Skip to main content

பிளாக்கில் துக்ளக் வாங்கிய போது சிஸ்டம் கெட்டுபோக வில்லையா..? - பேராசிரியர் சுப.வீரபாண்டியன்!

Published on 21/01/2020 | Edited on 22/01/2020


துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய சில செய்திகள் சர்ச்சையாகி உள்ள நிலையில் இதுதொடர்பாக அவர் மீது காவல்துறையினரிடம் சிலர் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது, " 25 வயதில் பத்திரிக்கை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலும் அதன் மீது நாட்டம் கொண்டவர்களுக்கு ஏற்படும். 40 வயதில் பத்திரிக்கை தொடங்கிய நபர்களும் இருக்கிறார்கள். ஆனால் 91 வயதில் பத்திரிக்கை தொடங்கிய ஒருவர் இருக்கிறார் என்றால் அது ஐயா பெரியார் ஒருவராகத்தான் இருக்க முடியும். 70 வயது, 75 வயதில் புறப்பட்டு விடலாம் என்ற எண்ணம் பெரும்பாலனவர்களுக்கு வரும் நிலையில், ஐயா பெரியாருக்கு பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் இரண்டு பத்திரிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒன்று ஐயாவின் உண்மை, மற்றொன்று துக்ளக். உண்மை நாளிதழின் அட்டை படத்தில் புத்தர் படம் அச்சிடப்பட்டு வெளியானது. துக்ளக் இதழில் இரண்டு கழுதைகள் பேசிக்கொள்வது போன்று அட்டைப்படம் வெளியிடப்பட்டது. அவரவர் எண்ணங்களுக்கு ஏற்பத்தான் படங்கள் வந்து சேரும். பெரியாருக்கு புத்தரை போட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.  அவர்களுக்கு கழுதையை போட வேண்டும் என்று தோன்றியுள்ளது. பெரியாருக்கு புத்தர் பெரியவராக இருந்திருக்கிறார். அவ்வளவு தான் நான் சொல்ல முடியும். 
 

jk



ஆனால் புத்தருக்கும் தெரியாது, கழுதைக்கும் தெரியாது தங்கள் படம் அட்டை படத்தில் வந்திருக்கிறது என்று. ஒருவேளை அவ்வாறு தெரிந்திருந்தால் ஐயாவின் ஏட்டில் வந்திருக்கிறோமே என்று புத்தர் மனம் மகிழந்திருப்பார். இந்த ஏட்டில் வந்துவிட்டோமே என்று கழுதை அவமானப்பட்டு இருக்கும். உண்மை நாளிதழ் எத்தனை விதமான கட்டுரைகளை தொடங்கத்தில் இருந்து வெளியிட்டுள்ளது என்றால், அதை எல்லாம் பார்த்தால் நமக்கு வியப்பாக இருக்கும், இங்கர்சாலில் ஆரம்பித்து அனைத்து அறிவயல் பூர்வமான கட்டுரைகளையும் குறைந்த விலையில் விற்பனை செய்துள்ளது. அன்றைய மதிப்பில் வெறும் 25 பைசாவிற்கு தான் உண்மை நாளிதழ் விற்பனை செய்யப்பட்டது. அப்போது பிளாக்கில் எல்லாம் அந்த நாளிதழ் விற்பனை செய்யப்படவில்லை. பிளாக்கில் விற்றால் சிஸ்டம் கெட்டுபோகும் என்று நமக்கு தெரியும். எனவே நாம் நேர்மையானவர்கள், எனவே 25 பைசா உண்மை நாளிதழை உண்மையான 25 பைசாவுக்கே விற்பனை செய்தோம். இந்த வரலாறை எல்லாம் ரஜினிக்கு குருமூர்த்தி சொல்லியிருப்பார் என்று என்னிடம் பேசிய மேடையில் பேசிய கவிஞர் சொன்னார். அதற்கு ஆசிரியர், குருமூர்த்திக்கும் இந்த வரலாறு தெரியாது என்று கூறினார். இந்த வரலாறு எல்லாம் தெரிந்திருந்தால் தான் அவர்கள் அறிவாளிகளாக இருந்திருப்பார்கள் இல்லையா? நாம் யாரையும் குறைந்து மதிப்பிடவில்லை. அறிவாளியாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில்தான் பேசுகிறோம்" என்றார்.

 


 

Next Story

இந்தி தெரியாது போடா என்பதை கூட ஆங்கிலத்தில் எழுத வேண்டிய அவசியம் இருக்கிறதே? - சுப.வீ பதில்

Published on 11/09/2020 | Edited on 11/09/2020
ரர

 

 

கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு ஹேஷ்டேக் "இந்தி தெரியாது போடா" என்ற வாக்கியம். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழக இளைஞர்களால் இந்த கருத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது ஒருபுறம் என்றால், அதையே டீ சர்ட் வடிவில் பிரபலங்கள் அணிந்து வந்து அந்த வாக்கியத்துக்கு மேலும் வலு சேர்த்தனர். 

 

சினிமா பிரபலங்கள் ஆரம்பித்து பாமரன் வரையில் டீ சர்ட் அணிந்து இந்தி திணிப்புக்கு எதிரான தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் இது சரியான முறைதானா, இந்த எதிர்ப்பு மத்திய அரசின் காதுகளில் விழுமா போன்ற பல்வேறு கேள்விகளை நாம் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களிடம் முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு 'இந்தி தெரியாது போடா' என்று ட்விட்டரில் இளைஞர் ட்ரெண்ட் செய்தனர். பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கு பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் எதிர்வினை ஆற்றியிருந்தார். டீ சர்ட் போட்டா தமிழுணர்வை வெளிப்பாடுத்துவார் என்று கேட்டிருந்தார்கள். இதை பற்றிய தங்களின் கருத்து என்ன? 

இதெல்லாம் ரொம்ப பழைய கருத்து. யாரும் தற்போது வேட்டி கட்டுவதில்லை. நான் பேண்ட் அணிந்துள்ளேன். சேர, சோழ மன்னர்கள் எல்லாம் வேட்டி கட்டியதாக தெரியவில்லை. உடை என்பது நாகரீகம் சார்ந்தது, மொழி என்பது பண்பாடு சார்ந்தது. இரண்டிற்கும் அடிப்படையில் வேறுபாடு இருக்கிறது. நாகரீகம் மாறிக்கொண்டே இருக்கும். பண்பாடு மாறவே மாறாது என்று நான் சொல்லவில்லை. பண்பாடு மிக நிலையாக காலுன்றி நிற்கும். பண்பாட்டில் வருகின்ற மாற்றம் மெதுவானதாக இருக்கும். நாகரீகம் மிக விரைவாக மாற்றமடையும். உடை என்பது இந்த பருவ நிலைக்கும் நாம் செய்கின்ற வேலைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். நாற்று நடுபவர்கள் என்னை போல் உடை அணிந்து கொள்ள முடியாது. நான் வயலில் வேலை செய்பவர்களை போல் உடை அணிந்து கொள்ள முடியாது. உடை என்பது அவரவர் வேலை சார்ந்தது, உடல்வாகு சார்ந்தது. அப்படி என்றால் வேட்டி கட்டியவர்கள் சொன்னார்கள் என்றால் இவர்கள் எல்லாம் ஒத்துக்கொள்வார்களா? இளைஞர்களிடம் இயல்பாக உடை மாறியிருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும். 

 

இந்த உடையை வைத்து வியாபாரம் நடத்தப்படலாம் என்பது கூட இதில் இருக்கின்றதே? 

எங்களை போன்றவர்கள் இதை தொடங்கினால் கூட அப்படி சொல்லாம். இதை அவர்கள் தானே தொடங்குகிறார்கள். எந்த தலைமுறையில் இருந்து அது புறப்படுகிறது என்றுதான் நாம் பார்க்க வேண்டும். இது செல்வாக்கான விற்பனை ஆகும் பொருள் என்றால் அதை தேர்தல் நேரத்தில் எல்லோரும் கையில் எடுத்திருப்பார்களே? நேற்றைக்கு இந்த சட்டையை போட்டுக் கொண்டவர்கள் இன்று காலையில் கோடீஸ்வரனாக மாறிவிட்டார்களா என்ன? எனவே இது வெற்றுக் குற்றச்சாட்டு என்பதே என்னுடைய பதில். 

 

இந்தி தெரியாது போடா என்பதை கூட ஆங்கிலத்தில் எழுத வேண்டிய அவசியம் இருக்கிறதே? 

அதில் அவர்கள் ஐம் ஏ தமிழ் பேசும் இந்தியன் என்று எழுதி இருக்கிறார்கள். இதில் இருந்து அவர்கள் நாங்கள் இருமொழிக் கொள்கைக்கு ஆதரவானர்கள் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். இதை எல்லாம் அவர்கள் கருதி செய்திருப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை. நம்முடைய வீட்டுமொழி தமிழ்தான். உலகளாவிய தொடர்புக்கு ஆங்கிலம் தேவைப்படுகின்றது. எனவே எனக்கு ஆங்கிலமே தேவையில்லை, தமிழ் மட்டும் போதும் என்ற நிலைக்கு நாம் வந்துவிடவில்லை. தமிழ் வேண்டும். உலகத்துக்கே ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும் போது இந்தியாவுக்கும் அது போதும் என்பதே எங்களுடைய கருத்தாக இருக்கிறது. 

 

 

Next Story

"இந்தி தெரியாது போடா" என்ற வார்த்தை சரியான ஒன்றா..? - சுப.வீ பதில்!

Published on 09/09/2020 | Edited on 09/09/2020
jh

 

கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு வார்த்தை "இந்தி தெரியாது போடா" என்ற வாக்கியம். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழக இளைஞர்களால் இந்த கருத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது ஒருபுறம் என்றால், அதையே டீ சர்ட் வடிவில் பிரபலங்கள் அணிந்து வந்து அந்த வாக்கியத்துக்கு மேலும் வலு சேர்த்தனர். லட்சக்கணக்கான ஹேஸ்டேக்குகள் ட்விட்டரை அதிர வைத்தன. சினிமா பிரபலங்கள் ஆரம்பித்து பாமரன் வரையில் டீ சர்ட் அணிந்து இந்தி திணிப்புக்கு எதிரான தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் இது சரியான முறைதானா, இந்த எதிர்ப்பு மத்திய அரசின் காதுகளில் விழுமா போன்ற பல்வேறு கேள்விகளை நாம் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களிடம் முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு 'இந்தி தெரியாது போடா' என்று ட்விட்டரில் இளைஞர் ட்ரெண்ட் செய்தனர். பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். முதலில் இந்தி தெரியாது போடா என்பதை நாகரிகமான ஒன்றாகக் கருதுகிறீர்களா?

 

இதை அந்த நோக்கத்தில் இளைஞர்கள் பார்க்கவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. மொழி திணிப்புக்கு எதிராக தங்களுடைய கருத்தைக் காட்டமாக வெளிப்படுத்தியுள்ளார்கள். அன்றைய தினம் சமூக வலைதளங்கள் முழுவதும் இந்த கருத்து மேலோங்கி இருந்து வந்தது. இதே போன்ற ஒரு உணர்வு 1965ம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்டது. மாணவர்கள், இளைஞர்கள் எல்லாம் இந்தி திணிப்புக்கு எதிராகச் சாலைகளில் கூடினார்கள். அப்போது நான் மாணவராக இருந்தேன். அதே மாதிரியான ஒரு எழுச்சி இனிமேல் ஏற்பட வாய்ப்பு இருக்காதோ என்று நாங்கள் எல்லாம் நினைத்திருந்தோம். ஆனால் தமிழக இளைஞர்கள் எப்போது மொழியைத் திணித்தாலும் அதனை எதிர்ப்பார்கள் என்பது ஆளும் வர்க்கத்துக்கு தற்போது புரிந்திருக்கும். எனவே இளைஞர்களின் எண்ணங்களுக்கு அவர்கள் மதிப்பளிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு. அதனை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

 

இதைக் கவர்ச்சிக்காக இளைஞர்கள் செய்கிறார்கள் என்று நிச்சயம் சொல்ல முடியாது. அப்படி என்றால் அவர்கள் திருவள்ளுவர் படம் போடத் தேவையில்லை. நிச்சயமாக இதை ஒரு பொழுதுபோக்காகவோ அல்லது பேன்ஸியாகவோ நான் கருதவில்லை. 'இந்தி தெரியாது போடா' என்ற வார்த்தையை யாரோ ஒரு இளைஞர் எழுதி இருக்கிறார். என்னை எழுதச் சொல்லியிருந்தால் இந்தியை என்னாலும் தமிழகம் ஏற்காது என்று எழுதி இருப்பேன். இளைஞர்களின் சிந்தனை ஒட்டமும், வேகமும் சற்று வித்தியாசமாக இருக்கின்றது. அதை அனுபவம் வாய்ந்த தலைவர்கள் ஷேர் செய்கிறார்கள் என்று பார்க்கும் போது, அது அவர்களின் உணர்வின் வெளிப்பாடாகத்தான் நாம் அதனைப் பார்க்க வேண்டும். வாக்கியமாகப் பார்க்கத் தேவையில்லை. இளைஞர்கள் மாற்றுச் சிந்தனை கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களின் உணர்வை நாம் ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 

 

1965ம் ஆண்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அப்போதைய முதல்வர் பக்தவச்சலம் பெயரைக் குறிப்பிட்டு காட்டமாக விமர்சனம் செய்தார்கள். ஆனால் தற்போது அதை நாங்கள் விருப்புவதில்லை. இது இளைஞர்களின் வேகம். 50 ஆண்டுகளுக்கு முன்பே அப்படி இருந்தது என்றால் தற்போது சொல்லவே வேண்டாம். இளைஞர்கள் தீயாகப் பற்றிக்கொள்வார்கள். அவ்வாறு பற்றிக்கொண்ட விளைவுதான் இன்றைக்கு இந்தியாவைத் தாண்டி செய்தி உலகம் முழுவதும் சென்று சேர்ந்திருக்கின்றது. இந்த சொற்களைத் தாண்டி உள்ளே இருக்கின்ற கோபம், மொழி உணர்வு ஆகியவற்றை நாம் விட்டுவிட்டுப் பார்க்க முடியாது. இந்தி திணிப்பு போராட்ட காலத்தில் கூட இதுதான் நடைபெற்றது. அப்புறம் தான் துப்பாக்கிச்சூடு வரைக்கும் மாநில அரசு சென்றது. எனவே உணர்வுகளை எந்த அரசாலும் கட்டுப்படுத்த முடியாது. அதையும் தாண்டி மொழி உணர்வு என்பது ஒவ்வொரு தமிழர்களுக்கும் கூடவே உள்ள ஒன்று. எனவே அதிகார பலத்தால் அதனை ஒன்றும் செய்ய முடியாது.