Skip to main content

தூத்துக்குடியில் தமிழிசை எடுத்துள்ள புதிய ஆயுதம்!

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியானது தமிழகமே உற்று நோக்கும் ஒரு  சிறப்புமிக்க தொகுதியாக அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது. 

 

tamilisai's new strategy for loksabha election

 

இங்கு பிஜேபி, திமுக, அமமுக மற்றும் சுயேட்சைகள் உட்பட 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் கட்சிகளுக்கிடையே பலமுனை போட்டியாக இருந்தாலும் தற்போதைய நிலவரப்படி தூத்துக்குடி தொகுதி இருமுனை போட்டியாக உள்ளது.
 

திமுக வேட்பாளர் கனிமொழி தனது முதற்கட்ட பிரச்சாரங்களை கிராமப்புறங்களில், பல்வேறு செயல்திட்டங்களை நிறைவேற்றுவதாக கூறி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அமமுக வேட்பாளர் புவனேஸ்வரனின் பிரச்சாரமானது தினகரனின் மீதான செல்வாக்கு, அமமுகவின் கட்சி பிரமுகர்களின் மூலமாகவே தனக்கான வாக்கு என தனியொரு பாணியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
 

நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் பெரிய அளவில் இன்னும் தேர்தல் களத்தை அணுகவில்லை. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க பிஜேபி கட்சி வேட்பாளர் தமிழிசை முதற்கட்டமாக அதிமுக கட்சி மாவட்ட பொறுப்பாளர்களை ஒருங்கிணைப்பு, சமாதானம்  செய்யும் பணிகளையே செய்து வருகிறார்.
 

காரணம் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓபிஎஸ் விசுவாசி சண்முகநாதன் மாவட்ட செயலாளராக உள்ள நிலையில் செல்லப்பாண்டியன், கடம்பூர் ராஜூ போன்ற கட்சி பிரமுகர்கள் தனக்கானவாக்குகளை பெற முயற்சிப்பார்களா என்கிற சந்தேகம் தமிழிசை மத்தியில் எழ தொடங்கி உள்ளது.
 

தூத்துக்குடியில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம் என கூட்டணியில் உள்ள கட்சிகளில் செல்வாக்கு குறைந்து உள்ள சூழலில், கடந்த 2014ல் தூத்துக்குடியில் அதிமுக  பெற்ற 3,66,056 வாக்குகளை மீண்டும் பெற்று விட வேண்டும் என்ற கன(நினை)வில் இருந்தாலும் மிகப்பெரிய சந்தேகக் கண்ணோட்டம் இருந்து கொண்டே இருக்கிறது, தமிழிசை மற்றும் பிஜேபியினர் மத்தியில்.

 

தூத்துக்குடி மாவட்டத்தில் நாடார் சமூகத்தினர் வாக்கு வங்கியானது 32% உள்ளது. மேலும் இந்துகளின் வாக்கு சதவிகிதமானது 78.50% ஆகும். தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி பிரிக்கப்படுவதற்கு முன்பு திருச்செந்தூர் தொகுதியாக இருந்தபோது அதில் வென்ற நாடார் சமூகத்தைச் சேர்ந்த  ராதிகாசெல்விக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது திமுக ஆட்சிக்காலத்தில்தான். அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உள்ளது திமுக கட்சி. இதுவும் கனிமொழிக்கு கூடுதல் நம்பிக்கையை பெற்றுத் தந்துள்ளது. இதனால் பிஜேபி வேட்பாளர் தமிழிசையின் தூத்துக்குடியில் பெரும் சவால் உள்ளது என்பதே பல அரசியல் விமர்சர்களின் கருத்தாக உள்ளது. இதனால் தூத்துக்குடி தொகுதியில் பெரும்பான்மையான வாக்குடைய மக்களுடன் தன்னை நெருக்கமாகக் காட்டும் விதமாக "நான் பனங்காட்டுக்காரி", "நான் கற்றப்பரம்பரை குற்றப்பரம்பரை இல்லை" என்று பேசும் யுக்தியை செயல்படுத்துகிறார். இந்த யுக்தி வெற்றி பெறுமா என்பது விரைவில் நமக்குத் தெரிய வரும்.

 

 

 

 

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைபிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.