Skip to main content

அப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு! 

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

மக்கள் பாதை முப்பெரும் விழா மூலம் நேர்மை நாயகர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சகாயம் ஐஏஎஸ், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு, தமிழ் சினிமா இயக்குனர்கள் ராஜு முருகன், அமீர், தங்கர் பச்சன் மற்றும் நடிகரும், இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசும் போது, நான் இந்த சினிமா உலகில் 1981 ஆம் ஆண்டிலிருந்து ஒரு 40 வருட காலம் சினிமா உலகில் இருக்கிறேன். 

 

director



எனது படங்கள் மூலம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை கூறி வருகிறேன். மதவாதிகள் செய்கின்ற தவறுகள், எந்த மதவாதிகள் செய்கின்ற தவறாக இருந்தாலும், அரசியல்வாதிகள் செய்கின்ற தவறாக இருந்தாலும், அதிகாரிகள் செய்கின்ற தவறாக இருந்தாலும் என் படத்தின் மூலம் தவறை எடுத்து காட்டி அந்த ஊழல் அதிகாரிகளையும், அரசியவாதிகளையும் மாற்ற முயற்சி செய்துள்ளேன். ஆனால் தற்போது நினைக்கிறேன் அது முடியாத காரியம் என்று, மேலும் சரி செய்ய வேண்டியது இன்றைக்கு இருக்கும் இளைஞர்களை என்று கூறினார். நான் முதல் முறையாக சகாயம் அவர்களை வீட்டில் சந்திக்கும் போது சொன்னேன் நீங்கள் தான் ரியல் ஹீரோ. படத்தில் நடிப்பவர்கள் எல்லாம் பொம்மை ஹீரோக்கள் நீங்க தான் ரியல் ஹீரோ என்று தெரிவித்தேன். அதற்கு சகாயம் அவர்கள் நான் அப்படி எல்லாம் இல்லை, நான் ஒரு நேர்மையான அதிகாரி அவ்வளவு தான் என்று சகாயம் கூறினார்கள். 

 

meeting



தொடர்ந்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், எந்த ஒரு அதிகாரியும் அப்படி கட்டிலை போட்டு சுடுகாட்டில் படுக்க முடியுமா? ஆனால் அதை சகாயம் செய்தார்கள். அதற்கு ஒரே காரணம் நேர்மை என்று கூறினார். படத்தில் ஒரு ஹீரோ 100 பேரை அடிப்பார்கள். கையில் ஆயுதம் வைத்து கொண்டு சண்டை போடுவார்கள். ஆனால் நேர்மை என்ற ஒரு ஆயுதத்தை வைத்து கொண்டு அந்த இடத்தில படுத்தவர். ஏன் தமிழகத்தை வழிநடத்தக் கூடாது என்று யோசித்தேன் என்று இயக்குனர் சந்திரசேகர் பேசினார்.


மேலும் இன்றைய இளைஞர்கள் லஞ்சம் கொடுக்காமல் நேர்மையாக நெஞ்சை நிமித்தி நடக்க வேண்டும் என்று கூறினார். எந்த ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும், பெரிய விஷயமாக இருந்தாலும் லஞ்சம் கொடுக்காமல் இருந்து பழகி பாருங்கள். அதை நடைமுறை படுத்துவது கஷ்டம் தான் இருந்தாலும் செய்து பாருங்கள் பின்பு நெஞ்சை நிமித்தி நடங்கள் இது தான் எனக்கு தோன்றுகிறது என்று கூறினார்.ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள் லஞ்சம் வாங்குபவர்களை குறை கூறாமல், லஞ்சம் கொடுக்காமல் இருந்து பாருங்கள் என்று கூறினார். மேலும் ஒரு தலைவன் வந்து பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்றும் நினைக்கவில்லை. ஆனால் தொண்டர்கள் நினைத்தால் முடியும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

தேசிய விருது வென்ற மூத்த இயக்குநர் காலமானார் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
pasi movie director durai passed away

தமிழ் சினிமாவில் கதாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியவர் துரை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 1979 ம் ஆண்டு வெளியான பசி திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. 

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக வெளிப்படுத்தியதாக பாராட்டை பெற்ற இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும் இரண்டு மாநில விருது உட்பட சில விருதுகளையும் வென்றது.  இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் துரை. மேலும் ரஜினியை வைத்து ஆயிரம் ஜென்மங்கள், கமலை வைத்து நீயா, சிவாஜியை வைத்து துணை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் துரை (84) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். துரைக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“சமூகம் எது மாதிரி இருக்கிறதோ அது மாதிரியான படங்கள் தான் வரும்” - ஜியோ பேபி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
joe baby speech at pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் நேற்று இயக்குநர்கள் ஹலிதா ஷமீம், ஜியோ பேபி, தரணி ராஜேந்திரன், பி.எஸ் மித்ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.  

அப்போது, ஜியோ பேபி அவர் இயக்கிய  தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் குறித்து பேசுகையில், “வித்தியாசமான ஜானரில் படமெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் நேரடியாக ஓடிடியில் வெளியான படம். முதலில் இப்படம் எல்லா பிரதான ஓடிடி தளங்களிலும் நிராகரிக்கப்பட்டது. சாட்டிலைட் சேனல்களிலும் நிராகரிக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் நிதி நெருக்கடியில் இருந்தோம். எப்படி வெளிக்கொண்டு வருவதென தெரியவில்லை. யாரும் சப்போர்ட் பண்ணவில்லை. அதன் பிறகு நீ ஸ்ட்ரீம் என்ற புதிய தளம் உதவினார்கள். அதனால்தான் படம் வெளிவந்தது. படம் வந்த பிறகு பெரும்பாலும் பெண்களால்தான் இப்படம் பேசுபொருளானது. சமூக வலைத்தளங்களிலும் விவாதத்தை உருவாக்கியது.  அதன் பிறகு நிராகரிக்கப்பட்டவர்களிடமிருந்து அழைப்புகள் வந்தது. இந்தப் படத்தை நிராகரித்த அனைவர்களும் ஆண்கள் தான். 

joe baby speech at pk rosy film festival

தொடர்ந்து பெண்ணியம் சம்மந்தபட்ட படங்கள்தான் எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் அவ்வுளவுதான். அதில் பெண்ணியவாதம் மாதிரியான படங்களும் இருக்கும். சமூகம் எது மாதிரி இருக்கிறதோ அது மாதிரியான படங்கள்தான் வரும். அதை நான் பண்ணவில்லையென்றாலும் வேறு யாராவது பண்ணுவார்கள்” என்றார்.