Skip to main content

எடப்பாடி அரசு என்னை மிரட்டிப் பார்க்கிறது! -தங்கத்தமிழ்ச்செல்வனின் பகீர் பேட்டி!!!

Published on 29/06/2018 | Edited on 29/06/2018

டி.டி.வி. ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆண்டு முதலமைச்சர் எடப்பாடியை மாற்றக்கோரி கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதனால் சபாநாயகர் 18 எம்.எல்.ஏ.க்களும் விதிமுறைகளை மீறி செயல்பட்டனர் என்று கூறி அந்த 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்தார்.

ஆனால் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இந்த 18 பேரும் எங்களை தகுதிநீக்கம் செய்தது செல்லாது என எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் பெஞ்சில் இருதரப்பு விசாரணைக்கு பிறகு கடந்த 14ம் தேதி இந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு கூறப்பட்டது. அதில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில் 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்றும் தீர்ப்பளித்தார். ஆனால் மற்றொரு நீதிபதியான சுந்தரோ சபாநாயகர் உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்தார்.

இப்படி இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பளித்த காரணத்தால் இந்த வழக்கு விசாரணையை மூன்றாவது நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மூன்றாவது நீதிபதியாக சத்யநாராயணனையும் சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது. இப்படி இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு கூறியதை கண்டு தகுதிநீக்கம் செய்யப்பட்ட தங்கத்தமிழ்ச்செல்வன் அதை கடுமையாக விமர்சனம் செய்தார்.

 

 


அதோடு மத்திய, மாநில அரசுகள் நீதிமன்றங்களை விலைக்கு வாங்கிவிட்டன என பகிரங்கமாகவே குற்றம் சுமத்தினார். இதற்கு நீதிமன்ற அமைப்புகள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்த நிலையில் பெண் வக்கீல் ஸ்ரீமதி சென்னை ஐகோர்ட்டில் தங்கத்தமிழ்ச்செல்வன் மீது கோர்ட் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளர். 

அந்த மனுவில் ஸ்ரீமதி கூறியிருப்பதாவது, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வெளியானதை தங்கத்தமிழ்ச்செல்வன் மிக மிக தரக்குறைவான வகையில் மீடியாக்களில் விமர்சனம் செய்துள்ளார். அதுபோல் தமிழ் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து ஆட்சி நீடிக்க உதவவே ஐகோர்ட் தீர்ப்பளித்தது இது விலை கொடுத்து வாங்கப்பட்ட தீர்ப்பு போல் தெரிகிறது என்று கூறினார்.

மேலும் சென்னை ஐகோர்ட்டையும், தலைமை நீதிபதியையும் அவர் மிகவும் கொச்சைப்படுத்தும் வகையில் கீழ்த்தரமாகவும் விமர்ச்சித்துள்ளார். அதோடு மத்திய, மாநில அரசுகளுடன் சேர்ந்து நீதிபதிகள் சதி செய்வதாகவும், மத்திய, மாநில அரசுகளின் கைகளில் நீதிபதிகள் அடகு வைக்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
 

 

This state is intimidating me! I will explain to the government lawyer notices !!



 

இப்படி வக்கீல் ஸ்ரீமதி கொடுத்த கோர்ட் அவமதிப்பு வழக்கை அரசு தலைமை வக்கீலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  அதை தொடர்ந்து அரசு தலைமை வக்கீல் விஜயநாராயணன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் அவர் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் வழக்கில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு பற்றி விமர்சித்து பேசியதை பற்றி இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இதற்காக நேரில் ஆஜராக வேண்டும். அல்லது வக்கீல் மூலம் பதிலளிக்கலாம் என்றும் கூறினார்.

இப்படி தங்கத்தமிழ்ச்வெல்னுக்கு அனுப்பிய நோட்டீசுக்கு வரும் ஜீலை 2 வாரத்திற்குள் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு அவரிடம் விசாரணையும் நடத்தப்படும். அதை தொடர்ந்து தங்கத்தமிழ்ச்செல்வன் மீது கோர்ட்டுகள் அவமதிப்பு சட்டம் 1971 பிரிவில் 15ன் கீழ் நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவெடுக்கப்படும்.

 

 

 

இப்படி அரசு வக்கீல் நோட்டீசை அனுப்பியதை பற்றி டி.டி.வி. ஆதரவாளரான தங்கத்தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது,  
 

முதன் முதலில் சட்டசபையில் நான் அரசுக்கு ஆதரவாகத்தான் வாக்களித்தேன். அரசுக்கு எதிராக வாக்களித்தவர் ஓ.பி.எஸ். இது உலகத்திற்கே தெரியும். இந்த ஓ.பி.எஸ். உள்பட அவருடைய ஆதரவாளர்கள் 11 எம்.எல்.ஏ.க்களுமே மாற்றித்தான் ஒட்டு போட்டார்கள். அப்படி அவர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தது தவறு என்று நீதிமன்றம் கூறியிருந்தால் தீர்ப்பை வரவேற்றிருந்திருப்பேன்.

அதை சொல்லாமல் சபாநாயகர் விஷயத்தில் நாங்கள் தலையிட முடியாது என்று தீர்ப்பு கூறிவிட்டார்கள். ஆனால் நான் உண்மையைச் சொன்னால் கோர்ட் அவமதிப்பு என்று எனக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்கள். நான் அதற்கு பயப்பட போவதில்லை. விளக்கம் அளிப்பேன் அதோடு நான் அரசு வக்கீலை பார்த்து கேட்கிறேன். சட்டம் அனைவருக்கும் சமம். பொதுமக்கள் இறுதியாக நம்பும் இடம் நீதிமன்றங்கள் தான். எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வேண்டும் என்று நான் கேட்கவில்லை. ஆனால் சட்டமன்றத்தில் ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் இந்த எடப்பாடி அரசை கவிழ்க்க எதிர்த்து வாக்களித்தார்கள். அப்படி அவர்கள்செய்தது சரியா? தவறா? என்பது நீதிமன்றம் ஏன் கூறவில்லை. அதையெல்லாம் விளக்கமாக சொல்லாமல் தீர்ப்பு கூறினால் எப்படி நீதிபதி தீர்ப்பை விமர்சசிக்க கூடாது என்கிறார்கள்.

 

 


அப்படியானால் நீதிபதியாக இருந்த கர்ணனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நாலு பேர் கருத்து தெரிவித்தார்களே? அவர்களுக்க ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் என்பதால் பயமா? நான் ஒரு சாதாரண குடிமகன் என்பதால் எனக்கு நோட்டீஸ் அனுப்பி என்னை இந்த அரசு மிரட்டப் பார்க்கிறது. அதற்கு ஒரு போதும் நான் பயப்பட போவதில்லை சட்டம் எல்லோருக்கும் சமம். இதுவரை அரசு வக்கீல் அனுப்பிய நோட்டீஸ் எனக்கு வரவில்லை. வந்தால் இதையெல்லாம் விளக்கமாக கோர்ட்டில் எடுத்துச்சொல்வேன் என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.