Skip to main content

அதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை?

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

adani

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, பேட்டிங் ஆடி வந்தது. போட்டியின் 7-ஆவது ஓவரின்போது மைதானத்துக்குள் நுழைந்த இரு ஆஸ்திரேலியர்கள் 'எஸ்.பி.ஐ அதானிக்கு 1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் கடன் வழங்காதே!' என்ற வாசகத்துடன் கூடிய பதாகையை ஏந்தி இந்திய ஸ்டேட் பேங்கிற்கு கோரிக்கை வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் இரண்டு நிமிடங்கள் இவர்களால் ஆட்டம் தடைப்பட்டது. மைதானத்தின் பாதுகாவலர்கள் இருவரையும் அப்புறப்படுத்தியதையடுத்து, போட்டி தொடர்ந்து நடைபெற்றது.

 

அந்த இரு ஆஸ்திரேலியர்கள் எதற்காக மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அதானிக்கு கடன் வழங்காதே என்கிற பதாகையை ஏந்தி வந்தனர் என்பதற்குப் பின்னால் பழங்குடியினர் மற்றும் சூழலியலாளர்கள் கிட்டத்தட்ட பத்துவருடப் போராட்டம் அடங்கியிருக்கிறது. இவர்கள் இத்தனை ஆண்டுகளாக குயின்ஸ்லாந்த் அருகே கலீலி ஆற்றுப் பள்ளத்தாக்கிலுள்ள கார்மைக்கேலில் அமைய இருக்கும், நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராகப் போராடி வருபவர்கள். குவின்ஸ்லாந்தின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம், உலகின் மிகப்பெரிய சுரங்கங்களுள் ஒன்று. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன், 'கார்மைக்கேல்' சுரங்கம் என்று பெயரிடப்பட்ட திட்டத்தை, குவின்ஸ்லாந்து மாகாண அரசு முன்மொழிந்தது. இதுமட்டுமல்லாமல், 'ரயில் பாதை' அமைக்கும் ஒரு திட்டம் என இவ்விரு திட்டங்களும் முக்கியமான திட்டங்களாகக் கருதப்பட்டது. இந்தத் திட்டம் குறித்து, முதலில் அறிவிக்கும்போது, சுமார் 150 ஆண்டுகளுக்கு நிலக்கரி சுரங்கம் செயல்பாட்டில் இருக்கும் என்று அறிவித்தது. அதனையடுத்து அது, 90 ஆண்டுகளானது. கடைசியில் 2016 -ஆம் ஆண்டு 60 ஆண்டுகள் என்று முடிவுக்கு வந்தது. 

 

தொடக்கத்திலிருந்து மக்கள் மத்தியிலும், சூழலியலாளர்கள் மத்தியிலும் பெரும் விமர்சனங்களைப் பெற்று, தடைப்பட்டு தடைப்பட்டு தொடங்கப்பட்டது, இந்த நிலக்கரி சுரங்கத் திட்டம். இந்தச் சுரங்கத்திலிருந்து ஒருவருடத்திற்கு, 10 மில்லியன் டன் நிலக்கரி எடுக்கப்படும் என்று, 'அதானி நிலக்கரி நிறுவனம்' இப்பணியைத் தொடங்கும் முன்பு தெரிவித்தது. 2014 -ஆம் ஆண்டிலிருந்து, இந்தத் திட்டத்தில் கவனம் செலுத்தி வரும் அதானி குழுமம், சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பது போன்ற சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்த அனுமதியைப் பெற்றுள்ளது. அது என்ன மாதிரியான நிபந்தனைகள் என்றால், 'நிலத்தடி நீர்', 'அழிவின் விளிம்பில் இருக்கும் மிருகங்களைப் பாதுகாத்திட வேண்டும்' போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தினை செயல்படுத்தும்போது கண்டிப்பாக, சுற்றுச்சூழல் கெடும் என்று பல வருடங்களாகப் போராடி வருகின்றனர். அதானியின், இந்தத் திட்டத்தை எதிர்த்து 'ஸ்டாப் அதானி' என்று ஒரு அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. 

 

adani 2

 

நிலக்கரி எடுக்கும்போது, கார்பன் டை ஆக்சைட் அதிகமாக வெளிப்படுவதால், அது பெரிதும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல, அங்கிருந்து எடுக்கப்படும் நிலக்கரியை அருகிலிருக்கும் துறைமுகத்திற்கு எடுத்துச்செல்ல புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட இருக்கிறது. இதனால், 'ரீஃப்' என்று சொல்லப்படும் கடல்நீர் பாறை பெரிதும் பாதிக்கப்பட இருக்கிறது. இதனால், அந்தச் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படும். இதுமட்டுமல்லாமல், இந்த ஒரு நிறுவனம் அனுமதி பெற்றுவிட்டால், இதனையடுத்து ஆறு நிலக்கரி சுரங்கம் தொடங்கப்படும், இதனால் எங்களின் சுற்றுச்சூழல் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படும் என்று இந்த நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

cnc

 

இதுவரை, அதானி குழுமத்திற்கு நிதியுதவி செய்யவிருந்த நிறுவனங்கள் பல இந்த மக்களின் வலுவான எதிர்ப்பால் பின்வாங்கிவிட்டனர். இதனால், 16 பில்லியன் பட்ஜெட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தை 2 பில்லியனாகக் குறைத்துக்கொண்டது அதானி குழுமம். கடந்த 2019 -ஆம் ஆண்டு, இந்த நிறுவனம் நிலக்கரி சுரங்கத்தை தொடங்க ஆஸ்திரேலிய நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து, 2021 -ஆம் ஆண்டு முதல் சுரங்கத்திலிருந்து நிலக்கரி எடுக்கும் பணி தொடங்கும் என்று அதானி குழுமம் அறிவித்துள்ளது. இருந்தபோதிலும், ஒரு பக்கம் பழங்குடியினர், சூழலியலாளர்கள் நிலக்கரி சுரங்கத்தை எதிர்த்துப் போராடி வருகின்றனர். வாங்கன் மற்றும் ஜாகலிங்கேஜ் பழங்குடியினர், சுரங்கத்திற்குச் செல்லும் வழிப்பாதையை முடக்கி யாரையும் அந்தப் பக்கம் ஐந்து நாட்களுக்குச் செல்ல முடியாமல் செய்து, தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். 

 

மைதானத்திற்குள் மட்டுமல்ல மைதானத்திற்கு வெளியேவும் 'ஸ்டாப் அதானி' என்கிற அமைப்பு, 'அதானிக்கு கடன் வழங்காதே!' என்று பேனர்களை வைத்துக்கொண்டு போராட்டத்தை நடத்தியுள்ளனர்...

 

 

 

Next Story

உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு; அம்பானி, அதானி எந்த இடத்தில்?

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Publication of World Rich List

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் ஆண்டுதோறும் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலை ‘புளூம்பெர்க்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில், 200 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் அமேசான் நிறுவனரான தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ், மீண்டும் உலகின் முதல் பெரும் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதுவரை உலகின் முதல் பெரும் பணக்காரராக இருந்த டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி ஜெஃப் பெசோஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க், 198 பில்லியன் டாலர்களுடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். லுயுவுட்டன் ஆடம்பரப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் சி.இ.ஓ பெர்னார்டு அர்னால்ட், 197 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக இருக்கிறார். 150 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் மைக்ரோசாப்ட் நிறுவனர், பில்கேட்ஸ் 5வது இடத்தைப் பிடித்துள்ளார். 

இந்த பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, 115 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 11வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் மற்றொரு தொழிலதிபரான அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, 104 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலக பணக்காரர்களின் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார். 

Next Story

மீண்டும் ஒரு ஐசிசி கோப்பை; தொடரும் மஞ்சள் படையின் ஆதிக்கம்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
An ICC trophy again; The continued dominance of the yellow army!

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலேயான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையின் இறுதி ஆட்டம் தென் ஆப்பிரிக்காவின் வில்லோமூரே பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய இந்திய அணியும், பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கொன்ஸ்டாஸ் ரன் ஏதும் எடுக்காமல் இந்திய அணியின் லிம்பானியின் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆகி பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த கேப்டன் வெய்ப்கென் உடன் சேர்ந்து டிக்சன் நிதானமாக ஆடத் தொடங்கினார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் வெய்ப்கென் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். டிக்சனின் 42, ஹர்ஜாஸ் சிங்கின் 55, ஆலிவர் பீக்கின் 46 ரன்கள் கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் லிம்பானி 3 விக்கெட்டுகளும், நமன் திவாரி 2 விக்கெட்டுகளும், சாவ்மி, முக்‌ஷீர் கான் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான அர்ஷினை ஆரம்பத்திலேயே 3 ரன்னில் வெளியேற்றி ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சி கொடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட் முஷீர் கானும் 22 ரன்களில் ஆட்டமிழந்து ஏமற்றினார். அடுத்து வந்த கேப்டன் சஹரனும் 8 ரன்களில் நடையைக் கட்டினார். அரையிறுதியில் சிறப்பாக ஆடிய சச்சின் தாஸ் 9 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த மோலிய 9 ரன்களுக்கும், அவனிஷ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுபக்கம் பொறுமையாக ஆடிய ஆதர்ஷ் சிங் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வரிசையில் அபிஷேக் மட்டும் 42 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளயும் இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்து 79 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆஸி.யின் பீடர்மேன், மேக்மில்லன் தலா 3 விக்கெட்டுகளும், விட்லர் 2 விக்கெட்டுகளும், ஆண்டர்சன் மற்றும் ஸ்ட்ரேக்கர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 ஆவது முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்றுள்ளது. பீடர்மேன் ஆட்டநாயகனாகவும், மாபகா தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2021 முதல் தற்போது வரை நடைபெற்றுள்ள ஐசிசி போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2022 டி20 உலகக்கோப்பையை இங்கிலந்து அணி வென்றது. அதைத் தவிர்த்து 2021 டி20 கோப்பை, 2022 மகளிர் டி20 கோப்பை, 2023 மகளிர் உலகக்கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஆண்கள் உலகக்கோப்பை தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை என 6 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. 2023 இல் 3 ஐசிசி கோப்பைகள், 2024இல் தற்போது என தொடர்ச்சியாக 4 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. 

ஆஸ்திரேலிய அணி 1999 ஸ்டீவ் வாக் கேப்டன்சியில் இருந்து 2007 ரிக்கி பாண்டிங் கேப்டன்சி வரை தொடர்ச்சியாக 3 உலகக்கோப்பைகளை வென்றிருந்தது. ஒரு பத்தாண்டுகளுக்கும் மேல் அசைக்க முடியாத அணியாகத் திகழ்ந்தது. பின்னர் இந்திய அணியில் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றவுடன் ஆஸ்திரேலிய அணியின் சாம்ராஜ்யம் சற்றே ஆட்டம் கண்டது. அதன் முதல் படியாக 2007 இல் டி20 அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதல் அடி கொடுத்த்து. 2008இல் ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் நடந்த காமன்வெல்த் பேங்க் முத்தரப்பு தொடரின் மூன்று இறுதி ஆட்டங்களில் இரண்டை வென்று  ஆஸ்திரேலியாவின் வெற்றி சாம்ராஜ்யத்துக்கு சம்மட்டி அடி கொடுத்தது. 2011 உலகக்கோப்பை காலிறுதி என மூன்று முக்கிய ஐசிசி போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை சாய்த்தது. 2019 உலகக்கோப்பையில் ஆஸி அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

இந்திய அணியின் கேப்டசியில் இருந்து தோனி விலகியதில் இருந்து ஆஸ்திரேலிய அணி மீண்டும் எழத் தொடங்கியது. இந்திய அணிக்கு கோலி, ரோஹித் என கேப்டன்களை மாற்றி மாற்றியும் ஐசிசி தொடர்களில் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது 4 ஐசிசி தொடர்களை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி விஸ்வரூபம் எடுத்து வெற்றிகளைக் குவித்து தோற்கடிக்க முடியாத அணி எனும் அந்த பழைய பெயரை மீண்டும் பெற்றுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். நேற்றைய மேற்கு இந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டியில் மேக்ஸ்வெல் 5 ஆவது முறையாக சதமடித்து டி20 போட்டிகளில் அதிக சதமடித்த வீரர் எனும் ரோஹித்தின் சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-வெ.அருண்குமார்