Skip to main content

இரண்டு ஆண்டுகளில் உதயமான ஆறு மாவட்டங்கள்... தமிழ்நாடு மாவட்டங்களின் வரலாறு!

Published on 28/12/2020 | Edited on 28/12/2020

 

mayiladuthurai

 

 

நம்முடைய சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை அலுவலகத்தில் சந்திக்கும்போதோ அல்லது வேறு எங்காவது எதர்ச்சையாக சந்திக்கும்போதோ நம்மையே அறியாத ஒரு நல்ல உணர்வு கிடைக்கும். குறிப்பாக ஊரைவிட்டு வெளியூரில் அல்லது வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு அந்த தருணம் அவர்களின் சொந்த ஊருக்கே அழைத்து சென்றுவிடும். சுதந்திரத்திற்கு பின்னான அப்போதைய தமிழகம் முதலில் 13 மாவட்டங்களை கொண்ட மாநிலமாக இருந்தது. அதன்பின் மக்களின் தேவை, காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து புதுப் புது மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. மதராஸ் மாகாணம் எப்படி மதராஸ் மாநிலமாக மாறி 1969ஆம் ஆண்டில் தமிழ்நாடு என மாறியதற்கு காரணம் இருந்ததைப்போல, மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்கு காரணம் இருந்ததைப்போல மாவட்டங்கள் பிரிப்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது, மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுதும் நிர்வாகம் செய்வதும் எளிதாகும். அந்த வகையில் தற்போது நாகப்பட்டினத்திலிருந்து மயிலாடுதுறை 38வது மாவட்டமாக உதயமாவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே மயிலாடுதுறையை மாவட்டமாக பிரிக்க இருப்பதாகவும், அதற்காக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளையும் நியமித்திருந்த நிலையில் நேற்றிலிருந்து அதிகாரப்பூர்வமாக மாவட்டமானது மயிலாடுதுறை. 

 

ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைத்தபோது மதராஸ் மாநிலத்திலிருந்த மாவட்டங்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 13 மாவட்டங்கள்தான். மெட்ராஸ், செங்கல்பட்டு, நார்த் ஆர்காடு, சவுத் ஆர்காடு, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாநிலங்கள்தான் அவை. இதனைதொடர்ந்துதான் 13 மாவட்டங்களாக இருந்தது, ஒவ்வொரு காலகட்டத்திலும் பிரிக்கப்பட்டு தற்போது 38 மாவட்டங்களாக மாறியிருக்கிறது. 

 

இந்த 13 மாவட்டங்களை அடுத்து முதன் முதலாக பிரிந்த மாவட்டம் என்றால் சேலம் மாவட்டம்தான். 1966ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்திலிருந்து சேலம் மாவட்டம் தனியாக பிரிந்தது.

 

தற்போது திருச்சியிலிருந்து மூன்று மாவட்டங்கள் பிரிந்துள்ளது. இதில் முதன் முதலாக பிரிந்த மாவட்டம் புதுக்கோட்டை. இது 1974 தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

 

1979ஆம் ஆண்டு கோயம்பத்தூரிலிருந்து பிரிக்கப்பட்டது ஈரோடு.

 

1985ஆம் ஆண்டு  மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. இதே ஆண்டில் மதுரையிலிருந்து திண்டுக்கல் பிரிக்கப்பட்டுள்ளது.

 

1986ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி பிரிக்கப்பட்டது.

 

1989ஆம் ஆண்டில் வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை, வெல்லூர் என்று இரு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.

 

1991ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து நாகப்பட்டினம் பிரிக்கப்பட்டது. பின்னர் 1996ஆம் ஆண்டில் நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது.

 

1993ஆம் ஆண்டில்தான் தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் என்று இரண்டு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.

 

1995ஆம் ஆண்டில் திருச்சியிலிருந்து கரூர் மற்றும் பெரம்பலூர் என மேலும் இரண்டு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.

 

1996ஆம் ஆண்டில் மதுரையிலிருந்து தேனி பிரிக்கப்பட்டது.

 

1997ல் சேலத்திலிருந்து நாமக்கல் பிரிக்கப்பட்டது.

 

2004ல் தர்மபுரியிலிருந்து கிருஷ்ணகிரி பிரிக்கப்பட்டது.

 

2007ல் பெரம்பலூரிலிருந்து அரியலூர் பிரிக்கப்பட்டது.

 

2009ல் கோயம்புத்தூர் மற்றும் ஈரோட்டிலிருந்து திருப்பூர் என்ற மாவட்டம் உருவாக்கப்பட்டது.

 

2019ஆம் ஆண்டு தொடக்கத்தில் விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. ஆண்டின் இறுதியில் மேலும் நான்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. திருநெல்வேலியிலிருந்து தென்காசி, காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு, வேலூரிலிருந்து ராணிப்பேட்டை மற்றும் திருபத்தூர் என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. 

 

நேற்று தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக நாகப்பட்டினத்திலிருந்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. இது மயிலாடுதுறை மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையாகும். 

 

 

Next Story

ஆதினத்துக்கு மிரட்டல்; பள்ளி தாளாளரின் ஜாமீன் மனுவில் நீதிமன்றம் அதிரடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி (21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த மார்ச் 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில் ‘அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையைக் கடந்த 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். 

The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தனக்கு சர்க்கரை நோய், இருதய பாதிப்பு இருப்பதால், தொடர்ந்து சிறையில் இருந்தால் உடல்நிலை பாதிக்கப்படும். எனவே, நிபந்தனை ஜாமீன் பேரில் என்னை விடுவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு இன்று (24-04-24) வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ‘இந்த வழக்கு தொடர்பான புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, பள்ளி தாளாளர் குடியரசுவை ஜாமீனில் விடுவிக்க கூடாது’ எனக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி தமிழ்ச்செல்வி, குடியரசுவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.