Skip to main content

ஜெயலலிதா இருந்திருந்தால் எஸ்.வி.சேகர் இப்படி பேசியிருப்பாரா? சி.ஆர்.சரஸ்வதி பேட்டி

Published on 20/04/2018 | Edited on 20/04/2018
svsekar


 

திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர்கள் பற்றியும், பெண் பத்திரிகையாளர்களையும் மிகவும் அவதூறாக விமர்சித்து பதிவிட்டது தமிழ்நாடு முழுக்க பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

இதுகுறித்து நடிகையும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தித் தொடர்பாளருமான சி.ஆர்.சரஸ்வதி நக்கீரன் இணையதளத்திடம் பேசுகையில், 
 

பெண்களை தெய்வமாக மதிக்கக்கூடிய நாடு தமிழ்நாடு. ஆனால் பெண்களை எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்கள் பேசுகிறார்கள் என்றால், அவர்கள் குடும்பத்தில் பெண்கள் இல்லையா. வேறு யாராவது அவர்கள் குடும்ப பெண்களை இவ்வளவு இழிவாக பேசினார்கள் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியுமா. நம்ம வீட்டு பெண்கள்தான் பெண்கள். மற்ற வீட்டு பெண்களெல்லாம் பெண்கள் இல்லை என்று நினைக்கிறார்களா. சட்டம் கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும். 
 

பெண் நிருபரிடம் நடந்து கொண்ட விதத்திற்கு எதிர்ப்பு வந்ததும் ஆளுநர் மன்னிப்பு கேட்டு பிரச்சனை முடிவுக்கு வரும் தருணத்தில் எஸ்.வி.சேகர் ஏன் இதனை பதிவிட வேண்டும். பாஜக ஆட்சியில் எட்டு வயது குழந்தையை கோயிலில் வைத்து 8 பேர் சித்தரவதை செய்துள்ளனர். கோயிலில் வைத்து நடக்குமா என்று எச்.ராஜா குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார். எஸ்.வி.சேகர் ஒரு பெண் பத்திரிக்கையாளரை இழிவுப்படுத்தி பதிவிட்டுள்ளார். இதற்கு பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்காதா. 
 

பெரியாரைப் பற்றிப் பேசியபோதே எச்.ராஜாவை கைது செய்திருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு கைது செய்யவில்லை. அதற்கு பின்னர் எச்.ராஜா எல்லோரைப் பற்றியும் காது கொடுத்து கேட்கக்கூடாத வார்த்தைகளால் பேசுகிறார். ஏன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பாஜக என்றால் தமிழக அரசுக்கு பயமா. 
 

ஜெயலலிதா இருந்திருந்தால் எஸ்.வி.சேகர் இப்படி பேசியிருப்பாரா. இந்த தைரியும் எஸ்.வி.சேகருக்கு வந்திருக்குமா. இன்று தமிழக அரசு வாயை பொத்திக்கொண்டிருக்கிறது. ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஏன் கண்டனங்களை தெரிவிக்கவில்லை. பெண்களை இழிவாக சித்தரிப்பவர்களுக்கு நிச்சயமாக கடும் நடவடிக்கை தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டும். 
 

யாரோ அனுப்பினார், நான் அதை பார்வேடு செய்துவிட்டேன் என்பதை ஏற்க முடியாது. பெண்களை பற்றி இழிவாக இருக்கிறதே, நம் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்களே என்ற எண்ணம் எஸ்.வி.சேகருக்கு ஏன் வரவில்லை. செய்வதை செய்துவிட்டு மன்னிப்பு கேட்பது என்பது ஏற்கக்கூடியது அல்ல. இந்த விசயத்தில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுப்பதுதான் பெண்ணினத்திற்கு செய்யும் மரியாதை. எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோர் பொதுவாழ்க்கையில் இருப்பதற்கு எந்த தகுதியும் இல்லாதவர்கள். இவர்கள் இரண்டு பேர் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார். 
 

Next Story

“அண்ணாமலை இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க ஜெயிக்காது” - எஸ்.வி. சேகர்

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

 SV Shekhar says BJP will not win in Tamil Nadu until Annamalai is there

 

அண்ணாமலை பா.ஜ.க தலைவராக இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று முன்னாள் எம்.எல்.ஏ.வும், திரைப்பட நடிகருமான எஸ்.வி. சேகர் கூறியுள்ளார்.

 

ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.வி. சேகர் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது இனிமேல் தான் தெரிய வரும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் கொண்டு வந்தாலும் 2026 ஆம் ஆண்டு கூட இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை.

 

அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிராக அனைத்து விஷயங்களையும் செய்கிறார். அண்ணாமலை இருக்கும் வரை அதிமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெற வாய்ப்பு இல்லை. அதேபோல், தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைவராக அண்ணாமலை தொடர்ந்து இருந்தால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க வெற்றி பெற வாய்ப்பு இல்லை. காசு கொடுத்து, பிரியாணி கொடுத்து தினமும் 300 பேர் பஸ் ஸ்டாண்ட் வரை நடப்பதால் என்ன மாற்றம் ஏற்படப் போகிறது?

 

அண்ணாமலை தலைமையில், நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது. அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.க.வில் நான் இருக்க மாட்டேன். அதைப் பற்றி மோடி என்னிடம் கேட்கட்டும். அதற்கு நான் பதில் கூறுகிறேன். அண்ணாமலை போன்றவர்கள் தலைமையில் தனித்து இயங்குவது படு வேஸ்ட். அண்ணாமலை நின்ற தொகுதியிலேயே அவரால் வெற்றி பெற முடியவில்லை. அவரும், சீமானும் ஒரே தொகுதியில் நின்றாலும் அவரை விட சீமான் தான் அதிகமான வாக்குகள் பெறுவார். இந்தியாவில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு தான். தி.மு.க அரசு கொண்டு வந்த காலை உணவுத் திட்டம் மிகவும் வரவேற்கத்தக்க விஷயமாகும்” என்று கூறினார்.  

 

 

Next Story

“பொள்ளாச்சி பெண்களின் குரல் இன்னும் காதில் ஒலிக்கிறது” - சி.ஆர். சரஸ்வதி வேதனை!

Published on 27/03/2021 | Edited on 27/03/2021

 

The voice of Pollachi women is still ringing in my ears

 

சட்டமன்றத் தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருக்கின்ற நிலையில், அனைத்து முக்கியத் தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த தேர்தலில் அமமுகவுடன் தேமுதிக, ஒவைசி மேலும் சில கட்சிகள் கூட்டணி வைத்துள்ளது. ஒருபக்கம் தேமுதிகவினர் தீவிரப் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், மறுபுறம் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தீவிரத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

 

அதேபோல் நேற்று திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அமமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “உலகத்திலேயெ முட்டிப் போட்டு முதல்வர் ஆன பெருமை எடப்பாடி பழனிசாமியை மட்டுமே சாரும். உங்களுக்கு இந்தப் பதவியையும், கட்சியையும் பிச்சையாகப் போட்டவர் சசிகலா. அதிமுக தேர்தல் அறிக்கையில் மாதம் ரூபாய் 1,500 மற்றும் 6 சிலிண்டர் கொடுப்போம் எனச் சொல்கிறார்கள். ஆனால் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாயும், புழுத்துப் போன ரேஷன் அரிசி 5 கிலோவும் கொடுத்தீங்க. பொள்ளாச்சியில் சூறையாடப்பட்ட பெண்களின் குரல் இன்றும் காதில் ஒலிக்கிறதே. இது தான் வெற்றி நடை போடும் தமிழகமா? என்று கூறினார்.