Skip to main content

நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியாகவே பார்க்கிறோம்: வைகைச்செல்வன் பேட்டி

Published on 28/02/2019 | Edited on 28/02/2019


 

இரட்டை இலை சின்னம் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஒதுக்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
 

நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அதிமுகவின் கொள்கைப்பரப்பு செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வன்,
 

அதிமுகவையும் இரட்டை இலையையும் பிரிக்க முடியாது. எங்கள் உணர்வில், உயிரில் கலந்தது, எங்கள் ரத்தமும் சதையுமானது இரட்டை இலை. அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வராற்று பக்கங்களை திருப்பி பார்த்தால் அதன் முதல் பக்கத்தில் இந்த வீர வரலாறு நிறைந்திருக்கும். திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வருகிறபோது எம்.ஜி.ஆரால் இரட்டை இலை சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டு, அன்று ஆளும் கட்சியாக இருந்த திமுகவையும், மத்தியில் ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியையும் தேர்தல் களத்தில் பின்னுக்கு தள்ளி புதிதாக அறிமுகமான இரட்டை இலை சின்னம் வெற்றி பெற்று நிலையான ஒரு வரலாறை பிடித்து. 

 

vaigai selvan


அதன் அடிப்படையில்தான் மூன்று முறை தமிழகத்தின் முடிசூடா மன்னனாக எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு பிறகு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதன்பிறகு ஜா அணி, ஜெ அணி என பிளவுபட்டு இரட்டை புறா, சேவல் சின்னம் என நின்றது. அதற்கு பிறகு இரண்டு அணியும் இணைந்து இரட்டை இலை சின்னம் கோரப்பட்டு மீண்டும் சின்னம் கிடைத்தவுடன் 91ல் அதிமுக ஆட்சியை பிடித்தது. நான்கு முறை அதிமுகவை ஆட்சிப் பொறுப்பில் கொண்டு வந்தார் ஜெயலலிதா. ஆறு முறை முதல்வராக பதவியேற்றார். 

இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எதிரிகள் ஒரு பக்கம், துரோகிகள் ஒரு பக்கம் தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டனர். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். மகிழ்ச்சியடைகிறோம். இரட்டை இலை சின்னம் கிடைத்ததை வரும் நாடாளுமன்றத் தேர்தலின் முதல் வெற்றியாக நினைக்கிறோம். இதனை நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியாகவே பார்க்கிறோம். 
 

மீண்டும் கட்சியில் பொதுச்செயலாளர் பதவி வருமா?
 

பொதுச்செயலாளர் என்பது ஜெயலலிதாதான். அவரைத்தான் நாங்கள் நிரந்தர பொதுச்செயலாளர் என அழைக்கிறோம். அவர் அமர்ந்திருந்த பதவியில் யாரும் அமரக்கூடாது என்பதுதான் ஒவ்வொரு அதிமுக தொண்டனின் கருத்து. அந்த அடிப்படையில்தான் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புகள் உருவாக்கப்பட்டது. கட்சிக்குள் எந்த மாற்றமும் நிகழாது. இவ்வாறு கூறினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கெஜ்ரிவாலை பதவி நீக்கக் கோரும் மனு; உயர் நீதிமன்றம் அதிரடி! 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Petition seeking impeachment of Kejriwal; High Court action

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே அரவிந்த் ஜெஜ்ரிவாலை டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி இந்து சேனா என்ற அமைப்பின் தேசிய தலைவர் விஷ்னு குப்தா என்பவர் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

Next Story

சின்னம் தொடர்பான விவகாரம்; ம.தி.மு.க. முக்கிய கோரிக்கை!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Matters relating to symbols; MDMK Important request

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ திருச்சியில் போட்டியிடுகிறார். சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (27.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடுகையில், “பொதுச்சின்னங்கள் பட்டியலில் இல்லாத பம்பரம் சின்னத்தை மதிமுகவுக்கு வழங்க சட்டவிதிகள் இல்லை. ஒரே மாநிலத்திற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் வைகோ தரப்பில் வாதிடுகையில், “வேறு மாநிலத்தில் மேலும் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் இந்த வழக்கிற்கு தீர்வு காண இயலாது. கடந்த 2010ஆம் ஆண்டு ம.தி.மு.க. அங்கீகாரத்தை இழந்துவிட்டது. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தின் படி ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை வழங்க முடியாது. எனவே ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது’ எனத் தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. 

இந்நிலையில் தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் சின்னம் ஒதுக்க திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ம.தி.மு.க. சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சின்னத்தை சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்காமல் மாநில கட்சியாக உள்ள ம.தி.மு.க.விற்கு ஒதுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ம.தி.மு.க. மாநிலக் கட்சியாக இருப்பதால் கேட்கும் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ம.தி.மு.க. தரப்பில் கூறப்படுகிறது. மார்ச் 30 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ளது. அப்போது ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்படும் சின்னம் குறித்த விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.