Skip to main content

"அமித்ஷா கூறியது போல பக்கோடா விற்க வெங்காயம் கூட இப்போது வாங்க முடியாது.." - தமிழன் பிரசன்னா அதிரடி பேட்டி!

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக திமுக-வை சேர்ந்த தமிழன் பிரசன்னாவிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

jk




மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தை எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

தனது சொந்த நாட்டு மக்களை பிரிக்க, ஆர்எஸ்எஸ்ஸின் கோல்வாக்கர் கொள்கையை புகுத்தி அவர்களை தனிமைப்படுத்த கொண்டுவரப்பட்டதுதான் குடியுரிமை திருத்த சட்டம். காலங்காலமாக இந்த மண்ணில் இருப்பவர்களை அழித்தொழிக்க இந்த பாசிசி மத்திய அரசால் இந்த சட்டம் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்றைக்கு போராடும் மாணவர்கள் மீது கண்மூடி தனமான தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் வாகனங்களை கொளுத்தி தீவைக்கிறார்கள். அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் தற்போது வெளிவந்துள்ளது. காவல்துறையினர்தான் கொளுத்தினார்கள் என்பதை நாமும் கூட வீடியோக்களில் பார்த்தோம். இது அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையா? இன்று முஸ்லிம் மாணவர்கள் மட்டும் தான் போராட்டத்தில் ஈடுபடுகிறார்களா என்றால், அனைத்து சமூதாயத்தை சேர்ந்தவர்களும் போராடுகிறார்கள். நான் இந்த அரசாங்கத்தை பார்த்து ஒன்றுதான் கேட்க விரும்புகிறேன். 

மக்கள் எங்களுக்கு பெரும்பான்மை பலத்தை கொடுத்துள்ளார்கள், நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்று அமித்ஷா கூறுகிறார். தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்று கூறினார்கள். அவ்வாறு கூறியவாறு நிறைவேற்றினார்களா? நம் நாட்டு இளைஞர்கள் அரசாங்க வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்க கூடாது என்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சொன்னார்கள். ஆனால் உங்கள் ஆட்சியில் பக்கோடா போடுவதற்கு வெங்காயம் வாங்க கூட முடியவில்லை. வெங்காய விலை உச்சத்தில் இருக்கிறது. இந்த லட்சணத்தில் அவர்களின் ஆட்சி செயல்பட்டு வருகிறது. பொருளாதாரம் சரிந்திருக்கிறது, மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது, மாடுகளை விட மனிதன் மதிப்பு குறைந்திருக்கிறது, சாதிய ரீதியான பிளவுகள் அதிகரித்துள்ளது. மத ரீதியான பிளவு உச்சத்தில் இருக்கிறது. இவற்றை எல்லாம் சரி செய்வதை விட்டுவிட்டு அவர்களுடைய ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நாட்டில் உள்ள மக்களிடம் திணிக்க பார்க்கிறார்கள். 

இந்த குற்றச்சாட்டுக்களை நீங்கள் தொடர்ந்து முன் வைத்துக் பேசியபோதுதான், அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் முன்பை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றார்களே?

அவர்கள் பெரும்பான்மை பெற்றிருக்கலாம், ஆனால் அதற்காக அவர்கள் மேற்கொண்ட உக்திகளை பற்றி பேசாமல் இருக்க முடியாது. மவுண்ட் பேட்டன் காலத்தில் செய்த பிரித்தாலும் சூழ்ச்சியை செய்து இந்த வெற்றியை பெற்றுள்ளார்கள். அவர்கள் பெரும்பான்மை பெற்றிருந்தாலும் வாக்கு சதவீதத்தை கவனிக்க வேண்டும்.  கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக இந்தியாவிலேயே அதிக அளவு வாக்கு சதவீதம் வாங்கி வெற்றிபெற்றது. ஆனால் பாசிசி பாஜக வாங்கிய வாக்கு சதவீதம் என்பது 32 என்ற அளவில்தான் உள்ளது. இந்த வாக்கு சதவீதத்தில் தான் அவர்கள் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த மோடி நாட்டுக்கு கேடு என்று நாங்கள்தான் சொன்னோம், இந்த அமித்ஷா நாட்டுக்கு கேடு என்று நாங்கள்தான் சொன்னோம், இந்த பாஜக நாட்டை துண்டாடுகிறது என்று நாங்கள்தான் முதலில் சொன்னோம். இப்போது இயற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் எவ்வாறு புரிந்து வைத்துள்ளார்கள என்று கேள்வி எனக்குள் வருகிறது. அவர்களுக்கு அம்பேத்காரின் வழியில் இதற்கான விளக்கத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டியது நம்முடைய கடமையாக நான் பார்க்கிறேன்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் முதலிய நாடுகளில் உள்ள இந்துக்களுக்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறுவதை பற்றி?

பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் தாக்கப்படுவதாக இவர்கள் கூறுகிறார்கள், இந்தியா என்பது ஒருதாய் மக்களை கொண்ட நாடு. இவர் இந்து என்றோ. முஸ்லிம் என்றோ, கிருஸ்துவர் என்றோ பிரிக்க மாட்டார்கள். இந்தியாவில் மத ரீதியாக யாரும் யாரையும் பிரித்து பார்க்கவில்லை. இந்தியவின் அடையாளம் என்ன, மற்ற நாடுகளை போல மத அடையாளமா, அப்படி இல்லையே. அமெரிக்கா கிருஸ்துவ நாடு, பாகிஸ்தான் முஸ்லிம் நாடு, நேபாளம் இந்து நாடு. ஆனால், இந்தியா மதச்சார்பற்ற நாடு. இதை இந்திய அரசியல் அமைப்பே மிகத் தெளிவாக கூறியிருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியா என உலக நாடுகளில் இருந்து இந்தியா வேறுபட்டு இருக்கிறது. படேலுக்கு சிலை வைத்தால் மட்டுமே போதாது. அவர் கூறியவற்றை செயல்படுத்த வேண்டும். இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களும் இதே மண்ணை சேர்ந்தவன்தான் என்று அவர் கூறியதை மட்டும் ஏன் நடை முறைபடுத்தமாட்டேன் என்கிறார்கள்.

 

 

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.