Skip to main content

ஸ்டாலின் செய்வதெல்லாம் சரியா?

Published on 25/05/2018 | Edited on 25/05/2018

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தனக்கு கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் தவறவிடுகிறார். அவருடைய போராட்ட வழிமுறைகள் அனைத்தும் அவருக்கு எதிராகவே திரும்பிவிடுகின்றன என்ற விமர்சனம் இப்போது எழுகிறது.

எடப்பாடி அரசு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பிலிருந்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வரை பல போராட்டங்களை நடுநிலையிலான கட்சிக்காரர்களே குறை சொல்கிறார்கள்.


 

STALIN

 

 

 

குறிப்பாக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரத்தை ஸ்டாலின் கையாண்ட விதம் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையில் திமுகவைச் சேர்ந்த கீதா ஜீவனின் சகோதரர் பெரும்பாலான காண்ட்ராக்ட்டுகளை எடுத்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்படுகிறது. இதற்கு ஆதாரம் எதுவுமில்லை என்று கீதாஜீவன் சொன்னாலும், குற்றம்சாட்டுகிறவர்கள் மீது வழக்குத் தொடுக்காமல் தவிர்ப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.

 

பொதுவாகவே எதற்கெடுத்தாலும் திமுக மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள் பல வகையிலும் பரப்பப்படுகின்றன. அமைச்சர்களே இப்படியெல்லாம் திமுகவை தொடர்புபடுத்துகிறார்கள். அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை தொடரவேண்டும் என்று திமுகவினர் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், திமுக தலைமை இதில் கவனம் செலுத்த மறுப்பது ஏன் என்பது இதுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு விமர்சிக்க உரிமை உண்டு என்று திமுக நினைக்கிறது என்றாலும்கூட எதற்கும் ஒரு அளவில்லையா என்பதே தொண்டர்களின் தொடர் கேள்வி.

 

மற்ற எந்தக் கட்சியைக் காட்டிலும் தலைமையின் முடிவுகளை விமர்சிக்கக்கூடிய அளவுக்கு திமுகவில்தான் தொண்டர்கள் அதிகமாக இருக்கிறார்கள். கலைஞர் காலத்திலிருந்தே இது தொடர்கிறது. கலைஞர் உடல்நலமின்றி ஓய்வெடுக்கும் நிலையில், ஸ்டாலின் எடுக்கும் பல முடிவுகள், அவருடைய நடவடிக்கைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் அதிகரிக்கின்றன. திமுகவில் குழு மனப்பான்மை அதிகமாகி வருகிறது.

 

 

 

கலைஞர் காலத்திலும் குழுக்கள் இருந்தன. ஆனால், அத்தனை குழுக்களும் கலைஞரைத் தலைவராக ஏற்றுக்கொண்டவை. எனவே, அவர்களுடைய போட்டிகள் கட்சிக்கு இழப்பை ஏற்படுத்துவதில்லை. இப்போது குழுக்கள் தமக்கென்று தனித்தனி பாதைகளை வகுத்து செயல்படத் தொடங்கியிருக்கின்றன.

 

ஸ்டாலின் எல்லாக் குழுக்களுக்கும் ஆன தலைவராக இல்லாமல், அவருக்கு நெருக்கமான ஒரு குழுவினருக்கு மட்டுமான தலைவராக செயல்படுகிறார் என்று பல தரப்பிலிருந்தும் விமர்சிக்கப்படுகிறார்.

 

திறமையான பலர் இருந்தாலும், அவர்களை முழுவீச்சில் பயன்படுத்த மறுக்கிறார். தன்னைச் சுற்றியே கட்சி இயங்க வேண்டும் என்று நினைக்கிறார் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

 

 

 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மக்கள் மனநிலையை அரசுக்கு  எதிராக திருப்பத் தவறிவிட்டார் என்றும் விமர்சிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறவர்களை ஸ்டாலின் போய் சந்தித்தார். அன்றைய தினமே மருத்துவமனை அருகே போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் ஒருவர் பலியானார். அந்தச் சமயத்திலேயே ஸ்டாலின் தனது போராட்டத்தை தொடங்கியிருக்க வேண்டும். போலீஸ் அடக்குமுறை ஓயும்வரை தூத்துக்குடியை விட்டு வெளியேற மாட்டேன் என்று போராட்டத்தை தொடங்கியிருக்க வேண்டும் என்று தொண்டர்கள் கூறுகிறார்கள். அங்கேய போராட்டத்தை தொடங்கி கைதாகி இருந்தால், திமுகவின் போராட்ட குணம் தூத்துக்குடியில் போலீஸ் அராஜகத்தை கட்டுப்படுத்தி இருக்கும் என்பதே பெரும்பகுதியினர் கருத்து.

 

ஆனால், ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தர்ணா தொடங்கி கைதானதும், அவருடைய கைதைக் கண்டித்து திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தியதும் தூத்துக்குடி விவகாரத்தை திசைதிருப்பி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

 

 

தூத்துக்குடி அராஜகத்துக்கு எதிரான போராட்டம் ஸ்டாலின் கைதுக்கு எதிரான போராட்டமாக மடைமாற்றப்பட்டது தவறு என்று சாதாரண மக்களே பேசும் நிலை உருவாகிவிட்டது.

 

ஸ்டாலின் போராட்டத்தை நாடகம் என்று முதல்வர் எடப்பாடியே விமர்சிக்கிறார். அதையே தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றன. முதல்வரிடம் தூத்துக்குடி சம்பவத்துக்கு காரணம் யார் என்று கேட்டு பதில் பெற முடியாத ஊடகங்கள், அவர் திமுகவைப் பற்றி சொன்ன வார்த்தைகளை தொடர்ந்து ஒளிபரப்பும் நிலைதான் உள்ளது.

 

இதன்விளைவுதான் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பந்த் அறைகூவலுக்கு மக்கள் ஆதரவு இல்லாமல் போயிற்று என்கிறார்கள் திமுக முன்னணி பிரமுகர்கள்.

 

 

 

2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதை எதிர்கொள்வதற்கு திமுக தலைமை இப்போதிருந்தே தனது தொண்டர்களையும், அடுத்தக்கட்ட தலைவர்களையும் உற்சாகப்படுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக மகளிர் அணியை விரிவுபடுத்தி, ஊராட்சி அளவுக்கு பலப்படுத்த வேண்டும் என்பதே திமுக தொண்டர்களின் விருப்பம்.

 

 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.