Skip to main content

தேர்தல் களத்தில் ஜெயிக்கப் போவது மருமகனா? மகனா? மகளா? -கரோனாவை மீறிய பரபர அரசியல்!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020
tamil nadu assembly



கரோனா தாக்கத்தில் நாடே அல்லோகல்லோகப்பட்டிருக்கும் சூழலிலும் தேர்தலை மையப்படுத்தி காய்களை நகர்த்தும் அரசியல், திரைமறைவில் நடந்துகொண்டுதானிருக்கின்றன. இதற்காக உருவாக்கப்படும் தேர்தல் வியூகங்களில் அரசியல் ஆலோசகர்கள் பலரும் சத்தமில்லாமல் இயங்கி கொண்டிருக்கின்றனர். 

                   
தமிழக தேர்தல் களம் கார்ப்பரேட் மயமாகிவிட்ட நிலையில் பிரதான கட்சிகள் துவங்கி, புதிதாக கட்சி துவங்கும் பிரபலங்கள் வரை தேர்தல் வியூக வகுப்பாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தொடர்கதையாகி விட்டது. குறிப்பாக, சமூக வலைதளங்கள், ஊடக தளங்கள், இணையவழி தளங்கள் மூலமாக மக்களிடம் ட்ரெண்டிங் உருவாக்கும் வேகம் சத்தமில்லாமல் அதிகரித்து வருகிறது. திரைமறைவில் நடக்கும் இத்தகைய போட்டிகளில் ஜெயிக்கப்போவது யார்? மருமகனா? மகனா? மகளா? என்கிற பந்தயம் தமிழக அரசியலில் சூடு பிடித்திருக்கிறது. 

கரோனா விவகாரத்தால் பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ள நிலையில் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி திமுகவினரை அரசியல் ரீதியாக எப்படி செயலாற்ற வைப்பது என்கிற வியூகத்தை வகுத்து தந்து வருகிறது பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக். அவர்களின் வழிகாட்டுதல்கள்படியே ஒவ்வொரு மூவ்களையும் திட்டமிடுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 

  dmk



ஸ்டாலினின் மனசாட்சியாக இயங்கும் அவரது மருமகன் சபரீசனின் கண் அசைவில் பெரும்பாலான அரசியல் வியூகங்கள் மெருகேற்றப்பட்டு ஐ-பேக் வழியாக திமுகவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்கிறார்கள் திமுகவின் சீனியர்கள். அந்த வகையில், சட்டமன்ற தேர்தலை குறி வைத்து திமுகவின் வெற்றிக்கான செயல்திட்டங்களில் தீவிரமாக கவனம் செலுத்துகிறார் சபரீசன். 

ஸ்டாலினின் அத்தனை அரசியல் மூவ்களிலும் சபரீசனின் பங்களிப்பு இருக்கும் சூழலில், ஸ்டாலின் மருமகனின் வியூகங்களை வீழ்த்த அதிமுகவில் மற்றொரு அரசியல் வாரிசு களமிறங்கியுள்ளது. அதிமுகவின் சூத்திரதாரியாக உருவெடுக்க களமிறங்கியிருக்கும் அவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன் ! 


“முதல்வர் எடப்பாடி பழனிசாமியை  மக்களிடம் உயர்த்திப் பிடிக்கவும், தேர்தல் களம் உருவாகும் போது சபரீசனின் வியூகத்தை முறியடிக்கவும் மிக அமைதியாக, மிக ரகசியமாக காய்களை நகர்த்தி வருகிறார் மிதுன். தேர்தல் வியூக வகுப்பாளர்கள், அரசியல் ஆலோசகர்கள் என பிரபல நிறுவனத்தின் உதவியை திமுக பெற்றிருக்கும் நிலையில், திமுகவை போல ஒரு ஏஜென்சியை அதிமுகவுக்கு அதிகாரப்பூர்வமாக நியமிக்க விருப்பமில்லாமல் தேர்தல் வியூகம் வகுக்கும் கலையை கற்று வர அப்பாவின் (எடப்பாடி பழனிசாமி) ஆசியுடன்  கடந்த வருடம் டெல்லிக்கு பறந்தார் மிதுன்.    

பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டி.வி.க்காக தேர்தல் கணிப்புகளை நடத்தும் சர்வே நிபுணரும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நண்பருமான டெல்லியை சேர்ந்த பிரதீப் பண்டாரியை அணுகினார் மிதுன். 

அவரிடம் பல நுணுக்கங்களை கற்றுக்கொண்ட மிதுன், பண்டாரியின் டீமை அதிமுகவுக்காக தனது மேற்பார்வையில் நியமித்துக்கொண்டார். 


                              

admk



மிதுன் தலைமையிலான அந்த டீம், அதிமுக கட்சி மற்றும் எடப்பாடி தலைமையிலான அரசு  ஆகிய இரண்டு விசயத்தில் மக்களின் மன ஓட்டங்களை கணிக்கும் பணியில் இறங்கியது. அந்த ரிப்போர்ட் தற்போது மிதுனின் கைகளில் இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, சமூக ஊடக நிபுணர்கள், சமூக வலைதள வல்லுனர்கள் உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த அரசியல் விமர்சகர்கள் அடங்கிய ஒரு டீமை தனது தலைமையில் உருவாக்கியிருக்கிறார் மிதுன். இதில், இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலரும் ஆலோசகர்களாக இருக்கின்றனர்.   

இதற்கிடையே, தேர்தல் வியூக நிபுணர் சுனில், அதிமுகவுக்காக எடப்பாடியை அணுகியிருக்கிறார். மிதுனின் தலைமையில் இவர் செயல்படக்கூடும்” என்று அதிமுகவின் மேலிட தொடர்புகளில் எதிரொலிக்கின்றன. எடப்பாடியின் வெளிநாட்டு பயணத்தில் அவர் கோட்-சூட் அணிந்தது, தமிழக விவசாய கெட்-அப், டிவிட்டரில் எடப்பாடியின் தற்போதைய அவதாரம் அனைத்தும் மிதுன் தலைமையிலான டீமின் கைங்கரியம் என்கின்றனர்.  அதிமுக ஐ.டி.விங்கில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரின் துணையுடன்  முதல்வர் எடப்பாடியின் டிவிட்டர் பக்கங்களை ஆப்பரேட் செய்யத் துவங்கி சோசியல் மீடியாக்களில் அவரது இமேஜை உயர்த்தி வருகிறது மிதுன் தலமையிலான டீம்! இதன் பின்னணியில் இதுவரை எந்த ஒரு அரசியல் ஆலோசகரும் இல்லை. கரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த முதல்வர் எடப்பாடி எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் அரசின் பல்வேறு துறைகள் சார்ந்த பணிகளையும் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யும் டீமின் சூத்திரதாரியாக திரைமறைவில் இயங்கி வருகிறார் மிதுன்.  ஆக, தேர்தல் நேரத்தில் அதிமுகவின் வெற்றிக்காக மிதுனின் குழுவினர் தற்போதிலிருந்தே காய்களை நகர்த்தி வருகின்றனர். 
                            

திமுக - அதிமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளின் முறையே தேர்தல் வியூகங்களை திட்டமிட மருமகன், மகன் ஆகிய இருவரும் மறைமுகமாக  இயங்கி வரும் நிலையில், தமிழக தேர்தல் அரசியலை தனது அப்பா ரஜினி எதிர்கொள்ள அவரது மகள் சௌந்தர்யா சத்தமில்லாமல் செயல்படத் துவங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ரஜினியின் அரசியல் பிரவேசத்தை அதீத ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கும் அவரது மகள் சௌந்தர்யா,  ரஜினிக்காக பிரத்யேகமான அரசியல் வியூக மற்றும் சமூக ஊடக டீம் ஒன்றை உருவாக்கி அதனை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் வியூக வல்லுனர்கள் மத்தியில் விவாதிக்கப்படுகிறது.      

 

rajini


                           

ரஜினிக்காக தேர்தல் வியூக வகுப்பாளர்கள், அரசியல் ஆலோசகர்கள், சமூக ஊடக நிபுணர்கள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என பலரும் பணியாற்ற ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அவர்களை செப்டம்பரில் களமிறக்கும் ஏற்பாடுகளை சௌந்தர்யா முன்னெடுப்பதாகவும் தேர்தல் ஆலோசகர்கள் மத்தியில் பரபரப்பாக எதிரொலிக்கிறது.              

இந்த நிலையில்தான், கரோனா தாக்கத்தையும் மீறி தேர்தல் களத்தில் ஜெயிக்கப்போவது மருமகனா? மகனா? மகளா? என்கிற விவாதங்கள் தமிழக மேல் மட்ட அரசியலில் கொடி கட்டிப்பறக்கின்றன!


 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.