Tamil poem about hathras uttarpradesh incident

எந்த மிருகம் எப்போது பாயும்

Advertisment

எதுவும் புரிய வில்லை -இங்கு

எவனுரு வத்தில் எங்கள் மரணம்

அதுவும் தெரிய வில்லை.

Advertisment

சொந்த ஊரெனும் சுதந்திரம் கூட

எமக்குக் கிடைக்க வில்லை;

சுடரும் விழியில் பெருகும் நீரை

வாழ்க்கைத் துடைக்க வில்லை.

உடம்பெனும் ஒன்றைப் பெற்றது தவிர

வேறென்ன தவறு செய்தோம்-அதில்

உயிரும் உணர்வும் தரித்தது தவிர

வேறென்ன தவறு செய்தோம்?

படிப்பதும் பணிக்குச் செல்வதும் தவிர

வேறென்ன தவறு செய்தோம்?-உமை

நம்பிப் பிறந்து வளர்ந்தது தவிர

வேறென்ன தவறு செய்தோம்!

உடல்வெறி கொண்டு உலவிடு வோரின்

இதயம் தசையா இரும்பா?-அவர்

உயிரைக் கிழித்துச் சாறு பிழிய

எம்முடல் உணர்வறு கரும்பா?

Ad

அடங்கா ஆசை என்னும் பெயரில்

ஆவி பறிப்பதும் தகுமா?-இந்த

அவலம் தொடரின் எம்முளத் தீயிடம்

உலகின் சாம்பலும் மிகுமா?