Skip to main content

அதிமுக கூட்டணி தலைவர்கள் ஷாக்... ஒரே கல்லில் பலமாங்காய் அடிக்கும் முதல்வர் எடப்பாடி

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக தள்ளிப்போட்டு வந்த ஆளும் அதிமுக அரசு உச்சநீதிமன்ற உத்தரவால் விரைவில் உள்ளாட்சி மன்றத்திற்கான தேர்தல்களை நடத்தவேண்டிய இறுதி நெடுக்கடிக்குள் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து டிசம்பர்  அல்லது ஜனவரிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அதிமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான திமுக இரண்டு  தலைமைகளும் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள கட்சியினரை விருப்ப மனு செய்ய அறிவித்ததோடு திமுகவில் சென்ற 14 ஆம் தேதியில் இருந்து விருப்ப மனுக்கள் அந்தந்த மாவட்ட கட்சி அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அதேபோல் 15 மற்றும் 16 ஆகிய இருநாட்களில் அதிமுக விருப்ப மனு வாங்கியது.

 

tamilnadu local election... eps new plan

 

இந்த பின்னணியில் அதிமுக கூட்டணி காட்சிகளுக்குள் பதவியை பெறுவதில் போட்டி குழப்பம் சலசலப்பு என உருவானது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக தங்களுக்கு 5 மேயர் பதவிகள் வேண்டும் எனவும், அடுத்துள்ள பாமக 4 மேயர் பதவி வேண்டும் என்றும் அடுத்து தேமுதிக 3 மேயர் பதவியை எங்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இது போதாதற்கு புதிய நீதி கட்சியான ஏசிசண்முகம் 1 மேயர் பதவி வேண்டும் என்றும் இப்படி கூட்டணி கட்சிகள் மொத்தமுள்ள 15 மேயர் பதவிகளில் 13 கணக்குப்போட  இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்த எடப்பாடி வேறு கணக்கை போட்டார். அதுதான் ஒரே கல்லில் பல மாங்காய் அடிப்பது என்ற திட்டம்.

 

tamilnadu local election... eps new plan


ஆம், அந்த திட்டம்தான் தேர்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள் மூலம் மேயர்கள் மற்றும் நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுப்பது. ஒவ்வொரு உள்ளாட்சி மன்றத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள் மறைமுக ஓட்டுப்போட்டு மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுப்பது. இந்த கணக்குப்படி முதலில் கவுன்சிலராக வெற்றிபெற்று வாருங்கள் அப்புறம் நீங்கள் கேட்கிறபடி மேயர் பதவி, நகராட்சி தலைவர் பதவி, பேரூராட்சி  தலைவர் பதவி பற்றி கலந்துக்பேசிக்கொள்வோம், இதுதான் எடப்பாடி போட்ட மாங்காய் அடிக்கும் திட்டம்.

 

tamilnadu local election... eps new plan

 

மாநகராட்சிம் முதல் பேரூராட்சி வரை கவுன்சிலர் பதவிகளை அதிமுகவிற்கு நிகராக கூட்டணி கட்சியினர் பெறமுடியாது என்பதே உண்மை நிலை. உதாரணத்திற்கு ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் இதில் பாஜக சார்பில் 1 அல்லது 2 வார்டுகளில் போட்டியிடும் அளவிற்கு அந்த கட்சியின் பலம் உள்ளது. அதேபோல் தேமுதிக 3, பாமக 1 இந்த வரிசைப்படிதான் கவுன்சிலர் சீட் பெறமுடியும். இதிலும் போட்டியிடும் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றிபெறுவர்களா என்பது உறுதிப்படுத்த முடியாது. இப்படியிருக்க இவர்களைவிட அதே இடங்களில் அதிமுக வெற்றிபெற வாய்ப்பிருக்கும். ஆக தேமுதிக கேட்கிற 3 மாநகராட்சிகளில் ஈரோடும் ஒன்று ஒரேஒரு கவுன்சிலர் இடம்கிடைத்து தேமுதிக மாநகராட்சிக்குள் நுழைந்தால் அதிகமுள்ள அதிமுகவினர் எப்படி தேமுதிகவுக்கு மேயர் பதவியை ஏற்றுக்கொள்ளவார்கள். நடைபெறாத ஒன்றாக அதிமுக கூட்டணி கட்சியினர் ஒட்டுமொத்தமாக முதல்வர் எடப்பாடியிடம் ஏமாந்துள்ளதாக புலம்ப தொடங்கிவிட்டனர்.

முதல்வர் எடப்படியோ எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது என்று கூறிக்கொண்டாலும் ஒட்டுமொத்தமாக உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிகளை அதிமுக வசமே வைத்துக்கொள்ளும் திட்டம்தான் இது.

 

 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.