Skip to main content

தமிழகத்தில் எந்தெந்த மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் நிறைவடைகிறது!

Published on 27/05/2019 | Edited on 27/05/2019

இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. ஒன்று மக்களவை, மற்றொன்று மாநிலங்களவை. மாநிலங்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 245 ஆகும். மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். இதில் 12 நியமன உறுப்பினர்கள் ஆவர்.  தமிழகத்தில் இருந்து சுமார் 18 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.  தமிழகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 235 ஆகும். அதில் ஒருவர் நியமன உறுப்பினர் ஆவர். தமிழகத்தில் இருந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கு சுமார் 34 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவை.  

 

தமிழகத்தில் மட்டும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் 24/07/2019 அன்றுடன் நிறைவடைகிறது. அவர்களின் விவரங்களை பார்போம்.

1. கனிமொழி (திமுக).
2. கே.ஆர்.அர்ஜூனன் (அதிமுக).
3. டாக்டர். வி.மைத்ரேயன் (அதிமுக).
4. டி.ராஜா (சிபிஐ).
5. டாக்டர்.ஆர்.லட்சுமணன் (அதிமுக).
6. டி.ரத்தினவேல் (அதிமுக).


தமிழக சட்டப்பேரவையில் கட்சிகள் வாரியாக உறுப்பினர்கள் எண்ணிக்கை.

அதிமுக கூட்டணி - 113.
திமுக  - 88.
காங்கிரஸ் -8.
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்-1.
சுயேச்சை - 1
சபாநாயகர்-1
நியமன உறுப்பினர் - 1

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களிலும் , அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனால் திமுக கூட்டணிக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 110 ஆகவும், அதிமுக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 122 ஆகவும் உயர்ந்துள்ளது. 

 

tn assembly

 

திமுகவின் மாநிலங்களவை  உறுப்பினர்கள் மற்றும் பதவி காலம்.

1. ஆர்.எஸ்.பாரதி (30/06/2016- 29/06/2022) .
2. டி.கே.எஸ்.இளங்கோவன் (30/06/2016- 29/06/2022).
3. திருச்சி.சிவா (03/04/2014- 02/04/2020).


அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் பதவி காலம்.

1. எஸ். முத்துக்கருப்பன் - (03/04/2014 - 02/04/2020).
2. டாக்டர். சசிகலா புஷ்பா - (03/04/2014 - 02/04/2020).
3. டி.கே.ரங்கராஜன் (சிபிஐ) - (03/04/2014 - 02/04/2020).
4. ஏ.கே. செல்வராஜ் - (03/04/2014 - 02/04/2020).
5. விஜிலா சத்யானந்த் - (03/04/2014 - 02/04/2020).
6. எஸ். ஆர் பாலசுப்ரமணியன் - (30/06/2016 - 29/06/2022).
7. ஏ. நவநீதகிருஷ்ணன் - (30/06/2016- 29/06/2022).
8. ஆர். வைத்தியலிங்கம் - (30/06/2016- 29/06/2022).
9. ஏ.விஜயகுமார் - (30/06/2016 - 29/06/2022).

 

rajya sabha

 

 

தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் நிறைவடைவதை அடுத்து அதிமுகவிற்கு மூன்று உறுப்பினர்களும், திமுகவிற்கு மூன்று உறுப்பினர்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதில் அதிமுக கட்சி மக்களவை தேர்தலின் போது கூட்டணி அமைத்த பாமகவிற்கு ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது . அதன் படி தருமபுரி மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த  பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ராஜ்ய சபா உறுப்பினர் ஆக அதிக வாய்ப்பு. மீதமுள்ள இரு ராஜ்யசபா சீட்டுகள் கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை அதிமுக கட்சி வழங்கி வந்தது. இந்த முறையும் அந்த கட்சிக்கு சீட் வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.  மீதமுள்ள ஒரு ராஜ்ய சபா பதவிக்கு அதிமுகவின் மூத்த தலைவர் மைத்ரேயனுக்கு வழங்கப்படலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

 

அஸ்ஸாம் மாநிலத்தில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் 14/06/2019 அன்று நிறைவடைவதை அடுத்து அந்த மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் அஸ்ஸாம் மாநில ராஜ்ய சபா இடத்திற்கு தமிழகத்தில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில்  போட்டியிட்டு தோல்வி அடைந்த முன்னால் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னணுக்கு அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபா உறுப்பினர் ஆக அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் தமிழகத்தை சேர்ந்த பாஜக கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

rajya sabha

 

 


திமுக சார்பில் கூட்டணி கட்சியான மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள இரு ராஜ்ய சபா சீட்களில் திமுகவின் புது முகங்களுக்கு அக்கட்சி வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினரின் பதவி காலம் முடிவடையும் நிலையில் அவருக்காக திமுகவிடம் ஒரு ராஜ்ய சபா எம்பி சீட்டை  காங்கிரஸ் கட்சி கேட்க கூடும் என்ற தகவலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் பல்வேறு மாநிலங்களில் பாஜக கட்சி ஆட்சியை பிடித்துள்ளதால் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜக கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் இனி மசோதாவை எளிதாக நிறைவேற்ற முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

 

 

 

 

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர்.