுசாமி. தற்பொழுது ஓ.பி.எஸ்.ஸை விட்டு விலகி, முழுவதும் எடப்பாடியின் ஆதரவாளராக மாறிவிட்டார் கே.பி.முனுசாமி என்கிறார்கள் அ.தி.மு.க மேல்மட்டத்தினர்.

 

admk



நத்தம் விசுவநாதன், வேலூர் எம்.பி. தேர்த லில் பணத்தை வாரியிறைத்த புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், தே.மு.தி.க. சார்பில் சுதீஷ் அல்லது பிரேமலதா, இது தவிர பா.ஜ.க.வின் மேல்மட்ட தலைவர்களின் சிபாரிசுடன் மல்லுக்கட்டிய மைத்ரேயன், விஜிலா சத்யானந்த், மறைந்த சபாநாயகர், பி.எச்.பாண்டியன் மகன் மனோஜ் பாண்டியன், அ.தி.மு.க.வில் முஸ்லிம் குரலாக மட்டும் ஒலிக்கும் அன்வர்ராஜா, பி.ஜே.பி. செல்லபாண்டியன் என பலரும் மாநிலங்களவை வாய்ப்பு கேட்டனர்.

அடுத்த மாநிலங்களவைத் தேர்தல் 2021-ல் தான் நடக்கும். அடுத்த சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.வினரிடையே காணப்படும் பயம், அவநம்பிக்கை ஆகியவை இந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியை கடுமையாக்கியது. இதில் தே.மு.தி.க.வை முந்தி மாநிலங்களவை வாய்ப்பை பா.ஜ.க.வுக்கு நெருக்கமான தொழிலதிபரான அம்பானியும் அதானியும் முன்பு கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக வாசன் இருந்த காலத்தில் ஏற்பட்ட அறிமுகம் காரணமாக பெற்றுத்தந்துள்ளனர். இந்த தேர்வு தே.மு.தி.க.வை டென்ஷனடைய வைத்துள்ளது. வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் வரை தே.மு.தி.க. பொறுமைகாக்கும், அதன்பிறகு விஜயகாந்த், கமலைப் போல ரஜினி அணியில் இணைவார் என்கிறது தே.மு.தி.க. வட்டாரம். விஜயகாந்த்தைவிட ரஜினிக்கு மிக நெருக்கமானவர் ஏ.சி.சண்முகம். அவர் ரஜினியுடன் வெகுவிரைவில் காட்சியளித்து அ.தி.மு.க.வை கடுப்பேற்றுவார் என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.


ரஜினி, தி.மு.க.வுக்கு விழும் வாக்குகளை வாங்குகிறாரோ இல்லையோ... அ.தி.மு.க.வுக்கு விழும் தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை நிச்சயம் பிரிப்பார் என்றும் அதன் பாதிப்புகளையும் கணக்குப் போடும் அ.தி.மு.க.வினர் இப்போதே ரஜினி ஓட்டப்போகும் ரயிலில் துண்டு விரித்து இடம் பிடிக்கத் தயாராகிவிட்டனர் .

இன்னொரு பக்கம், ஓ.பி.எஸ். மகனும் வைத்திலிங்கமும் மத்திய அமைச்சர் ஆவதற்கு இடையூறாக வரக்கூடாது என தம்பிதுரையிடமும் கே.பி.முனுசாமியிடமும் உத்தரவாதம் வாங்கியுள்ளார் எடப்பாடி என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

 

 

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.