Skip to main content

அதிமுக வாக்குகளை பிரிக்கிறாரா தினகரன்? செம்மலை பதில்

Published on 28/02/2019 | Edited on 28/02/2019

 

இரட்டை இலை சின்னம் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஒதுக்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
 

நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அதிமுக எம்எல்ஏ செம்மலை, டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பார்த்த தீர்ப்புதான். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையிலான இந்த இயக்கம்தான் உண்மையான அதிமுக என்று டெல்லி உயர்நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை நிருபித்திருக்கிறது. 
 

ஏற்கனவே இந்த வழக்கில் இந்த இரு தலைவர்கள் தலைமையிலான கழகம்தான் உண்மையான அதிமுக தேர்தல் ஆணையம் கூறியது. அதிமுக உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 90 சதவீதத்திற்கு மேல் இந்த இயக்கத்தில் இருப்பதன் அடிப்படையில்தான் தேர்தல் ஆணையம் எங்களுடைய தலைமைக்கு இரட்டை இலையை ஒதுக்கியது. 

 

Semmalai


அதனை எதிர்த்து டிடிவி தினகரன், எந்தவித முகாந்திரமும் இல்லாமல், எந்தவித அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் வேண்டுமென்றே இந்த வழக்கை இழுத்தடிப்பதற்காக டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார். அங்கும் எங்களுக்கு நல்ல தீர்ப்பு வந்திருக்கிறது. 
 

எங்களிடம் இருந்து அதிருப்தியாளர்களாக அங்கு சென்றவர்களை ஏமாற்றவதற்காக அதிமுகவையும், இரட்டை இலையையும் கைப்பற்றப்போகிறேன் என்று இதுவரை தினகரன் ஏமாற்றிக்கொண்டிருந்தார். இன்னமும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். 
 

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய அணியைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டால் அவர்களுக்கு குக்கர் சின்னம் வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். அதுவும் நிச்சயமாக தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்படும். தேர்தல் ஆணையமோ அல்லது தேர்தல் அதிகாரியோ ஒரு வேட்பாளருக்கு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றால், அந்த வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட கட்சியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது குறைந்தப்பட்சம் பதிவு செய்யப்பட்டிருந்த கட்சியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆனால் தினகரன் பதிவு செய்யால் அமமுக என்று பெயர் வைத்திருக்கிறார். எனவே தேர்தலில் அவருடைய அணியைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் குச்சர் சின்னம் கிடைக்க வாய்ப்பு இல்லை. 

தினகரன் அவருடைய அணியில் இருப்பவர்களை இன்னும் எத்தனைக்காலத்திற்கு ஏமாற்றிக்கொண்டிருப்பார் என்று கேள்விக்குறியாக இருக்கிறது. இன்னும் அவரை நம்பி வீண்போக வேண்டாம் என்று அந்த தரப்பில் உள்ள உண்மையான தொண்டர்களுக்கு என்னுடைய வேண்டுகோள். ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து தினகரன் துரோகம் இழைத்து வருகிறார். காரணம், இவருக்கும் இந்த இயக்கத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இயக்கத்தில் ஒரு சாதாரண உறுப்பினராக அல்லது தலைமை வழங்கும் பொறுப்பை ஏற்று அதனை பயன்படுத்தி திருப்தியாக இருந்திருக்கலாம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கட்டிக்காத்த இயக்கத்தை தலைமை தாங்க வேண்டும் என்ற எண்ணம், பேராசை இவருக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. 
 

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை தினகரன் பிரிப்பார் என்று கூறுகிறார்களே?
 

எங்களுடைய வாக்குகளை அவர் பிரிப்பார் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதைத்தான் நான் சொல்கிறேன், இது ஜெயலலிதாவுக்கு செய்கிற மாபெரும் துரோகம். ஜெயலலிதா வழிநடத்திய இயக்கம் எங்கள் கையில் இருக்கிறது. இந்த இயக்கம் தோற்க வேண்டும் என்று அவர் செயல்பட்டு வாக்குகளை பிரிப்பாரேயானால் ஜெயலலிதாவுக்கு அவர் செய்கிற மிகப்பெரும் துரோகம்தான். இந்த துரோகத்தை தொடர்ந்து செய்து வருகிறார் தினகரன். ஜெயலலிதாவின் ஆன்மா நிச்சயமாக தினகரனை மன்னிக்காது, ஏதாவது ஒரு வகையில் தண்டிக்கும். இவ்வாறு கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு” - டிடிவி தினகரன் மனைவி கலகல பேச்சு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார். 

His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.

Next Story

கெஜ்ரிவாலை பதவி நீக்கக் கோரும் மனு; உயர் நீதிமன்றம் அதிரடி! 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Petition seeking impeachment of Kejriwal; High Court action

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே அரவிந்த் ஜெஜ்ரிவாலை டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி இந்து சேனா என்ற அமைப்பின் தேசிய தலைவர் விஷ்னு குப்தா என்பவர் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.