Skip to main content

கேள்விகளால் சூழப்பட்ட சுந்தர் பிச்சை...!

Published on 17/12/2018 | Edited on 17/12/2018

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, 2004-ம் ஆண்டு கூகுளில் பணியில் சேர்ந்தார். அதன் பின் 2015-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சமீபமாக கூகுள் நிறுவனம் சில சர்ச்சைக்கு உள்ளாகிவருகிறது. குறிப்பாக சீனாவில் கூகுள் தேடு பொறி தொடங்குவது பற்றி பெரிதாக பேசப்பட்டுவருகிறது. இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் விசாரணைக்குழு அமைத்து சுந்தர் பிச்சையை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் நிலை ஏற்பட்டது. 

 

 

s

 

 

இந்த விசாரணை கூட்டம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இதில் 'முட்டாள்' என்று கூகுளில் தேடினால் அமெரிக்க அதிபர் டிரம்பு புகைப்படம் வருவது ஏன், அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஏற்பட்ட சர்ச்சை போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டது என்ற போதிலும் மீண்டும் மீண்டும் சீனாவில் புதிதாக கூகுள் தேடு பொறி அமைப்பது பற்றிய கேள்வியே அதிகமாக கேட்கப்பட்டது. ஆனால், சுந்தர் பிச்சை எந்தக் கேள்விக்கும் பதட்டமாகவோ, மழுப்பலாகவோ பதில் அளிக்கவில்லை. அனைத்து கேள்விகளுக்கும் நிதானமாகவும், அமைதியாகவும் பதில் அளித்தார். 

 

இதற்குமுன் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியும் இதேபோன்று அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக்குழுவில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

குடியரசு கட்சி உறுப்பினர்கள் கூகுளின் தேடல் முடிவுகள் தங்கள் கட்சிக்கு எதிர்மறையாக அமைந்திருப்பது ஏன் என்று கேள்விகள் எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சுந்தர் பிச்சை ‘தேடல் முடிவுகள் எந்தவித அரசியல் சார்பும் இல்லாமல் வழிநடத்தி வருவதாகவும், தங்கள் சேவைகள் அதே விதமாக தொடர்வைதை உறுதி செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறோம்’ என தெரிவித்தார். 

 

முட்டாள் எனும் வார்த்தையைக் கொண்டு தேடினால் அமெரிக்க அதிபர் டிரம்ப் புகைப்படம் வருவது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த சுந்தர் பிச்சை, ‘பொதுவாக கூகுளில் ஒரு விஷயத்தை தேடும்போது, கூகுள் 200 வர்த்தைகளை தன் கீவேர்டுகளாக கொண்டு கூகுளின் அல்கோரிதம் தீர்மானித்து பதிலை அளிக்கிறது. இதில் கூகுள் நேரடியாக தலையிடுவதில்லை’ என தெரிவித்தார். 

 

 

ss

 

 

 

கூகுள் புதிதாக சீனாவில் தனது தேடு  பொறியை தொடங்குவதாக சில தகவல்கள் வந்தது. ஆனால், அந்த தேடு பொறியில் அரசாங்கம் தொடர்பான தகவல்கள், மனித உரிமை சம்பந்தமான தகவல்கள் மற்றும் குழந்தைகளுக்கென பிரத்யேகமாக குழந்தைகள் சம்பந்தமான விஷயங்கள் மட்டுமே வர வேண்டும் என சீன அரசு தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக்குழு 'சீனாவிடம் இதுதொடர்பாக ஏதாவது கூகுள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதா, கூகுள் நிறுவனம் சீனாவுக்கென்று பிரத்யேகமாக தனது தேடு பொறியை வடிவமைக்க திட்டமிட்டுள்ளதா' என்று மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த சுந்தர் பிச்சை சீனாவில் புதிதாக தேடு பொறியை அமைப்பது பற்றி எந்தத் திட்டமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சீனாவில் தேடு பொறி தொடங்குவது பற்றி பல முறை கேட்டபோதும் சுந்தர் பிச்சை நிதானமாகவும் அதே நேரம் தெளிவாகவும் தெரிவித்தார். 

 

 

இந்தக் கூட்டத்தில் நிதானமாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து அமைதியாக பேசிய சுந்தர் பிச்சையின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது. சுந்தர் பிச்சையின் இந்த அணுகமுறை உலக அளவில் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Next Story

ஊழியர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு தந்த கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Google CEO Sundar Pichai gave a shocking announcement to the employees!

உலகின் முன்னனி பன்னாட்டு இணையதள மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் தான் கூகுள் நிறுவனம். கலிபோர்னியாவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பொறுப்பு வகித்து வருகிறார். 

இதற்கிடையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஊழியர்களில் 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்தது. அப்போது, இது பேசுபொருளாக அமைந்தது. இந்த பணிநீக்க நடவடிக்கையை தொடர்ந்து, 2024ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து,  கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘நிறுவனத்தின் செயல்பாட்டை எளிதாக்குவதற்கான சில அடுக்குகளை நீக்க வேண்டியது காலத்தின் அவசியம். அதனால், இந்த ஆண்டும் பணி நீக்கங்கள் தொடரும். இந்த பணி நீக்க நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளின் அடுக்குகளை நீக்குவதாக இருக்கும். ஆனால், இந்த பணி நீக்கம் கடந்தாண்டின் அளவிற்கு இருக்காது. அதே போல், இது அனைத்து துறையிலும் இருக்காது” என்று தெரிவித்தார். 

கூகுள் நிறுவனங்களில் கடந்தாண்டு சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் பணிநீக்க நடவடிக்கை தொடரும் என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியிருப்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சிஇஓ நியமனம்!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Kilambakkam Bus Station Appoints CEO

சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைத்திட தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய புறநகர்ப் பேருந்து முனையக் கட்டுமானத்திற்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு நிலம் மாற்றப்பட்டு, தொடர்புடைய அனைத்துக் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி இந்த புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டு 393.74 கோடி ரூபாய் செலவில் சுமார் 6 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. இந்த பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 31 ஆம் தேதி திறந்து வைத்தார். இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கிளாம்பாக்கம் மற்றும் குந்தம்பாக்கம் பேருந்து நிலையங்களை நிர்வகிக்க, தலைமை நிர்வாக அலுவலரை நியமித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், “சென்னை நில நிர்வாக ஆணையரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வரும் ஜெ. பார்த்திபன், கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் பேருந்து முனையங்களின் தலைமை நிர்வாக அலுவலராக நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.