Skip to main content

2019ல் தமிழிசை ஏற்படுத்திய வெற்றிடம்!

Published on 30/12/2019 | Edited on 30/12/2019

தமிழகத்தில் பாஜகவுக்கு தலைவராக எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள். ஆனால், அந்தக் கட்சியின் தலைவர் யாரென்று பெரும்பான்மையான தமிழக மக்களுக்கே தெரியாத நிலைதான் முன்பெல்லாம் இருந்தது. ஆனால், 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து பாஜகவின் தலைவராக தமிழிசை பொறுப்பேற்று, அந்தக் கட்சியையும் அதன் சின்னத்தையும் தனது தமிழால், குரலால் பட்டி தொட்டியெங்கும் தெரியவைத்தார்.

 

tamilisai

 

தோற்றம் சார்ந்து பல்வேறு அநாகரீகமான கிண்டல்களுக்கு ஆளானாலும் அசராமல் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு தினமும் செய்திகளில் அடிபட்டுக்கொண்டே இருந்தார். தமிழிசையை கலாய்ப்பது என்றால் சமூக வலைத்தளத்தில் இயங்குவோருக்கு அல்வா சாப்பிடுவது போல. ஆனால், தமிழிசையை யாரேனும் உருவத்தை வைத்து, தோற்றத்தை வைத்து கிண்டல் செய்தால் அவருக்கு ஆதரவாக ஓங்கிக் குரல் கொடுப்பதிலும் அவர்களே முன் நிற்பார்கள்.

 


“தாமரை மலர்ந்தே தீரும்” “கழகங்கள் இல்லா தமிழகம்” என்ற முழக்கங்களை சளைக்காமல் முழங்கியவர். பாஜகவின் தலைவராக அதிக ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர் இவராகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு பாஜக என்றால் தமிழிசை, தமிழிசை என்றால் பாஜக என்று ஆகியிருந்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டு தோற்றார். அத்துடன் அவரை தெலங்கானா மாநில ஆளுநராக நியமித்துவிட்டார்கள். உயரிய பொறுப்பு என்றாலும், அதிகம் பேசவே வாய்ப்பில்லாத பொறுப்பாகிவிட்டது. அவர் ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு தமிழக பாஜகவில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகிவிட்டது. ஒற்றை ஆளாக அரசியல் களத்தில் பாஜகவை பரபரப்பாக பேச வைத்த தமிழிசைக்கு இணையாக நான்கு பேரை தலைவர்களாக நியமிக்க வேண்டிய நிலைக்கு பாஜக தலைமை தள்ளப்பட்டிருக்கிறது.

அதாவது, பாஜக தலைவர் என்றால் யாரை அடையாளம் காட்டுவது என்றே குழப்பமாகிவிட்டது. தமிழிசை இல்லாமல் பாஜக தவிக்கிறதோ இல்லையோ, சமூக வலைத்தளத்தினர் ரொம்பவே தவிக்கிறார்கள் என்பதுதான் நிஜம்.

 

 

 

 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.