50 ஆண்டுகளுக்கு முன்னால் சாதியின் பெயரால் இந்த வீடு இன்னார் உடையது என்று சொல்லிவந்த நிலை மாறி, தற்போது இந்த வீடு பொறியாளர் வீடு, இந்த வீடு மருத்துவர் வீடு, இந்த வீடு வழக்கறிஞர் வீடு என்று வகைப்படுத்தும் வகையில் நிலைமை இருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கியகாரணம் திராவிட இயக்கங்களின் பங்கு. அவர்கள் போராடியதன் விளைவாகவே இந்த மாற்றம் தமிழகத்தில் சாத்தியமானது. சென்ற ஆண்டு தேர்வெழுதியவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்து இருபதாயிரம் என்ற அளவில் இருந்தது. இந்த ஆண்டு ஏழு லட்சத்து பத்தாயிரம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. ஆனால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. நான் உங்களுக்கு தற்பொது ஒரு புள்ளிவிவரத்தை தெரிவிக்கிறேன். பாஜக ஆளுகின்ற, இன்றைய மோடி. அமித்ஷாவால் ஆளப்பட்ட குஜராத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவமனைகளில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை பதினைந்தாயிரத்து மூன்று. இது ஒன்றும் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் நடக்கவி்ல்லை. குஜராத் மாடல் என்று மார்தட்டுகின்ற பிரதமரின் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
ஆனால் தமிழகத்தில் பொதுசுகாதாரத்தில் மிக முக்கிய இடத்தில் இருக்கிறோம். அதற்கு காரணம் திராவிட இயக்கங்கள் அதில் காட்டிய அக்கறை. அதனால் தான் இன்றைக்கு மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக இருக்கின்றது. இன்றைக்கு தொழில்துறையில் எந்த மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது என்றால், சிலர் கண்ணை மூடிக்கொண்டு மராட்டியத்தையோ அல்லது குஜராத்தையோ கூறுவார்கள். ஆனால், அது உண்மையல்ல. இன்றைக்கு இந்தியாவில் தொழில்துறை வளர்ந்துள்ள மாநிலத்தில் முதலிடத்தில் இருப்பது தமிழகம்தான். கலைஞருக்கு பின் வந்தவர்கள் அதனை சீரழித்து வைத்தாலும், இன்றும் தொழிற்துறையில் தமிழகம் முதலிடத்தில்தான் இருக்கின்றது. தமிழகத்தில் 28 ஆயிரம் தொழிற்சாலைகள் இருக்கின்றது. மராட்டியத்தில் 17 ஆயிரம் தொழிற்சாலைகள் மட்டும்தான் இருக்கின்றது. இன்றைக்கு உத்தர பிரதேசத்தில் மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் இருக்கின்றது. மனிதர்களுக்கு இல்லை. தில்லியில் நடக்கின்ற கலவரங்கள் எதற்காக நடத்தப்படுகின்றது. இதுவரை அந்த கலவரங்களுக்கு 47 உயிர்கள் பலியாகி இருக்கின்றது. அதனை யார் காப்பாற்றுவது? சீனாவுக்கு ஒரு கொரோனா என்றால் இந்தியாவுக்கு மோடி என்ற அளவில்தான் இந்தியர்களின் நிலைமை இருக்கின்றது.