Skip to main content

ஆத்தாடி அடுத்த விளம்பரம் ரெடியாகிக்கிட்டு இருக்குமே!!!

Published on 29/05/2018 | Edited on 29/05/2018

ஸ்டெர்லைட் போராட்ட வெற்றி - 102 நாட்கள் போராட்டத்தாலும், 13 உயிரிழப்புகளாலும் (அவர்கள் கணக்குப்படி), பலரின் இரத்தத்தாலும் கிடைத்த வெற்றி. மக்களுக்கு முற்றிலும் எதிராகதான் இந்த அரசு.  உண்மையை சொன்னால் அரசு நெருக்கடி நிலையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் இவர்கள் இன்றைக்கு அவர்கள்தான் எல்லாமே செய்ததுபோல செய்திகளையும், விளம்பரங்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். இதுமட்டுமல்ல மாண்புமிகு, இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லரசு ஸ்டெர்லைட் பிரச்சனையை சிறப்பாக கையாண்டு, மக்களின் நலனுக்காக ஸ்டெர்லைட் ஆலையை மூடியது என்றோ, அந்தக் கடவுள்தான் நம்ம முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஐயா ரூபத்துல வந்து காப்பாற்றி இருக்காங்க என்றோ ஒரு அரசு விளம்பரத்தையும்கூட இயக்க தொடங்கியிருப்பார்கள்.

 

eps

 

 

 

இதற்குமுன் நடந்த பல பிரச்சனைகள், போராட்டத்தின்போதும்கூட அரசு மக்களுக்கு எதிராகவே இருந்தது. ஆனால் அதைப்பற்றிவந்த அரசு விளம்பரங்களிலெல்லாம் உண்மையை மறைத்து பொய்யாலும், புரட்டுகளாலான ஒரு விளம்பரத்தை தயாரித்து வெளியிட்டனர். ஒகி புயலின்போது இந்த அரசு மேற்கொண்ட பராமரிப்பு பணிகளை பற்றியும் ஊர் அறியும். ஆனால் இவர்கள் தாங்கள்தான் ஒகி புயலில் இருந்து மக்களை காப்பாற்றியதுபோல் விளம்பரத்தை வெளியிட்டனர். இது பார்க்கும் அனைவரையும் கோபமடைய வைத்தது. அங்கு அத்தனை உயிர்கள் பலியானது, இன்றும் கூட பலரின் நிலை என்ன என்று தெரியாமல் இருக்கிறது. ஆனால் இவர்கள் இந்த அரசு விளம்பரத்தின்மூலம் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். 

 

 


ஜல்லிக்கட்டு போராட்டம் மக்கள் எழுச்சியாக நடைபெற்ற ஒன்று. 15 நாட்கள் யார், எவரென்று தெரியாதவர்கள் பலர் ஒன்று சேர்ந்து ஒரு குரலாய் ஒலித்த போராட்டம். ஒரு போராட்டம் எப்படி ஒழுக்கமாய், சுயகட்டுப்பாட்டுடன் நடக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் நின்ற போராட்டம். ஆனால் கடைசி நாளில் அதை கலவரம் என்று அடித்து விரட்டினர். ஆனால் அதைப்பற்றி வந்த அரசு விளம்பரத்தில் இவர்கள்தான் ஜல்லிக்கட்டு உரிமையை போராடி தந்ததுபோல் விளம்பரம் போட்டுக்கொண்டார்கள். 

 

 


மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது(!!!) ‘நம்ம ஐயா எடப்பாடி பழனிசாமிதான்’ என்ற விளம்பரம். அந்த விளம்பரம் வெந்த  புண்ணில் கடப்பாறையை விட்டு ஆட்டுவது போல இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்குகளுக்கு சென்றவர்களுக்கு அந்த விளம்பரம் நவரசத்தையும் தூண்டியது, சிலர் முடியலடா சாமி என்ற நிலைக்கு வந்தனர். அந்த விளம்பரத்திற்கு வந்த எதிர்ப்பைக் கண்டு அவர்களே அதை நிறுத்திக்கொண்டார்கள். குறுக்குவழியில் ஐஸ் வைத்து, ஐஸ் வைத்து தான் நினைத்ததை சாதித்துக்கொள்ளும் ஆட்கள் இருக்கும்வரை இந்தமாதிரியான விளம்பரங்கள் வரத்தான் செய்யும். அதைவிடுங்க நேற்று ரஜினி காலா ட்ரைலருக்கு முன்பு ஸ்டெர்லைட் பூட்டப்பட்டதற்கு வெளியிட்ட மாதிரி, காலா படத்துக்கு முன்னாடி தீவிரவாதிகளின் கையில் இருந்து தூத்துக்குடி மக்களை காத்த எடப்பாடி அப்படினு விளம்பரம் வந்தாலும் வரும் பாத்து பத்தரமா போங்க....

 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.