Skip to main content

'ஆங்கிலத்தை ஆதரிக்கிறீர்களே நீங்கள் ஆங்கிலேயனுக்கு பிறந்தவனா' என்ற கேள்விக்கு பெரியாரின் 'நச்' பதில்!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020
hj

 

 

சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா கூட்டத்தில் கலந்தகொண்ட திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீ அவர்கள் தமிழ்மொழி தொடர்பாகவும், திராவிட இயக்கம் சாதித்தது தொடர்பாகவும் அனல் பறக்க பேசினார். அவரின் ஆவேசமான உரை வருமாறு, "தற்போது சிறிது நேரம் முக கவச்சத்தில் இருந்து விடுதலை கிடைத்திருக்கின்றது. வரும் ஏப்ரல் மாதம் தமிழக மக்கள் அனைவருக்கும் விடிவுகாலம் பிறக்கும். இது நிச்சயமாக, கண்டிப்பாக நடந்தே தீரும். சேகர் பாபு பேசியபோது கரோனா காலம் முடிந்து கிழக்கு மாவட்டம் சார்பில் இந்த கூட்டத்தை நடத்துகிறோம் என்று கூறினார். நானும் அவ்வாறே கூறுகிறேன், கிழக்கில் தானே சூரியன் உதிக்கும். இதை சேகர்பாபு வேறு மொழியில் கூறியதாகவே நான் நினைக்கிறேன். அதனால்தான் உதயநிதி இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளார். உதயசூரியன் இங்கிருந்து தொடங்கும் என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கையாக இருக்கிறது. 

 

இங்கு உதயநிதி சொன்ன விஷயங்கள் எனக்கு பலவற்றை ஞாபகப்படுத்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் இதே இடத்தில் நடைபெற்ற விழாவிற்கு வந்தபோது அவர் நடித்த படத்தின் பாடலை போட்டார்கள். நான் மேடையில் பேசும்போது சொன்னேன், இனி அவர் வரும்போது திராவிட இயக்க பாடலை போடுங்கள் என்று. என்னுடைய நண்பர்கள் கூட அவர் தவறாக நினைத்துக்கொள்ள போகிறார் என்றார்கள். நான் அவர்களிடம் கூறினேன், அவர் தலைவரின் பேரன் என்று. அய்யா பெரியாரை வைத்துக்கொண்டு ஜெயகாந்தன் ஐயா பெரியாரை விமர்சனம் செய்தார். எல்லோரும் கோவப்பட்டு பேசினார்கள், அதற்கு பெரியார் கூறினார், எல்லோரும் பேச வேண்டும் என்பதற்காகத்தானே சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினோம் என்றார். நேற்றைக்கு கூட ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ஒரு பழைய சம்பவம், நீங்கள் ஆங்கிலத்தை ஆதரிக்கிறீர்களே நீங்கள் என்ன ஆங்கிலேயனுக்கு பிறந்தவனா என்று பெரியாரிடம் ஒருவர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு பெரியார், 'யார் யார் யாருக்கு பிறந்தார்கள் என்று அவர்களுடைய அம்மாவுக்கு மட்டும்தான் தெரியும். இது எனக்கு மட்டும் அல்ல, கேள்வி எழுப்பியவருக்கு பொருந்தும்' என்று பதிலளித்தார். 

 

மேலும் 'அதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால் அதை நீங்களே தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும். இப்போது நாம் பொதுப்பிரச்சனையை பற்றி பேச வந்திருக்கிறோம்' என்று பெரியார் கூறினார். எனவே எடுத்து சொல்வதற்கும், அதனை ஏற்றுக்கொள்வதற்கும் இந்த மன்றத்தால் முடியும் என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. இந்த அரங்கத்தின் அமைப்பை பார்த்து அனைவரும் ஆச்சரியமாக இருக்கிறது என்றார்கள், எனக்கு எவ்வித ஆச்சரியமும் இல்லை. சேகர் பாபு அவர்களை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அவர் இப்படி செய்யாமல் இருந்தால்தான் அதிசயம். அவர் கட்சிக்காக அயராது உழைப்பவர். கழகத்தின் வெற்றியை பார்த்து ரசிப்பவர். இந்த கரோனா காலத்தில் ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் கஷ்டப்படுவதாக என்னிடம் தெரிவித்தார். என்னால் என்ன செய்ய முடியும் என்று தெரிவில்லை என்றாலும், என்னால் ஒரு தொலைப்பேசி அழைப்பு செய்ய முடிந்தது சேகர் பாபுவுக்கு.  சேகர் பாபு ஒரு குடும்பத்துக்கு மட்டுமல்ல அந்த பகுதியில் இருந்த 12 குடும்பத்து உதவி செய்திருந்தார். இதை திமுக என்ற பேரியக்கம் அவர் மூலமாக இந்த காரியங்களை செய்துகொண்டு இருக்கிறது" என்றார்.

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.