Skip to main content

அப்பாடா பிரச்சினை முடிந்தது... வரப்போகும் தீர்ப்புகளால் கலக்கத்தில் அதிமுக... அடுத்தது என்ன?

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக் காலம் நவம்பர் 17-ம் தேதி முடிவதால், அதற்கு முன்பாக அதிரடியாக பல தீர்ப்புகளை வழங்கினார். அந்த தீர்ப்புகள் இந்தியா முழுவதும் பெரிய விவாதத்தை உருவாக்கியது. அவரது மேற்பார்வையில் வழங்கப்பட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான தீர்ப்பு, தமிழகத்தில் ஒரு பெரிய விவாதத்தையே ஏற்படுத்தியது.

 

bjp



"ரஞ்சன் கோகாய் கொடுத்த ராமஜென்ம பூமி தொடர்பான தீர்ப்பு ஒருவிதமான ஆதரவையும் பலமான எதிர் உணர்வுகளையும் உருவாக்கியது என்றாலும் அனைவராலும் ஒரு வழியாக ஏற்கப்பட்டது. "அப்பாடா பிரச்சினை இத்துடன் முடிந்தது' என்கிற பெருமூச்சு இந்தியா முழுவதும் ஏற்பட்டது. ராமர் பிறந்த இடம் என நம்பப்படும் இடத்தில் கோவில் கட்டிக் கொள்ள ரஞ்சன் கோகாய் அனுமதித்தார். ஆனால் பா.ஜ.க. இத்தனை ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வந்த முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரமான கோவிலை இடித்து மசூதியை கட்டினார்கள் என்பது பொய் என ஆணித்தரமாக மறுத்து தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர். முஸ்லிம்களுக்கு ஒரு மசூதி போனது. ஆனால் பா.ஜ.க.வினருக்கு தங்களது பிரச்சார பீரங்கியே காணாமல் போய்விட்டது. இந்தத் தீர்ப்பை பா.ஜ.க. வரவேற்றதன் மூலம் இதுவரை முஸ்லிம்கள் மீது பழிபோட்டு செய்து வந்த பிரச்சாரம் பொய் என சுப்ரீம் கோர்ட் சொன்னதை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் என சுட்டிக்காட்டுகிறார் சுப்ரீம் கோர்ட் சீனியர் வழக்கறிஞர் ஒருவர்.

 

admk



ராம ஜென்ம பூமியை தொடர்ந்து, "தகவல் அறியும் உரிமைச் சட்டம் சுப்ரீம் கோர்ட்டை கட்டுப்படுத்துமா' என்கிற கேள்விக்கும் ரஞ்சன் கோகாய் பதிலளித்துள்ளார். இந்த சட்டம் அமலுக்கு வந்த 12 வருடங்களாக சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வரவில்லை. 2007ஆம் ஆண்டு சுபாஷ் அகர்வால் இந்த சட்டத்தின் கீழ் கேட்ட விவரங்களை சுப்ரீம் கோர்ட் தரமறுத்தது. மத்திய தகவல் ஆணையம் "சுப்ரீம் கோர்ட் என்பது ஒரு பொது நிறுவனம். பொதுமக்களின் வரிப் பணத்தில் இயங்கும் சுப்ரீம் கோர்ட், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஆளுமைக்கு உட்பட்டது' என உத்தரவிட்டது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டே விசாரித்தது.

 

admk



ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சுப்ரீம் கோர்ட்டும், அதன் தலைமை நீதிபதி அலுவலகமும் கொண்டு வரப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டில் என்ன நடக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிய வரும். அந்த வெளிப் படைத்தன்மை சுதந்திரமான நீதி வழங்கலை உறுதிப்படுத்தும். வெளிப்படைத் தன்மை சுப்ரீம் கோர்ட் என்கிற அமைப்பை பாடாய்படுத்தும் என்கிற வாதத்தை ஏற்க முடியாது' என தீர்ப்பளித்தது.

 

admk



இதே ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறப்பட்ட போதும், கோகாய்க்கு முன்பு தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவுக்கு எதிராக ரஞ்சன் கோகாய் தலைமையில் நான்கு நீதிபதிகள் வெளிப்படையாக கொந்தளித்தபோதும் சுப்ரீம் கோர்ட்டில் என்ன நடக்கிறது என்பது மர்மமான புதிராக இருந்தது. இந்த வாரம்தான் ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் பொய் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பு வந்த கையுடன் சுப்ரீம் கோர்ட்டை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரஞ்சன் கோகாய் கொண்டு வந்து விட்டார். இது மிகவும் ஆரோக் கியமான விஷயம் என்கிறார்கள் வழக்கறிஞர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

ரஞ்சன் கோகாய் தலைமையில் ராம ஜென்ம பூமி விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவர் சந்திரசூட். இவர் 2010-ஆம் ஆண்டு நவம்பரில் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு சட்டரீதியாக எந்த தடையுமில்லை. "சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்காதது மனித உரிமைகளை மீறிய செயல்' என தீர்ப்பளித்தார். அப்போதைய தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா தலைமையில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பை கேரள அரசால் கூட சபரிமலையில் அமல்படுத்த முடியவில்லை. கோவிலுக்குச் சென்ற பெண்களை பக்தர்கள் தாக்கினார்கள். சுப்ரீம் கோர்ட் அளிக்கும் தீர்ப்பு அதன் அமலாக்கல் தொடர்பான பெரிய விவாதத்தை சபரிமலை தீர்ப்பு உருவாக்கியது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தவறானது. அதை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென 60-க்கும் மேற்பட்டவர்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்கள். பொதுவாக ஒரு முறை ஒரு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கி விட்டால் அதை சுப்ரீம் கோர்ட் மறுபரிசீலனை செய்வது இல்லை. சசிகலாவையும் ஜெயலலிதாவையும் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என சொன்ன சுப்ரீம் கோர்ட் அதற்கெதிரான மறுபரிசீலனை மனுவை விசாரிக்கவேயில்லை. "ஜெ. இறந்து விட்டார்: அதனால் அவர் தண்டனை அனுபவிக்க மாட்டார்' என ஒற்றை வரி கருத்தோடு அந்த மறுபரிசீலனை மனுவை டிஸ்மிஸ் செய்து விட்டது. ஆனால் சபரிமலை மலை தீர்ப்புக்கெதிராக மலை போல வந்த மறுபரிசீலனை மனுக்களை வழக்கத்திற்கு மாறாக சீரியசாகவே எடுத்துக் கொண்டது.

நவ.14-ம் தேதி அந்த மறு பரிசீலனை மனுவில் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. "இந்த மனுக்கள் பெண்களின் வழிபாட்டு உரிமையை கேள்வி கேட்கின்றன சபரிமலையில் மட்டுமல்ல, மசூதிகளிலும் பெண்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை. பேகரா என்கிற முஸ்லிம் பிரிவினர் பெண்களின் வழிபாட்டு உரிமையை முற்றிலுமாக மறுக்கிறார்கள். பெண்களின் வழிபாட்டு முறை ஒவ்வொரு கோவிலுக்கும் மாறு படுமா? ஒவ்வொரு மதமும் தன் வழிபாட்டு முறை களைக் கடைப்பிடிக்க முடியுமா? அது பெண்களின் வழிபாட்டு உரிமையை கட்டுப்படுத்துமா? என்கிற கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது. எனவே இதை ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உத்தரவிடுகிறோம்' என ரஞ்சன் கோகாய், கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகிய மூவர் உத்தரவிட மற்ற இரு நீதிபதிகளான சந்திரசூட்டும், நரிமனும் "பெண்கள் சபரிமலையில் நுழைய தடை செய்வது சட்ட விரோதம்' என 3 : 2 என்ற அடிப்படையில் தீர்ப்பளித்தனர். 


தற்பொழுதுள்ள தீர்ப்பான சபரிமலையில் பெண்கள் நுழைய அனுமதி என்கிற தீர்ப்புக்கு எந்த தடையும் சுப்ரீம் கோர்ட் விதிக்காத நிலையில், இந்த வாரம் மண்டல பூஜை தொடங்குவதால் மறுபடியும் போராட்டக்காரர்களின் பூமியாக சபரிமலையை மாற்றியிருக்கிறது சுப்ரீம் கோர்ட் என்கிறது மறுபரிசீலனைக்காக வழக்கு தொடர்ந்த சபரிமலை பக்தர்கள் வட்டாரம்.

"சபரிமலையைப் போலவே ரஃபேல் வழக்கில் புதிதாக விசாரணை எதுவும் தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் பா.ஜ.க. அமைச்சர்களான யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி ஆகியோர் மறுபரிசீலனை மனுவை தாக்கல் செய்தனர். வழக்கமாக மறுபரி சீலனை மனுவை ஏற்காத சுப்ரீம் கோர்ட் இதனை டிஸ்மிஸ் செய்து விட்டது. ரஃபேல் தொடர்பான மறுபரிசீலனை மனுவில் பல புதிய விஷயங்கள் இருந்தன. அதில் இந்து ஆங்கில ஏடு ரஃபேல் விமானத்தின் விலைகளை முடிவு செய்ய பிரதமர் அலுவலகம் நேரடியாக ஈடுபட்டது என்பதை ஆவணங்கள் மூலம் வெளியிட்டது. "அந்த ஆவணங்கள் எங்கள் அலுவலகத்திலிருந்து காணாமல் போன ஆவணங்கள்' என மத்திய அரசு சொன்னது. இவையெல்லாம் மறுபரிசீலனை மனுவில் இடம் பெற்றது. இதையெல்லாம் சுப்ரீம் கோர்ட் கவனத்தில் கொள்ளவில்லை'' என்கிறார் இந்த விவகாரத்தில் அதிக விவரங்கள் தெரிந்த டெல்லி பத்திரிகையாளர்.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் அமைந்த ஆட்சியை கவிழ்க்க 17 எம்.எல்.ஏ.க்களை கடத்திக் கொண்டு போனது பா.ஜ.க. இன்று பா.ஜ.க.வின் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைய இந்த கடத்தல்தான் காரணமானது. இந்த பதினேழு பேரையும் கட்சித் தாவல் தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்தார் கர்நாடக சபாநாயகர் ரமேஷ். சபாநாயகரின் இந்த உத்தரவு செல்லும். "அரசியலில் ஒழுக்கம் முக்கியம்' என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. ஆனால் 2023 வரை அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிக் காலம் இருக்கிறது. அவர்களை தேர்தலில் போட்டியிட தடைவிதித்து சபாநாயகர் போட்ட உத்தரவு செல்லாது' என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.


இது தவறான தீர்ப்பு. "சபாநாயகர் கட்சித் தாவல் தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுத்தது சரி என சொல்லும் சுப்ரீம் கோர்ட், அவர்கள் அதே சட்டப்படி தேர்தலில் போட்டியிடக்கூடாது என தடை விதிப்பது தவறு என சொல்லக் கூடாது' என்கிறார் பிரபல வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டி. 

"அதே நேரம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ.பி.எஸ். உட்பட 11 பேர் வாக்களித்தது கட்சி தாவல் தடுப்புச் சட்டப்படி தவறு. அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் மேற்கொள்ள வேண்டும் என தி.மு.க.வின் கொறடாவான சக்கரபாணி தொடர்ந்த வழக்கு அதே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கும் கர்நாடக வழக்கு போன்ற தீர்ப்பை தருமா என்ற கலக்கம் அ.தி.மு.க. தரப்பில் உள்ளது. அதே நேரத்தில் கொறடா உத்தரவு உள்பட பலவற்றிலும் கர்நாடக வழக்கிலிருந்து தமிழக வழக்கு மாறுபட்டது என்றும் அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கிறார்கள். வழக்கு என்ன ஆயிற்று என தி.மு.க. தரப்புக்காக வாதாடும் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவிடம் கேட்டோம். அந்த வழக்கில் ஒருநாள் வாதம் மட்டும்தான் பாக்கி. இறுதி வாதம் நடக்கும் நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாப்டே வேறு முக்கியமான வழக்குகளை விசாரிக்க சென்றுவிட்டார். கோகாய் நவ.17-ம் தேதி ஓய்வு பெற்றபின் அதே இடத்தில் பாப்டே தான் அடுத்த தலைமை நீதிபதியாக அமர உள்ளார். அவரிடம் நாங்கள் இந்த வழக்கை கொண்டு செல்ல தயாராக உள்ளோம். அவர் புதிய அமர்வை அழைப்பார். அவர்கள் வழக்கின் இறுதி வாதங்களை கேட்பார்கள். விரைவில் வழக்கு முடிவுக்கு வரும்'' என்கிறார்.


 

 

Next Story

பா.ஜ.க வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP candidate's play exposed in kerala

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ணகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

BJP candidate's play exposed in kerala

இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக, குந்திரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.