Skip to main content

கேரளாவைப் போல் தமிழகத்தில் எப்போது... அபாயத்தை நோக்கி தமிழகம்... அலெர்ட்டா இருப்பாரா இபிஎஸ்? 

Published on 27/04/2020 | Edited on 27/04/2020

 

admk



தமிழகத்தில் கரோனா வெகுவேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. ஊரடங்கு காலத்தில் ஒரு சில மாவட்டங்களில் கட்டுப்பாடான நிலை இருந்தாலும், பெரும்பாலான பகுதிகளில் நிலவரம் கலவரமாகவே உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இதே நிலைதான்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவிய விதத்தின் அடிப்படையில் அலசி ஆய்வு செய்தால், இந்தியாவுக்கும் இது நெருக்கடியான காலம்தான். இந்தப் போக்கு நீடித்தால், வரும் மே மாத இறுதியில் குறைந்தது 38 ஆயிரம் உயிர்ப்பலிகளை எதிர்கொள்ளக்கூடிய அபாயத்தில் இந்தியா இருக்கிறது என கணக்கிடப்பட்டுள்ளது. அதுபோல, மே 6ந் தேதி வாக்கில் 8000 பேர் ஐ.சி.யூ. வில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகளை இந்திய ராணுவ மருத்துவக் கல்லூரியும், ஐ.ஐ.டி. புனேயும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகிய மூன்று அமைப்புகளும் சேர்ந்து வெளியிட்டுள்ளன.


 

 

doctor



கரோனா மூன்றாம் கட்டத்திற்கு சென்றுவிட்டதா என்ற கேள்விக்கு அதிகாரப்பூர்வமாக பதில் சொல்ல அரசு மருத்துவத்துறை தயங்குகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா ஒரு இரண்டாம் நிலை தொற்று, அது மூன்றாம் சமூக தொற்றாக மாறவில்லை. இதுவரை தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் அவர்களுக்கு யாரால் இந்த நோய் வந்தது என்பதை எளிதாக கண்டுபிடித்து சொல்ல முடியும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால் இதுவரை தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 61 பேருக்கு யாரால் கரோனா நோய் வந்தது என கண்டுபிடித்து சொல்லவே முடியவில்லை என்கிறார்கள் கரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் நேர்மையான மருத்துவர்கள்.

கரோனா நோய் வாணியம்பாடி காவல்நிலையத்தில் உள்ள ஒரு ஆய்வாளரை தாக்கியிருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் ஒருவரை தாக்கியுள்ளது. கோவை போத்தனூர் காவல்நிலைய அதிகாரியை தாக்கியுள்ளது. இதுதவிர 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை இந்த நோய் தாக்கியுள்ளது.

சென்னையில் ஒரு கர்ப்பிணியை இந்த நோய் தாக்கியுள்ளது. அடையாறு பகுதியில் இரண்டு டாக்டர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. இவர்களுக்கெல்லாம் யாரிடம் இருந்து கரோனா வந்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

 

kit



வரும் மே மாதம் ஒன்றரை லட்சம் பேர் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாவார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 40 ஆயிரம் வெண்ட்டி லேட்டர்கள் தேவை என பயமுறுத்துகிறார்கள் கரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள். இதில் சோகமான விஷயம் என்னவென்றால்... தருமபுரி, தூத்துக்குடி, ராம நாதபுரம் போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் ஏராளமானோர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு அவர்களில் பலர் செயற்கை சுவாசம் எனப்படும் வெண்டிலேட்டர் மூலமாகத்தான் சிகிச்சை பெற வேண்டுமென்றால் அந்த வெண்டிலேட்டர்களை இயக்குவதற்கு தேவையான தொழில்நுட்ப பணியாளர்கள் கிடைப்பது கடினம்.

தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் 33 கரோனா நோய் தொற்றை கண்டுபிடிக்கும் ஆய்வகங்களை தமிழக அரசு திறந்துள்ளது. அந்த ஆய்வகங்களில் வேலை செய்யக்கூடிய தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லை என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதற்கிடையே கரோனா நோய் சிகிச்சையில் தப்பும் தவறுமாக பல முடிவுகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் சிபாரிசின் பேரில் 4 லட்சம் ரேபிட் சோதனை கருவிகளுக்கு தமிழக அரசு ஆர்டர் கொடுத்தது. அதில் 32 ஆயிரம் கருவிகள் தமிழகத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த ரேபிட் சோதனை கருவிகளில் தமிழக முதல்வர் எடப்பாடி, தலைமைச் செயலக அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு கரோனா நோய் தொற்று இருக்கிறதா என சோதனை செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் கரோனா நோய் தொற்று இல்லை என்று ரேபிட் சோதனை கருவி ரிசல்ட் அளித்தது. ஆனால் அந்த ரேபிட் சோதனைக் கருவி கரோனாவை சோதனை செய்வதற்கு தகுதியானது அல்ல என மத்திய அரசு அறிவித்துவிட்டது.

தமிழகத்திற்கு வந்த ரேபிட் கருவிகளுக்கு தமிழக அரசு பணம் கொடுத்துவிட்டது. இந்த ரேபிட் சோதனை கருவிகள் சீனாவிலேயே தவறான முடிவுகளை காட்டியது. அதனால்தான் சீன அரசாங்கம், சீனாவில் கரோனாவே இல்லை என அறிவித்தது. அதன்பிறகு ஏகப்பட்ட புதிய கரோனா நோய் தொற்றுகள் சீனாவில் தெரிய வந்தது. இந்த புதிய கரோனா நோய் தொற்றுக்கள் எல்லாம் ரேபிட் சோதனை கருவியில் நெகட்டிவ் என கரோனா நோய் என காண்பிக்கப்பட்ட சோதனை முடிவுகள்.

 

 

tts



கரோனா நோய் ஒரு நாட்டை முழுமையாக பாதித்து, அந்த நாட்டு மக்கள் அந்த நோயில் இருந்து விடுபட்டவுடன் அவர்களது ரத்தத்தில் கரோனா நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள் தென்படும். அதை இந்த ரேபிட் கருவிகள் மூலம் கண்டுபிடிக்க முடியுமே தவிர, கரோனா நோய் ஆரம்பக்கட்டத்தில் பாதிப்பு ஏற்படுத்துவதை கண்டுபிடிக்க முடியாது. சீன அரசு இந்த கருவியை ஆரம்பக்கட்ட கரோனா நோய் தொற்று நோயாளிகளிடம் பரிசோதித்து தோல்வியடைந்தது. அதைப்பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் தமிழகத்திற்கு அந்த கருவிகளை வாங்க பரிந்துரைத்தது.

தமிழக அரசும் கோடிக்கணக்கான ரூபாயை முப்பது சதவிகித கமிசனுடன் வியாபாரம் பேசி ஆர்டர் கொடுத்தது. இப்பொழுது அந்த கருவிகள் வீணாகிவிட்டது.

ஏற்கனவே இந்த கருவிகளை வாங்க கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு சீன கம்பெனிகளிடம் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் நிர்வாக இயக்குநரான உமாநாத் ஐ.ஏ.எஸ். தலைமையிலான அதிகாரிகள். இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறையோ எந்தெந்த நாடுகளிலிருந்து ரேபிட் கருவிகள் வாங்கப்பட்டதோ அந்த நாடுகளுக்கே அவை திருப்பி அனுப்பப்படும் என அறிவித்துள்ளது. இது வர்த்தக உறவின் அடிப்படையில் எந்தளவு சாத்தியம் என்பது இனிதான் தெரியும்.

கரோனா என்பது ஒரு கருணையற்ற தொற்று வியாதி. அது எந்த சூழ்நிலையிலும் யாருக்கு வேண்டுமானாலும் வரும். கேரளாவில் 29 நாட்கள் கண்காணிப்பில் இருந்த ஒருவருக்கு 29 நாட்கள் கழிந்த பிறகு கரோனா வந்ததிருக்கிறது. அதேபோல் ஒரு பெண்ணிற்கு பல நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகும் கரோனா நோய் தொற்று குணமாகவில்லை. கரோனாவுக்கு எதிராக மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தும் மாத்திரை, கரோனா நோய் குணமானவர்களின் ரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு கிருமிகள் அடங்கிய பிளாஸ்மா இவற்றுடன் நுரையீரலில் தண்ணீர் தங்கி மரணம் அடைந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க உபயோகப்படுத்திய sepsis எதிர்ப்பு மருந்து என பலவற்றை மருத்துவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் ஊரடங்கு காலம் முடிந்தவுடன் இந்தியாவில் நோய் தொற்று மிக அதிகமாக அதிகரிக்கும். அந்த நேரத்தில் இன்று கரோனாவை கட்டுப்படுத்தி வைத்துள்ள கேரளம் உள்பட எந்த மாநிலமும் அதன் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

ஊரடங்கு காலம் முடிவதற்கு முன்பே கரோனா தொற்றை கண்டுபிடித்து அழித்துவிட வேண்டும் என கேரளா அரசு கரோனா நோய் தொடர்பே இல்லாத மக்கள் மத்தியில் கரோனா நோய் தொற்று சோதனைகளை வேகமாக நடத்தி வருகிறது. ஆனால் தமிழக அரசு சோதனை செய்யக்கூட போதிய தொழில்நுட்ப பணியாளர்கள் கூட இல்லாமல் திணறி வருகிறது.

ஊடகத்தினர் மீதான நோய்த்தொற்று, தமிழக அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான கேள்விகளை அதிகளவில் எழுப்புகிறது. முதல்வர், அமைச்சர், உள்துறைச் செயலாளர், தலைமைச் செயலாளர் என மீடியா வெளிச்சத்துக்காகப் போட்டி போட்டுக் கொண்டு நேரலைக்காக பேட்டி அளித்தபோதே, டி.எம்.எஸ். வளாகத்தில் நோய்த் தொற்று இருப்பது குறித்து ஊடகத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். அதையும் மீறி, தொடர்ச்சியாக பேட்டிகள் அளிக்கப்பட்டன.

 

ிு



தமிழகத்தில் பெரும்பாலான தொற்று, டெல்லி மாநாட்டின் ஒற்றை சோர்ஸ் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அந்த சோர்ஸ்களுடன் எவ்வகையிலும் தொடர்பில்லாத ஊடகத்தினருக்கும், மதுரை பட்டர் குடும்பத்திற்கும் நோய்த் தொற்று வந்திருப்பது தமிழக அரசின் கவனக் குறைவுகளை வெளிப்படுத்துவதாகவே உள்ளது என்கிறார்கள் விவரமறிந்த மருத்துவர்கள்.

இந்த நிலையில் கரோனா நோய் தொற்று பரவல் மூன்றாம் கட்டமான சமூக தொற்றாக மாறி பரவி வருவதால் அதை கட்டுப்படுத்த பல மாவட்டங்களில் மெடிக்கல் ஷாப்புகளை தவிர அனைத்துக் கடைகளையும் மூடி முழு ஊரடங்கை மூன்று நாட்களுக்கு அறிவித்துள்ளது. இதெல்லாம் போதாது, கேரள அரசைப் போல மக்கள் மத்தியில் களம் இறங்கி தீவிரமான சோதனைகளை நடத்தினால்தான் கரோனா நோயாளிகளையும், அவர்கள் மூலமாக தொற்றுக்கு உள்ளானவர்களையும் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள் நேர்மையான சுகாதாரத்துறை அதிகாரிகள்.

 

Next Story

வீடு தேடி வந்த வாக்கு இயந்திரம்; வாக்களித்த 111 வயது மூதாட்டி

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று(19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில் கேரளாவில் மூதாட்டி ஒருவரின் வாக்கைப் பெறுவதற்காக வாக்கு இயந்திரம் வீட்டுக்கே கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது வெள்ளிக் கோத்து கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் குப்பச்சி அம்மா(111 வயது) தள்ளாடும் வயதில் தன்னுடைய வாக்கைச் செலுத்த முடியாமல் குப்பச்சி அம்மா தவித்து வந்தார். இதனால் அவருடைய வாக்கைப் பதிவு செய்வதற்காக தேர்தல் அலுவலர்கள் சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்திருந்தனர்.

அதன்படி காஞ்சங்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளராக உள்ள குப்பச்சி அம்மாவின் வீட்டுக்கே தேர்தல் அலுவலர்கள் வாக்கு இயந்திரத்தை எடுத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் தலைமையில் வீட்டுக்குள்ளேயே தற்காலிகமாக வாக்குச்சாவடி மையம் அமைத்து அவருடைய வாக்கை பதிவு செய்தனர். குப்பச்சி அம்மா தன்னுடைய வாக்கை பதிவு செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் அவருக்கு மலர் கொத்து மற்றும் நினைவு பரிசு வழங்கினார். 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.