Skip to main content

இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்றம்... நம்பிக்கையில்லா தீர்மானத்துடன் இவையும் நடக்கப்போகிறது!!!

Published on 27/06/2019 | Edited on 28/06/2019

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்துபிறகு, முதன்முதலாக நாளை சட்டமன்றம் கூட இருக்கிறது. கடந்த 24ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சட்டமன்றத்தை 23 நாட்கள் நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. 

இந்த 23 நாட்களில் என்னென்ன நடக்கவிருக்கிறது...
 

tamilnadu legislative assembly


ஜூன் 28 - மறந்த சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆர். கனகராஜ், கு.இராதாமணி) குறித்த இரங்கற் குறிப்புகள் மற்றும் இரங்கற் தீர்மானங்கள்

29 & 30 - அரசு விடுமுறை
 

கீழ்கண்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்

ஜூலை 1 - வனம் மற்றும் சுற்றுச்சூழல் 

ஜூலை 2 -பள்ளிக்கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, உயர்கல்வித்துறை

ஜூலை 3 - கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

ஜூலை 4 -எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை

ஜூலை 5 - மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை, பால்வளம்

ஜூலை 6 & 7 - அரசு விடுமுறை

ஜூலை 8 -நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, 

ஜூலை 9 -நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத் துறை

ஜூலை 10 -சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, பிறப்டுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

ஜூலை 11 -தொழில் துறை, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

ஜூலை 12- கைத்தறி மற்றும் துணிநூல், செய்து மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு

ஜூலை 13 & 14 -அரசு விடுமுறை

ஜூலை 15 -நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள், பாசனம்

ஜூலை 16 -மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை

ஜூலை 17 -வேளாண்மைத் துறை

ஜூலை 18 -சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை 

ஜூலை 19 -வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு

ஜூலை 20 & 21 -அரசு விடுமுறை


ஜூலை 22 -காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் (அடுத்த நாளும் தொடரும்)

ஜூலை 23 -காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த பதிலுரை, வணிக வரிகள், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப் பதிவு, தகவல் தொழில்நுட்பவியல் துறை

ஜூலை 24 -தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தமிழ் வளர்ச்சி

ஜூலை 25 -இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள் - நிர்வாகம், போக்குவரத்துத் துறை

ஜூலை 26 -ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள்

ஜூலை 27 & 28 -அரசு விடுமுறை

ஜூலை 29 -பொதுத்துறை, மாநிலச் சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்கள் ஏனைய ஓய்வுகால நன்மைகளும் (அடுத்த நாளும் தொடரும்)

ஜூலை 30 -பொதுத்துறை, மாநிலச் சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்கள் ஏனைய ஓய்வுகால நன்மைகளும் குறித்த பதிலுரை. மேலும் அரசினர் சட்ட முன்வடிவுகள் - ஆய்வுசெய்தலும், நிறைவேற்றுதலும், ஏனைய அரசினர் அலுவல்கள் 


இந்த அடிப்படையில்தான் சட்டமன்றம் நடைபெறும். இதற்கிடையில் ஒத்திவைப்பு, வெளிநடப்பு போன்ற அவை நடவடிக்கைகளும் நடைபெறும். மேலும் ஜூலை 1ம் தேதி  சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று(28.06.2019) நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வாபஸ் பெறுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். 

 

 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.