இவர் மேல் ஏன் இவ்வளவு லவ்? - ஜஸ்டின் ட்ரூடோவின் கதை!

ஜனவரியை "தமிழ் பாரம்பரிய மாதமாக"அறிவித்த முதல் நாடு என கனடா பெருமையுடன் கூறிக்கொண்டிருக்கிறது. இதற்கு முக்கியகாரணம் அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. கனடா நாட்டில் இளைய வயதிலேயேபிரதமரான இரண்டாவது நபர் இவர்தான். தமிழ் மொழியின் மீது எப்போதும் நன்றி கொண்டவர். தற்போது இந்தியாவிற்கு ஏழு நாள்பயணமாக வந்த இவர்ஒரு பக்கம் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மற்றொருபக்கம் ஆக்கப்பூர்வமான உரைகளையும்இந்தியர்களோடு இந்தியராகசெய்துகொண்டிருக்கிறார். ஆனால் இவர் இந்தியா வந்திறங்கியபோது இவருக்கு குறிப்பிடும்படியான வரவேற்புகள் வழங்கப்படவில்லை, மேலும் ஒரு நாட்டின் பிரதமருக்கு அளிக்கவேண்டிய பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை (ஒருவேளை மோடியின் பயணத்திட்டத்தில் கனடா இல்லைபோலும்)

justin trudeau

ஆறடி டாம் க்ரூஸ் போன்ற உருவத்தில், மஞ்சள் நிற ராமராஜன் சட்டை, கீழே ஜரிகை வேஷ்டி இதெல்லாம் கலந்த கலவையாகநினைத்து பாருங்கள் ஹாலிவுட் ஹீரோ தமிழில் நடிக்க வந்தது போல் இருக்கும். அந்த கெட்டப்பில்தான்கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோகடந்தபொங்கலன்றுகனடாவில் வலம் வந்தார் பொங்கல் கொண்டாட்டங்களுடன். உலகமுழுக்க உள்ளதமிழர்களுக்கு நன்கு தெரிந்த பிரதமர்கள் இரண்டு பேர் அதில் ஒருவர்இந்திய பிரதமர் மோடி, மற்றொருவர்கனடா பிரதமர் ஜஸ்டின் தான்.

justin trudeau

ஜஸ்டின் ட்ரூடோ, டிசம்பர் 25, 1971ல் கனடா தலைநகர் ஒட்டாவாவில் பிறந்தவர்.இவரது தந்தையும் கனடாவின் பிரதமராக இருந்தவர். அவர் பெயர் பியரே ட்ரூடோ. "என்னடா இது இந்தியாவுலதான் குடும்ப அரசியல்னு பார்த்தா கனடாவிலுமா" என்பவர்களுக்கு இன்னொரு செய்தி. ஜஸ்டின் 2007ம் ஆண்டு கனடாவில்வெளிவந்தஒரு டிவி சீரியலான 'தி கிரேட் வார்' இல் நடிகராகவும் நடித்துள்ளார். நடிகனாக இருப்பவர்கள் அரசியலுக்கு வர கூடாது தலைவரே. நடிக்கிற உங்களுக்கு நாட்டை பற்றி என்ன தெரியும் அப்படினு கேட்பவர்களுக்கு பதிலாக அவர்ஆசிரியர்அவதாரமும்எடுத்திருந்தார். அதன் பிறகு அரசியலில் நாட்டம் கொண்ட அவருக்கு2008ல்லிபெரல் கட்சியின்இளைஞரணி போஸ்ட் கிடைத்து. போகப்போக 2013ல் அக்கட்சியின்தலைவரானார். (ஓ... இவர் அந்த ஊரு செயல் தலைவரா அப்படினு கேக்காதீங்க) அதன்பின்2015ல்கனடா தேர்தலில் பிரதமர் பதவிக்காக போட்டியிட்டு வென்றார்.

justin trudeau

இவர் "இது கனடா, இங்கு எங்கள் நாட்டு கலாச்சாரம் மட்டுமேஇருக்க வேண்டும் வேறு யாரும் இருக்கக்கூடாது" என்றெல்லாம் டிரம்ப் போல் எப்பொழுதும் பேசியதில்லை. இவர் உலக பேமஸ் ஆனதற்கு காரணமேகனடாவில் வாழும்அனைத்துமக்களையும், அவர்களது கலாச்சாரத்தையும் மதித்தார் என்பதற்காகத்தான். குறிப்பாக அங்கு இருக்கும்தமிழர்களின் மீது அதிகமதிப்பு கொண்டிருந்தார்.அதனால்தான்இத்தனை சிறிய வயதில் அவ்வளவு பேமஸ் ஆனார். கனடாவில் 1,57,000தமிழர்கள் இருக்கின்றனர் (சென்செஸ்படி). ஆனால் அங்கு வாழும் தமிழர்களோ2,00,000ற்கும் அதிகமானதமிழர்கள் கனடாவில் வாழ்கின்றோம் என்கின்றனர். உலகில் அதிகதமிழர்கள் வாழும் இந்தியாவில்கூட தமிழர்களைசிறப்பு செய்யும் விதமாக மத்திய அரசு எந்த திட்டங்களையும்அவ்வளவாககொண்டுவரவில்லை. ஆனால், இவரோ ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டு வந்தார். அவர் தமிழர்களைப்பற்றிகூறுகையில், " கனடா வாழ் தமிழர்கள் இந்த நாட்டிற்காக நிறைய பங்காற்றியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தமிழின் பெருமையை வருங்காலம்அறியவே ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவித்துசிறப்பித்துள்ளோம்" என்றார். தனது டிவிட்டர் பக்கத்திலும்கூட 'இனிய தைபொங்கல் வாழ்த்துக்கள்' என தெரிவித்தார். இவருக்கு தமிழ் சிறப்பாக பேச தெரியாவிட்டாலும்,தமிழை மதிக்க தெரிந்த மனிதர். இப்படி தமிழை மதித்தாலே போதும், தமிழ் வளமும், வாழ்வும் பெறும்.தமிழனாய் இருந்தால் லைக் செய், மானத்தமிழனாய் இருந்தால் ஷேர் செய் என சமூக ஊடங்களில் பதிவிடுபவர்களுக்குஇந்த நிகழ்வுகள்ஒரு பாடமாக அமையும்.

Justin Trudeau tamil tamil culture
இதையும் படியுங்கள்
Subscribe