Skip to main content

ஏமாற்றிய டாஸ்மாக் வருமானம்... கையை பிசையும் தமிழக அரசு!

Published on 19/05/2020 | Edited on 19/05/2020
ுப



இந்தியா முழுவதும் கரோனா காரணமாக, கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது. இதனால் தொழிற்சாலைகள் முதல் பள்ளிக்கூடங்கள் வரை அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் மதுக்கடைகளும் மூடப்பட்டு இருந்தன. மூன்றாவது ஊரடங்கின்போது மத்திய அரசு மதுக்கடைகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கியது.


அதன்படி சிவப்பு மண்டலங்கள் இல்லாத பகுதிகளில் மதுக்கடைகள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதன் அடிப்படையில் தில்லி, கர்நாடகம், அஸ்ஸாம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மதுக்கடைகளை திறந்தது. கர்நாடகாவில் மதுகடைகளை திறந்ததால் தமிழக எல்லையோர மாவட்டத்தில் உள்ள மக்கள்  கர்நாடகத்திற்கு படையெடுத்தனர். இதனால் தமிழக அரசு கடும் அதிர்ச்சி ஆகி மாநில எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் என்று பார்த்தால், தமிழகத்தில் விரைவில் மதுக்கடைககள் திறக்கப்படும் என்றும் மே மாதம் 4ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு குடிமகன்களில் வயிற்றில் பாலை வார்த்தது. அதன்படி கடந்த 7ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டது. 

 

 


முதல் நாளில் 170 கோடிக்கும், இரண்டாம் நாளில் 140 கோடிக்கும் என இரண்டு நாட்களில் 310 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றது. இந்நிலையில் மதுக்கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தார்கள். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிடும் டாஸ்மாக் செயல்பாட்டிற்கு தடை விதித்தது. அதன்படி ஊரடங்கு தொடரும் வரை டாஸ்மாக் செயல்படாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு அடுத்த நாளே உச்சநீதிமன்றத்தை நாடியது. தமிழக அரசின் அப்பீலை சில தினங்களில் விசாரித்த உச்சநீதிமன்றம், டாஸ்மாக் விற்பனையில் தமிழக அரசே இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. 

இதனால் மகிழ்ச்சி அடைந்த தமிழக அரசு கடந்த 16ம் தேதி மதுக்கடைகளை மீண்டும் திறந்தது. ஆனால் 7ம் தேதி மதுக்கடைகள் திறந்தபோது கிடைத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வருமானம் தற்போது குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அதன்படி, மூன்றாம் நாளான நேற்று டாஸ்மாக் வருமானம் 109 கோடி என்ற அளவில் இருந்தது. இந்த முறையும் மதுரை மண்டலம் விற்பனையில் முதலிடத்தில் இருந்தது. தினமும் 150 முதல் 170 கோடி வரை வருமானம் பார்க்கும் வரபிரசாதமாக இருந்த டாஸ்மாக் விற்பனை, மக்களிடம் உள்ள கரோனா அச்சத்தாலும், வேலை இல்லாததாலும் மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு வருவது குறைந்துள்ளது. டாஸ்மாக்கில் இருந்து பெரிய வருமானத்தை எதிர்பார்த்திருந்த தமிழக அரசுக்கு, டாஸ்மாக்கில் வருமானம் குறைந்தது அதிர்ச்சியை தந்துள்ளது.
 

 

 

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.