Skip to main content

அரியலூர் மாவட்ட பரிசோதனை முடிவுகளை முழுமையாக வெளியிடவில்லை: மறைப்பது ஏன்? எஸ்.எஸ்.சிவசங்கர் கேள்வி

Published on 10/05/2020 | Edited on 10/05/2020

 

ss sivasankar





அரியலூர் மாவட்ட பரிசோதனை முடிவுகளை முழுமையாக வெளியிடவில்லை என்பது தான் அரியலூர் மாவட்ட மக்களின் கருத்தாக இருக்கிறது என்றும் பட்டியல் ஏன் மறைத்து வைக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

மே 6 அன்று தமிழகத்தையே திரும்பிப் பார்க்கும் வகையில் எண்ணிக்கை அமைந்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் முற்றிலுமாக குறைக்கப்பட்டு விட்டது. கீழே அந்த எண்ணிக்கையை அளித்துள்ளேன்.
 

மே 6 - 188
மே 7 -  24
மே 8 -   0
மே 9 - 16
மே 10 - 4
 

சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகும் போது, அரியலூர் மாவட்டத்தில் மட்டும் எண்ணிக்கை எப்படி குறையும். அந்த மாவட்டங்களில் ஏற்பட்ட கோயம்பேடு பாதிப்பு அரியலூர் மாவட்டத்தில் அதிகம். திருப்பூரில் இருந்தும் நிறைய பேர் வந்துள்ளனர்.
 

மே 6 ஆம் தேதி பட்டியல் 188 எண்ணிக்கையோடு வெளியான உடன் ஆளுங்கட்சியும், மாவட்ட நிர்வாகமும் அதிர்ச்சியாகி விட்டார்கள்.
 

அது வரை பெயர், முகவரியோடு, கரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகிக் கொண்டிருந்தது. அதுவரை 34 பேர் தான் அரியலூர் மாவட்டத்தில் பாசிட்டிவ் என அறிவிக்கப் பட்டிருந்தார்கள். நாள்தோறும் கரோனா பாசிட்டிவ் குறைவான எண்ணிக்கையில் வந்து கொண்டிருந்தால் விபரமான பட்டியல் வெளியாவது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. அதனால் அந்தப் பட்டியல் வாட்ஸ் அப்களில் எளிதாக வலம் வந்தது. 
 

திடீரென பாதிப்பு 188 ஆக உயரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பாதிப்பு உயர்ந்த அன்று ஆணை போனது, இனி பட்டியலை வெளியிடக் கூடாது என பட்டியல் மாவட்ட அலுவலகத்திற்கு மட்டுமே வர வேண்டும் என்றார்கள். அவ்வளவு தான், அன்றிலிருந்து பட்டியல் வெளியாக வில்லை. மாவட்ட நிர்வாகம் சொல்வது தான் எண்ணிக்கை ஆனது.
 

அரியலூரில் அனுமதிக்கப்பட்ட கரோனா பரிசோதனை மையம் செயல்பட துவங்கிய அன்று, 35 ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பரிசோதனை முடிவில் 35ம் பாசிட்டிவ் ஆக வந்து விட்டது. நிர்வாகத்திற்கு பயம் வந்து விட்டது. பரிசோதனை கருவிகளில் ஏதாவது கோளாறா அல்லது எண்ணிக்கை எகிறுகிறதா என்று மறு பரிசோதனைக்கு அந்த ரத்த மாதிரிகளை சென்னைக்கு அனுப்பி விட்டார்கள். அத்தோடு அரியலூர் பரிசோதனை மையம் மூடப்பட்டு விட்டது.
 

வெளி மாவட்ட பரிசோதனை மையங்களுக்கு தான் ரத்த மாதிரிகள் அனுப்பப் படுகின்றன. அதனால் பரிசோதனை முடிவுகள் தாமதமாக வருகின்றன என்று வாய் வார்த்தையாக பதில் சொல்கிறார்கள். ஆனால் அந்த பரிசோதனை மையங்களில் இருந்து முடிவுகள் அனுப்பப்பட்டு விட்டது எனத் தகவல்கள் வருகின்றன.
 

வந்த முடிவுகளை முழுமையாக வெளியிடவில்லை என்பது தான்  அரியலூர் மாவட்ட மக்களின் கருத்தாக இருக்கிறது. மக்கள் மாத்திரமல்ல, அரசு அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலதரப்பட்டோரும் இதைத் தான் சொல்கிறார்கள்.
 

பட்டியல் வெளியிடாததற்கு இரண்டு  காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம், எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் செல்வதால் பொதுமக்களிடத்தில் பீதி ஏற்படும். 
 

இரண்டாவது காரணம், பட்டியலில் உள்ள மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள் பெயர்கள் வெளியில் வந்து விடும். பாதிக்கப்பட்ட மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களாக கிராமங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பணியாற்றியப் பகுதியை கண்டெயின்மெண்ட் சோன் ஆக அறிவிக்க வேண்டி இருக்கும். அவர்களோடு பழகியவர்களுக்கு சோதனை செய்ய வேண்டி வரும். 
 

ariyalur 33


அந்தப் பட்டியல் ஆயிரக்கணக்கில் வரும். கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கையில், சென்னையோடு போட்டி போடும் சூழல் வரும். அதனால் எண்ணிக்கையை வெளியிடாமல் நிறுத்தி விடலாம் என நினைத்து விட்டார்கள் போலும். தாங்கள் பட்டியலை வெளியிடா விட்டால், யாருக்கும் தெரியாமல் போய் விடும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 

அரசாங்கமே மறைத்து வைத்த பால் கமிஷன் அறிக்கை தலைவர் கலைஞர் கைக்கு வந்து, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் தூக்கம் போன வரலாற்றை இந்த நேரத்தில் நினைவூட்ட வேண்டியது எனது கடமை.
 

 

எடப்பாடி அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை இன்று அறிவித்துள்ளது. இன்னும் போக்குவரத்து மட்டும் தான் அனுமதிக்கப்பட வேண்டும். அதையும் அனுமதித்து விட்டால், இயல்பு வாழ்க்கை திரும்பி விடும். மத்திய அரசும், "கரோனாவோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்", என அறிவித்து விட்டது.

  

ஊரடங்கை தளர்த்தி விட்டால், அனைவரும் வழக்கமான வாழக்கைக்கு திரும்பி விடுவார்கள். அவரவர் தொழில், வேலை என அன்றாடப் பிரச்சினைகளில் மூழ்கி விடுவார்கள். கொரோனா பிரச்சினையில் இருந்து, மக்கள் கவனம் திரும்பி விடும். இது தான் அரசின் திட்டம்.
 

அந்த நிலையில் இன்னும் சில நாட்களில் பரிசோதனைகளை நிறுத்த திட்டமிட்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதற்கான முன்னோட்டத்தை அரியலூர் மாவட்டத்தில் பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. காரணம், அரியலூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக புதிய பரிசோதனைகள் மேற் கொள்ளப்படவில்லை. ஆனால், யார் கேட்டாலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன என்றே சொல்கிறார்கள். கரோனாவை மூன்று நாட்களில் ஒழிப்போம் என்று சொன்னவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையா?
 

அப்படி பரிசோதனைகள் இனி கிடையாது என்றால் வெளிப்படையாக அறிவித்து விட்டுப் போகலாமே, எதற்கு மக்களை குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும்?
 

நாற்பது பேர் பாதிக்கப்பட்டிருந்த போது, ஊரையே அடைத்து வைத்து விட்டு, எண்ணிக்கை 275 என அடையும் போது, ஊரடங்கை தளர்த்துவதும், பரிசோதனையை நிறுத்துவதும் என்ன காரணம் என்பதை வெளிப்படையாக சொல்லி விட்டால், பயத்தை விட்டு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்புவார்கள்.
 

அதற்கு முன், கரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்ட நானூறு பேர் பட்டியல் ஏன் மறைத்து வைக்கப்பட்டது என்பதையும் சொல்லலாம்.


கரோனாவால் பாதிப்பு வராது என்றால் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விடுங்கள்.


கரொனா நல்லது என்று வேண்டுமானாலும் அறிவித்துவிடுங்கள் எடப்பாடி அவர்களே!


இவ்வாறு கூறியுள்ளார். 

 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.