Skip to main content

மிகப்பெரிய கேள்விக்கு இன்று விடையளிக்கவிருக்கும் தமிழக மக்களவை உறுப்பினர்கள்!!!

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

நேற்று மக்களவையின் முதல்நாள் கூட்டம் நடைபெற்றது, இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
 

loksabha


பெரும்பாலும் ஹிந்தியில் பதவியேற்றுக்கொண்டாலும் சிலர் அவரவர் தாய்மொழியில் பதவியேற்றுக்கொண்டனர். இதனால் மக்களவை நிறைய மொழிகளால் நிறைந்தது. ஒரே நாடு, ஒரே மொழி என்று பாஜக கூறிவந்தாலும், அதன் கட்சியைச் சேர்ந்த மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களிலேயே சிலர் தங்களது பதவி பிரமாணத்தை தங்களின் தாய்மொழியில் ஏற்றுக்கொண்டனர். 

அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பெரும்பாலான மத்திய அமைச்சர்கள், ஹிந்தியில் பதவியேற்றுக்கொண்டனர். அதே வேளையில், மத்திய அமைச்சர்களான டி.வி.சதானந்த கவுடா, பிரஹலாத் ஜோஷி கன்னடத்திலும், ஹர்சிம்ரத் கவுர் பாதல், பஞ்சாபியிலும், மத்திய அமைச்சர்கள், அரவிந்த கணபத் சாவந்த், ராவ்சாஹிப் படேல் தான்பே, மராத்தியிலும், ஜிதேந்திர சிங், டோங்கிரியிலும், பபுல் சுப்ரியோ ஆங்கிலத்திலும், ராமேஸ்வர் தெலி, அசாமி, தேபஸ்ரீ சவுத்ரி ஆகியோர் வங்க மொழியிலும், பிஜு ஜனதா தளத்தின் மஹதப் ஒடியாவிலும், மத்திய அமைச்சர்களான ஹர்ஷ்வர்தன், அஸ்வினி சவ்பே, ஸ்ரீபத் நாயக், பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோர் சமஸ்கிருதத்திலும் பதவியேற்றனர்.

இப்படியாக பல பிராந்திய மொழிகள் நேற்று ஒலித்தன. தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்நாடு முன்னோடியாக, முக்கியத்துவமானதாக இருக்கிறது. அப்படியிருக்கையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் தமிழ்மொழியில் பதவியேற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. (இன்று பதவியேற்கவிருக்கிறார்கள்)

எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இந்தமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இப்படியாக சென்றுள்ள மக்களவை உறுப்பினர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

 

 

 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.