Skip to main content

சுகாதாரத்துறை செயலர் "பீலா ராஜேசு"க்கு எதிராக வலுவடையும் போராட்டம்...!            

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

கருவுற்ற நிலையிலிருந்து பிறப்பு முதல் இறப்பு வரை மனிதர்களுக்கு மருத்துவம் ஒன்றே உயிர் போன்று அத்தியாவசியமானது. இந்த துறையில் பணிபுரிபவர்கள் கடவுளுக்கு நிகராக மனிதர்களால் பார்க்கப்படுபவர்கள். அப்படிப்பட்ட பணியாளர்கள், ஊழியர்கள், அதிகாரிகளை அன்போடும் கருணையுடன் அரவணைத்து சென்று ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது தான் ஒரு நல்ல உயரதிகாரிக்கு பண்பாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு எல்லாமே வம்பாக இருக்கிறது என வேதனை குரல் கொடுக்கிறார்கள் தமிழக அரசு பொது சுகாதார துறையின் கீழ் பணிபுரியும் மருத்துவர்கள் முதல் செவிலியர்கள் வரை.
 

Strong fight against Health Secretary "Peela Rajase"

 

இத்துறையின் செயலாளராக டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். இருந்தவரை எதார்த்த நிலைய புரிந்து கொண்டு பணியாளர்களை வழி நடத்தினார். அவருக்கு பிறகு ஹெல்த் செகரெட்ரியாக பீலா ராஜேஸ் வந்த பிறகு எல்லோருக்குமே நெருக்கடி கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என குமுறுகிறார்கள் சுகாதார துறையில் பணிபுரியும் கிராம சுகாதார செவிலியர்கள் முதல் மாவட்ட இணை இயக்குனர் வரையிலான அதிகாரிகள் வரை.

 

Strong fight against Health Secretary "Peela Rajase"


வேறு வழியே இல்லாமல் போராட்டத்தில் இறங்கி விட்டனர் சுகாதார செவிலியர்கள். "பணிச்சுமையை அதிகரிக்க கூடாது. அறிக்கை.., அறிக்கை என ஒவ்வொரு நாளும் தொல்லை கொடுக்க கூடாது. ஆன்லைன் பதிவு என்கிற  பிக்மி பதிவுகளில் ஈடுபட வைத்து டார்ச்சர் கொடுக்க கூடாது. வாரம் தோறும் மாவட்ட அளவிலான அதிகாரிகள், மருத்துவ அலுவலர்களை வைத்து நடத்தும் வீடியோ கான்பரசிங் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அக்கூட்டத்தில் சென்னையில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு மாவட்ட அதிகாரிகளிடமும் செகரெட்ரி பீலா ராஜேஸ் கடுமையான முறையில் பேசுவதோடு உடனே சஸ்பெண்ட், டிஸ்மிஸ் என்றெல்லாம் சர்வாதிகார முறையில் உத்தரவு போடுவதை நிறுத்த வேண்டும்" என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 27 ந் தேதி மாலையில் ஈரோடு, தேனி, தருமபுரி, கடலூர், மதுரை உட்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் (VHN, SHN, CHN,) பணியாளர்கள் பெருந்திரள் ஆர்பாட்டம் நடத்தி ஹெல்த் செகரெட்ரி பீலா ராஜேசு க்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

 

Strong fight against Health Secretary "Peela Rajase"

 

"பொது சுகாதாரத் துறையில் உயிர் நாடியாக இருப்பது கிராம சுகாதார செவிலியர்கள் தான். சாதாரண குக்கிராமங்கள் வரையிலும் அவர்கள் பணி செய்கிறார்கள் கிராம சுகாதார செவிலியர்கள் முழுமையான பணி என்பது தாய் சேய் நலம் தான் அதாவது ஒரு பெண் கருவுற்ற நிலையிலிருந்து அடுத்து குழந்தைப்பேறு அந்த குழந்தை வளர்ச்சி அதற்குத் தேவையான மருத்துவம் மருத்துவம் சார்ந்த ஆலோசனை தடுப்பூசி என அனைத்தையும் வழங்குபவர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் தான். அடிப்படையான இவர்களின் இந்தப் பணியை செய்ய முடியாத அளவிற்கு இப்போது பணிச்சுமை களை மிகவும் அதிகப்படுத்தி விட்டனர் அதுவும் ஆன்லைன் என்கிற பிக்மி பதிவில் என் நேரமும் லேப்டாப் கையுமாகவே இருக்க வேண்டும் என சொல்லாமல் சொல்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ரிப்போர்ட் ஒரு நாளுக்கு ஒருமுறை ரிப்போர்ட் ஒரு வாரத்திற்கு பல ரிப்போட் ஒரு மாதத்திற்கு மேலும் மேலும் ரிப்போட் அடுத்து வருடக் கணக்கு என தொடர்ந்து அறிக்கை, அறிக்கை என பல்வேறு தொந்தரவுகளை மேலிடம் கொடுக்கிறது.

 

Strong fight against Health Secretary "Peela Rajase"


அதேபோல் மகப்பேறு நிதி வழங்குவது, கருவுற்ற பெண் பிக்மி பதிவில் பதிவு செய்த பிறகு அவர்களுக்கு ஒரு பதிவு எண் கொடுக்கப்படும் அதன் மூலம்தான் பிறப்பு சான்றிதழ் அவர்கள் பெறமுடியும் மகப்பேறு நிதியில் வழங்குவது குளறுபடி ஏராளமாக உள்ளது. அதற்கு காரணம் மேலிடம் தான்.  கிராம சுகாதார செவிலியர் முதலில் பதிவு செய்து அந்த விண்ணப்பத்தை அடுத்தடுத்த நிலைகளுக்கு அனுப்புவார். ஒவ்வொரு மாவட்ட அதிகாரியிடமிருந்து இறுதியாக சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு வரும் இவை எல்லாமே ஆன்லைன் மூலமாக நடப்பதுதான் ஆனால் நிதியை வழங்க வேண்டிய சுகாதாரத்துறை தலைமை மிகப்பெரிய குளறுபடியை செய்துவருகிறது. இந்த நிதி மத்திய அரசு மூலமாக வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஆதார் எண் மூலமாக கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கிற்கு நிதியை அனுப்புகிறது. இதில் ஏற்படுகிற குளறுபடி கீழ் மட்டதில்  பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு என்பது சுகாதாரத்துறையின் தலைமையின் கையில் தான் உள்ளது ஆனால் கிராம சுகாதார செவிலியர்கள் பலிகடா ஆக்குகிறார்கள்.

 

Strong fight against Health Secretary "Peela Rajase"

 

தாய் சேய் நலத்தை கவனிக்கவேண்டிய சுகாதார செவிலியர்கள் கணக்கு வழக்கு பார்க்க அனுப்புகிறார்கள் மேலும் தொடர்ச்சியான பல்வேறு ரெக்கார்ட் வேலைகளையும் திணிக்கிறார்கள். தொடர்ந்து பல வேலைகளை கொடுப்பதால் அவர்கள் மன அழுத்தத்திற்கு உட்பட்டு பலபேர் நோயாளியாக மாறிவிட்டார்கள். பல குடும்பங்களில் நிம்மதி இல்லாமல் போய்விட்டது சில செவிலியர்கள் தற்கொலையும் செய்து உள்ளார்கள். அவர்கள் குடும்பத்திலும் தற்கொலை நிகழ்ந்துள்ளது இவை எல்லாவற்றுக்கும் காரணம்.., மன அழுத்தம் வேலைப்பளு நெருக்கடியும் தான்.

இவைகள் அனைத்தையும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கவனத்திற்கு நாங்கள் கொண்டு சென்றும் அவரும் இதை கவனிக்காமல் எல்லாவற்றையும் செகரெட்ரியே பார்த்துக் கொள்வார் என ஒதுங்கி நிற்கிறார். செகரெட்ரி பீலா ராஜேஷ் இதில் பணிபுரியும் பெண்களின் உண்மையான வேலைநிலை கண்டு கொள்லாமலும்  அவர்களின் வாழ்வியல் நிலையை கவனத்தில் கொள்ளாமல் அவர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து அதன் மூலமாக அவர் தனது சர்வாதிகாரத்தை நிலை நிறுத்தி வருகிறார்.

 

Strong fight against Health Secretary "Peela Rajase"


இது ஒரு வகையான சேடிஸ்ட் குணம் இது இப்படியே தொடருமானால் மிகப்பெரிய விளைவுகளை தான் இந்த துறை சந்திக்க நேரிடும்"  என கண்ணீரோடு கூறுகிறார்கள் கிராம சுகாதார செவிலியர்கள் உட்பட அத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள்.

பீலா ராஜே சின் அதிகாரமிரட்டலால் நேற்று திருச்சியில் அரசு மருத்துவ பேராசிரியை வேலையை விட்டே ராஜினாமா செய்துள்ளார். தமிழகம் முழுக்க கடந்த ஒரு வருடத்தில் நான்கு சுகாதார செவிலியர்கள் தற்கொலை செய்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப ஓய்வில் சென்று விட்டனர். கணவன், மனைவி, குழந்தைகள் என பல குடும்பத்தில் தகராறு முற்றிப் போய் குடும்ப சிக்கல் எழுந்துள்ளது. இவை எல்லாவற்றையும் புரிந்து கொள்வாரா தனி மனிதரான ஐ.ஏ.எஸ்.அதிகாரி பீலா ராஜேஸ், அல்லது துறையின் அமைச்சரான விஜயபாஸ்கர் செகரெட்ரி பீலா ராஜேஸ் சொல்வதே வேத வாக்கு என இப்படியே விட்டு விடுவாரா? என்பது தான் இப்போது பொது சுகாதார துறையில் எழும்பியுள்ள கேள்வி.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.