Skip to main content

சர்தார்ஜிகள் சூழ் டெல்லி! என்ன நடக்கிறது தலைநகரில்..?

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

delhi chalo

 

'டெல்லி சலோ' என்கிற விவசாயிகளின் போராட்டமானது இன்றுடன் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. பஞ்சாபிலிருந்து சிறு சிறு விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த விவாசாயிகளுடன் டெல்லியை நோக்கிய தங்களின் டிராக்டர், பைக், லாரிகளில் பேரணியைத் தொடங்கியவர்களை ஹரியானா எல்லைப் பகுதியில் நிறுத்திய போலீஸார், அவர்களை தடுத்து நிறுத்த தடியடி போன்ற வன்முறைகளைக் கையாண்டனர். பொதுவாகவே பலசாலிகள், எதற்கும் துணிந்தவர்கள் என்று சொல்லப்படும் சர்தார்ஜிகளோ, தடைகளையும், இரும்பு வேலிகளையும் உடைத்தெறிந்து டெல்லி எல்லையில் கால்பதித்தனர். விவசாயிகள் அதிகமானோர் டெல்லியில் கூடுவார்கள் என்று அஞ்சிய மத்திய அரசாங்கமோ டெல்லிக்கு வர இருந்த ரயில்களை அப்படியே பாதிவழியில் நிறுத்தியது. சில ரயில்களை ரத்து செய்தும் விட்டது. இருந்தபோதிலும் டெல்லிக்குள் நுழைய இருக்கும் சாலை எல்லையைப் பயன்படுத்தி விவசாயிகள் படையெடுத்து வந்து குவிகின்றனர்.

 

ஹரியானா, ராஜஸ்தான், உ.பி-யிலிருந்து விவசாயிகள் அணிதிரண்டு வந்திருந்தாலும் பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள்தான் அதிகமாக இதில் கலந்துகொண்டுள்ளனர். இரண்டாம் நாள், ஹரியானா வழியாக டெல்லியை அடைந்த விவசாயிகளை தண்ணீர் பீய்ச்சியும், கண்ணீர்ப் புகைக் குண்டு வீசியும், லத்தி ஆகிய ஆயுதங்களுடனும் போலீஸ், இராணுவ வீரர்கள் வரவேற்றனர். எங்கு பார்த்தாலும் தடைக்கற்கள், இரும்பு முள் வேலிகளை வைத்து எல்லைப் பகுதிகளை அடைத்திருந்தனர். ஆனால், கூட்டம் கூட்டமாக வந்த விவசாயிகளோ, போலீஸிடம் மல்லுக்கட்டி, தடைக்குப் பயன்படுத்திய வேலிகளை மீறி உள்ளே சென்றுகொண்டே இருந்தனர். இதனால், டெல்லி முழுவதும் பதற்றச் சூழலாகவே இதுவரை இருக்கிறது. 

 

டெல்லியைச் சுற்றி, நெடுஞ்சாலைகளில் தேனி கூட்டத்தைப் போல விவசாயிகள் கொத்துக் கொத்தாக நிற்கின்றனர். ஒரு பக்கம் சிவப்புக் கொடிகள் பிடித்துக் கூட்டம் இருக்கிறது. மற்றொரு பக்கம் பச்சை, வேறொரு பக்கம் மஞ்சள் என்று கலர்கலராகக் கொடிகள் அசைந்த வண்ணம் காட்சியளிக்கிறது இந்தியத் தலைநகரின் எல்லை. அதேபோல பெரும்பாலும் சர்தார்ஜிகள் இந்த விவசாயப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பல நிறங்களில் டர்பன்கள் உலாவுவதைப் பார்க்கும்போது புரிகிறது. சீக்கியர்கள் அதிகம் கலந்துகொண்டிருப்பதால், சில வலதுசாரி அமைப்புகள் தங்கள் பங்குக்கு "டெல்லியைச் சுற்றி காளிஸ்தான் ஆதரவு பெற்றவர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர், இதனால் ஆபத்து அதிகம்" என்று சமூக வலைதளங்களில் பதிவுகளைப் பறக்கவிடத் தொடங்கிவிட்டனர்.  

 

ஏற்கனவே டெல்லி மக்கள் நச்சுப் புகை, டிராஃபிக், கரோனா என்று புலம்பிக்கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகளின் இந்த வலுவான போராட்டத்தால் டெல்லிவாழ் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மக்கள் அவர்கள் பக்கம் உள்ள நியாத்தைச் சொல்லி புலம்பி வருகின்றனர். இந்தப் பக்கம் விவசாயிகள் தங்களின் பக்கம் நியாயத்தைக் கூறி பேரணியாகத் திரண்டு வருகின்றனர். அதனால் இதற்கு விரைவில் டெல்லியில் இருக்கும் பிரதமர் அலுவலகம்தான் எட்டிப் பார்த்து நியாயம் தரவேண்டும். வழக்கமான விவசாயிகளின் போராட்டம் போல இருந்துவிடும், எதாவது ஒரு அதிகாரியை அனுப்பி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை முடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டவர்களை ஏமாற்றும் வகையில், விவசாயிகள் கூட்டம் கூட்டமாக வருவது மட்டுமல்லாமல் டெல்லியில் முகாமிட்டுப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுக் கிளம்பியுள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான சமையல் பொருட்கள், கோதுமை மாவு, விறகு, போர்வை, உடை என்று முழு திட்டத்துடன் வந்து இறங்கியுள்ளனர். போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள விவசாயிகளில் பெரும்பாலானோர் 'புராரி' மைதானத்தில் முகாமிட்டுள்ளனர். அங்குதான் சமைத்து உண்டு, உறங்கி, தங்களின் கோஷங்களைக் கர்ஜித்து வருகின்றனர். 

 

cnc

 

‘தர்தி மாதா கி ஜெய்’ போன்ற கோஷங்களை எழுப்பி வருகின்றனர். ‘ஹம் ஹோங்கே காம்யாப்’ போன்ற தேசப்பற்று பாடல்களையும் ஒலிக்கவிடுகின்றனர். சில முதிய விவசாயிகள் இளைஞர்களுக்காக சப்பாத்தி மாவைப் பிசைந்து உருட்டி, தீயில் வாட்டி, காய்கறிகளை நருக்கி சமைத்துக் கொடுக்க, அருகிலேயே தார்ப்பாயை விரித்து, இரண்டு வரிசைகளாக அமர்ந்து உணவைச் சாப்பிட, அங்கு ஒரு லங்காரையே அமைத்துவிட்டனர் சர்தார்ஜிக்கள். மத்திய அரசு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருக்க வைக்கலாம் என்கிற எண்ணம் இருந்ததாலோ என்னவோ, இப்படி எல்லாத்திற்கும் ரெடியாக வந்திருக்கிறார்கள் விவசாயிகள். 

 

இதற்குப் பின்னால் விவசாயிகள் இல்லை, பின்னணியில் அரசியல்வாதிகள்தான் இருக்கிறார்கள் என்றும் ஒருபக்கம் இந்தப் போராட்டத்தை விமர்சிக்கிறார்கள். எனினும், கொத்தாக இருக்கும் விவசாயிகள் கூட்டத்தில் ஒரு பகுதி, ‘சாஹே குச் பி கர்லோ ஹும் பதே ஜாயேங்கே’ என்று ஒருசேர ஒருமனதாகக் குரலெழுப்புகின்றனர். அதாவது 'என்ன தடை வந்தாலும், நாங்கள் வளர்வோம்' என்பது பொருளாகும். மற்றொரு பக்கம் வழக்கமான தைரியத்துடன் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ எனக் குரலெழுப்பும் சர்தார்ஜிகள். இப்படி லட்சக்கணக்கான விவசாயிகளின் கோஷங்களுக்கு மத்தியில் டெல்லி ஆம் ஆத்மீ அரசின் விருந்தோம்பலும், கரோனா விழிப்புணர்வும் போராட்டக் களத்தினூடே சுற்றிவர, சர்தார்கள் சூழ் நிலமாக மாறியுள்ளது டெல்லி.  

 

 

 

Next Story

பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் - அன்புமணி பங்கேற்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Ramdas, Anbumani participate in the BJP public meeting

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் கூட்டத்தின் போது பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க பா.ம.க. முக்கிய பங்காற்றும் என்று அன்புமணி பேசியதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து பா.ம.க. பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தெரிவிக்கையில், “பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. முடிவு செய்துள்ளது. இந்த முடிவை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சேர்ந்து எடுத்த முடிவு ஆகும். எந்தெந்த தொகுதிகள், வேட்பாளர்கள் விபரங்களை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார். சேலத்தில் நடைபெற உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி என்ற அறிவிப்பை நாளை (19.03.2024) காலை செய்தியாளர் சந்திப்பின் போது ராமதாஸ் அறிவிக்க உள்ளார். அதே சமயம் பா.ஜ.க. கூட்டணியில், பா.ம.க.வுக்கு தர்மபுரி, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், சேலம் மற்றும் மத்திய சென்னை உள்ளிட்ட 10 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடத்தை வழங்க பாஜக முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் நாளை (19.03.2024) பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பா.ம.க. சார்பில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜி.கே. வாசன், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். 

Next Story

கோவையில் ‘ரோடு ஷோ’வைத் தொடங்கினார் பிரதமர் மோடி!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Prime Minister Modi started the 'road show' in Coimbatore

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) பிற்பகல் நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இதற்கிடையே, கோவையின் கண்ணப்ப நகரில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரையில் 4 கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோடி இன்று (18-03-24) ரோடு ஷோ நடத்த உள்ளார். இதற்காக ஏற்கனவே, கோவை மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவை மாநகர காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்த மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுத்திருந்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. சார்பில் கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் அவரச வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு கடந்த 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது  நீதிபதி, “பிரதமர் மோடி மார்ச் 18  ஆம் தேதி கோவைக்கு வருகை தரும்போது, சில நிபந்தனைகளுடன் 4 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடத்த அனுமதிக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஏற்கனவே ஐந்து முறை தமிழகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக இன்று (18-03-24) தமிழகம் வந்துள்ளார். பா.ஜ.க. சார்பில் கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை கோவை விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி, கோவையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கார் மூலம் வாகன அணிவகுப்பு (ரோடு ஷோ) நடக்கும் சாய்பாபா காலனிக்கு சென்றார். அங்கிருந்து கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே, ரோடு ஷோவை பிரதமர் மோடி தொடங்கினார். திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டுள்ளார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் உடன் இருந்தார். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்கிறார்.