Skip to main content

"நீட் தேர்வு தொடர்பான வழக்கு கூட நீதிமன்றத்தில் இருக்கிறது... நீட் தேர்வை நடத்தாமலா போய்விட்டார்கள்.." - சூர்யா சேவியர் தடாலடி!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

hjk


உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய கருப்புக் கொடி போராட்டத்தின் போது பாஜகவைச் சேர்ந்தவர்களின் கார் மோதி நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை  ஒன்பது பேர் இறந்துள்ளனர். குறிப்பிட்ட பகுதியில் மத்தியப் படை பாதுகாப்பு போடப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், பதற்றம் குறையாமல் இருந்து வருகிறது. இதனால் அதிகாரத்தில் இருக்கும் மத்திய, மாநில அமைச்சர்கள் அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. குறிப்பாக பிரதமர், உள்துறை அமைச்சர், மாநில முதல்வர் என யாரும் இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை எதிர்கட்சியினர் வைத்து வரும் சூழ்நிலையில் இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் சூரியா சேவியர் அவர்களிடம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில் பின்வருமாறு, 

 

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒருபகுதியாக லக்கிம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் மீது பாஜகவைச் சேர்ந்தவர்களின் கார் ஏற்றியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் இதுவரை ஒன்பது  பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியா முழுவதும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை உ.பி அரசுக்கு எதிராக தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக இதுவரை பாஜகவைச் சேர்ந்த யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

நல்லவேளை இவர்கள் இரங்கல் தெரிவிக்கவில்லை, நிச்சயம் விவசாயிகள் ஆத்மா சாந்தியடையும். இவர்கள் அனைவரும் கூட்டு களவாணிகள். எனவே இவர்களிடம் இரங்கலை எதிர்பார்ப்பதை விட ஒரு முட்டாள்தனம் வேறெதுவுமில்லை. கொலையாளிகளிடம் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று நாம் கேட்பது கூட தவறுதான். டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இதுவரை அவர்களை பிரதமர் மோடி சந்திக்கவில்லை. ஆனால் கவுதமியை சந்திக்க அவருக்கு நேரம் இருக்கிறது. இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் இந்த ஏழாண்டு காலத்தில் ஒருமுறை கூட பத்திரிக்கையாளரைச் சந்திக்க அவருக்கு நேரமில்லை, நாடுநாடாகச் சென்று குடை பிடித்து போஸ் கொடுக்க முடிகிறது. வெட்கமாக இருக்கிறது இதை எல்லாம் பார்ப்பதற்கு, இதற்கு எப்போது விடிவுகாலம் வரும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறோம். 

 

அங்கே விவசாயிகள் தங்களின் நிலம் பறிபோய் விடும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை முரட்டுத் தனமாகத் தாக்குகிறார்கள். அவர்களுக்காக யார் வரப் போகிறார்கள் என்ற அலட்சியம் இவர்களை இந்த அளவுக்கு கொண்டு சென்றுள்ளது. இந்தியாவில் இத்தனை கோடி நிலம் இருக்கிறது, ஆனால் கோடிக்கணக்கான பேருக்கு இருக்க இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்த அரசு இதுவரை எதாவது செய்திருக்கிறதா என்றால் அப்படி எதுவும் செய்யவில்லை. இன்றைக்கும் உ.பி, பீகார் உள்ளிட்ட இடங்களில் மக்கள் முயல் வசிக்கும் கூட்டை போல சிறிய இடத்தில் வசித்து வருகிறார்கள். அங்கே தமிழ்நாட்டை போல் பெரியார் பிறக்கவில்லை. அதனால் அவர்களுக்கு நாம் அடைந்த உரிமைகள் இன்றளவும் கிடைக்கவில்லை. எனவே நாம் அவர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். 

 

மற்றொரு முதல்வர் விவசாயிகளைக் கட்டையால் அடிக்க வேண்டும் என்று கூறுகிறார். அவரை நாம் அடிக்கலாமா? விவசாயிகள் மீது வண்டியேற்றியவரை நாம் தாக்கினால் சும்மா இருப்பார்களா? அவர்களுக்கு ஒரு நியாயம், நமக்கு ஒரு நியாயம் என்றால் இது என்ன மாதிரியான ஜனநாயக நாடு என்ற கேள்வி எழுகிறது. ஆகையால் இவர்கள் திருந்த வேண்டும், இல்லை திருத்தப்பட வேண்டும். இது இரண்டில் ஒன்று நடந்தால் தான் விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நல்லது நடக்கும். நீதிமன்றத்தில் உள்ள பிரச்சனைகளைப் பேசக்கூடாது என்று தொடர்ந்து ஒரு பிரிவினர் கூறுகிறார்கள். அப்படி என்றால் நீட் தேர்வு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது எதற்காகத் தேர்வைக் கட்டாயப்படுத்தி நடத்துகிறீர்கள். இதற்கு அவர்களிடம் பதில் இருக்கிறதா? வாயை மூடி அமைதியாக கடந்து சென்றுவிடுவார்கள்.

 

 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.