Skip to main content

பா.ஜ.க.வை பதறவைக்கும் மாநிலங்கள்! 

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

மோடியின் ஐந்தாண்டு ஆட்சி முடிவதற்கு முன்பே, மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. மாநில அரசின் மீதான கோபங்களுடன், மத்திய அரசின் மீதான ஏமாற்றமும் அதற்குக் காரணமென்பதைச் சொல்லத்தான் வேண்டும். சிவ்ராஜ் சிங்கின் முதல்வர் நாற்காலியில் தற்போது கமல்நாத் அமர்ந்திருக் கிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற, எதிர்பாராதது ஏதாவது நடந்தாக வேண்டும்.
 

bjp


ஆனால் கடந்த 2014 நாடாளு மன்றத் தேர்தலில் நிலைமை இப்படியிருக்கவில்லை. ஹெவி வெயிட் சாம்பியன், முதல்முறை யாய் ரிங்குக்குள் வரும் ஒருவனை ஒரே குத்தில் சாய்ப்பதுபோல், மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 26 இடங்களில் வெற்றிவாகை சூடியது பா.ஜ. 3 இடங்களில் மட்டுமே காங்கிரசுக்கு வெற்றி. அன்றைக்கு மெலிந்து… தளர்வாய் காட்சியளித்த காங்கிரஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் சரிக்குச் சரி மல்லுக்கட்டிய துடன் 114 இடங்களைப் பிடித்து சுயேட்சைகளை யும் இணைத்துக்கொண்டு ஆட்சியமைத்திருக்கிறது. இதில் நகைமுரண் என்னவெனில் 114 இடங்களை வென்ற காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவிகிதம் 40.9. ஆனால் 41 சதவிகிதம் வாக்கு வாங்கிய பா.ஜ.க. 109 இடங்களையே வென்றிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலை மனதில்கொண்டு, தங்களது ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை காங்கிரஸ் கிடப்பில் போட்டதாகக்கூறி, ஆட்சியர் அலுவலகங்களை பா.ஜ.க.வினர் முற்றுகை செய்ய, பதிலுக்கு காங்கிரஸ் மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் இழுத்தடிப்பதாக காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது.
 

madhyapradesh political

கடந்த 14 வருடங்களில் தோராயமாக 18,000 வேலைகள் மட்டுமே மத்தியபிரதேச அரசால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு வேலை யில்லாத இளைஞர்கள் 24 லட்சத்துக்கும் அதிகமான பேர் மாநிலத்தில் இருக்கிறார்கள். மாண்டசூரில் போராட்டம் நடத்திய விவ சாயிகளை, பா.ஜ.க. அரசின் உத்தரவுப்படி கொடு மையாக போலீஸ் ஒடுக்க 6 பேர் இறந்து போனார்கள். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் 21 சதவிகிதமாக அதிகரித் திருக்கிறது. வழக்கமாக பி.ஜே.பி.க்கு ஓட்டுபோடு பவர்களிடையேகூட அதிருப்தி அதிகரித்திருக் கிறது. சாவர்னா இனத்தினர் தனிக்கட்சி ஆரம்பித்திருக் கின்றனர். இவர்கள் வழக்க மாக பா.ஜ.க.வுக்கு முத்திரை குத்துபவர்கள்.
 

rajastan political

காற்று திசைமாறி வீசுவதை பா.ஜ.க.வும் உணர்ந்திருக்கிறது. இருந் தாலும் பி.எஸ்.பி.- எஸ்.பி. கட்சிக் கூட்டணி உத்தரப் பிரதேசத்தைத் தாண்டி மத்தியப் பிரதேசத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டிருக் கிறது. கடந்த தேர்தலில் 6.5 சதவிகிதம் வாக்குகளை இந்தக் கட்சி பிரித்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தலைப்போலவே நாடாளுமன்றத் தேர்தலிலும், இரு கட்சிகளுக்குமான வாக்குவித்தியாசம் நூலிழை யில் அமையுமெனில் அது காங்கிரஸுக்குதான் பாதிப்பாக அமையும். தவிரவும், பாகிஸ்தான்மீதான விமானத் தாக்குதல் பிரதாபங்களை, வாக்காக மாற்றவும் பா.ஜ. முனையும்.  மத்தியப்பிரதேசத்தில் வெற்றி என்பது மதில்மேல் பூனையாக அமர்ந்து இருதரப்பையும் உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறது.
 

bsp party

ராஜஸ்தான் நிலவரம் மத்தியப் பிரதேசத்தி லிருந்து வெகுவாக வித்தியாசமில்லை. கடைசியாக நடந்த சட்டமன்றத்துக்கான தேர்தலில் பா.ஜ.க. பறிகொடுத்த 3 மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்குமான வாக்கு வித்தி யாசமான அரை சதவிகிதத்துக்கு 27 இடங்களை பா.ஜ.க. இழக்கநேர்ந்தது துயரம்தான். வசுந்தரா வின் நாற்காலியில் இப்போது அசோக் கெலாட். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 20 இடங்களை வென்ற காங்கிரஸ் 2014-ல் வெறும்கையோடு நிற்க, மொத்தமுள்ள 25 தொகுதிகளையும் வாரிச் சுருட்டிக்கொண்டது பா.ஜ.க.. 1996-க்குப் பின்பு வந்த தேர்தல்களில் ஏதோ ஒரு கட்சிக்குத்தான் பொதுமக்கள் மெஜா ரிட்டி அளித்துவந்திருக்கின்றனர். அதேபோக்கு தொடருமெனில், ராஜஸ்தானில் இம்முறை காங்கிரஸுக்கு பெருவாரியான தொகுதிகளில் வெற்றிகிடைக்க வாய்ப்பிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலில் சி.பி.ஐ., சி.பி.எம்., சி.பி.ஐ.(எம்.எல்.), சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய லோக்தள் போன்ற கட்சிகள் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.வை எதிர்த்தன. அதற்குரிய பலனும் இருந்தது. ஆனால் நாடாளு மன்றத் தேர்தலிலோ 25 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களையே நிறுத்தப்போவதாக பைலட் அறிவித்திருப்பதால், இம்முறை கூட்டணி இல்லையென்றே தோன்றுகிறது.
 

பகுஜன் சமாஜ், ஆர்.எல்.பி., பாரதிய ட்ரைபல் பார்ட்டி மூன்றும் சேர்ந்து கூட்டணி அமைத்து செல்வாக்குள்ள தொகுதிகளில் போட்டியிடலா மெனத் தெரிகிறது. அப்படி கூட்டணி அமைந்தால் அதனால் காங்கிரஸுக்குத்தான் இழப்பு. பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த கன்ஷியாம் திவாரி, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த சந்திரா மீனா போன்ற பெருந்தலைகள் பா.ஜ.க.வை விட்டு விலகியது அக்கட்சிக்கு இழப்பாக அமையும். சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் ஏற்பட்டிருக் கும் நம்பிக்கை இழப்பைச் சரிக்கட்ட, சாத்தியமான கூட்டணி எதையும் அமைக்கவிருக்கிறதா என்பதும் இதுவரை தெளிவாகவில்லை. கட்சிக்குள்ளேயே நடைபெற்ற உட்கட்சி மோதல்கள் ராஜஸ்தானில் பா.ஜ.க.வை பாதித்திருக்கின்றன. சட்டமன்றத் தேர்தலில் சீட்டுக் கிடைக்காமல் கட்சியிலிருந்து வெளியேறி கணிசமான வாக்குகளைப் பிரித்தவர்களை இனம்கண்டு, அவர்களை சமாதானப்படுத்தி கட்சியில் சேர்க்கும் வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது பா.ஜ.க. என்னதான் சூழல் பதட்டத்தைத் தந்தாலும், வெற்றியை எளிதில் விட்டுத் தந்துவிடாது பா.ஜ.க. நல்லநாளைத் தருவதற்கு பா.ஜ.க.வைவிட தாங்கள்தான் தகுதியானவர்கள் என்பதை மக்கள் மனதில் விதைப்பதில் வகுக்கும் வியூகத்திலிருக்கிறது காங்கிரஸ் வெற்றி!


-க.சுப்பிரமணியன்.

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Priyanka Gandhi hits back at Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

 Priyanka Gandhi hits back at Prime Minister Modi

இந்நிலையில் தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தை தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அதே சமயம் கடந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனப் போரின்போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என ஒன்றை சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மக்களின் சொத்துகளை காங்கிரஸ் கைக்கொள்ளும் என்று மோடி விமர்சிக்கிறார். ஆனால் நிஜத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் சொத்துகளை வழங்கியவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.