Skip to main content

இலங்கைத் தேர்தலும் தமிழ்த்தேசியமும்!

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

2019இல் நடந்து முடிந்த ஸ்ரீ லங்கா ஜனாதிபதி தேர்தலின் வாக்குப்பதிவு வரைப்படத்தை காணும்பொழுது தமிழீழ வரைபடம் இலங்கைத் தீவில் தனித்துத் தென்பட்டத்தை அனைவரும் உணர்ந்திருப்போம்!


2005இல் தேர்தல் புறக்கணிப்பிற்கு பெரும் ஆதரவு இருந்த வன்னி, யாழ் பகுதிகளையும் உள்ளடக்கி, மீதமுள்ள தமிழர் தேசப் பகுதிகளில் மற்றும் சிங்களப்பகுதிகளில் ரணிலுக்கும் மகிந்தவிற்கும் விழுந்த வாக்குச் சதவிகிதத்தைக் கணக்கிட்டாலும் சரி, தொடர்ந்தும், 2010, 2015, 2019 எனத் அனைத்துத் தேர்தல்களிலும் தமிழர் பகுதி ஒருபுறமும் சிங்கள மக்கள் நேர் எதிரான வாக்கையுமே செலுத்தி வந்துள்ளார்கள். தமிழர் தேசத்தின் ஓட்டுகள் தேச வரைபடத்தைக் காட்டுகிறது என்பதே இத்தேர்தல்களில் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

sri lanka tamil thesiyam and votes strategy rajapaksa


ஜனநாயகத்தை நம்புவதாக, ஏற்பதாக நடிப்பவர்கள் கூட ஏன் தமிழர் தேசமும் சிங்களத் தேசமும் எல்லாத் தேர்தல்களிலும் நேரெதிராக நிற்கிறது என்றுக்கூட சிந்திக்கத் தயங்குகிறார்கள். எல்லாத் தேர்தல்களிலும் தமிழர் தேசம் சொல்லும் செய்தியினை முழுமையாக புரிந்துக்கொண்டால் மட்டுமே அரசியல் தீர்விற்கான முதல் படியினை எட்ட முடியும். 
 

தமிழீழ மக்களினையும் தமிழர் தேசம், இறையாண்மையை சிதைக்க முன்னின்றவர்களில் முதன்மையானவர்களான மகிந்த குடும்பத்தினை 2005, 2010, 2015 மற்றும் 2019இல் முற்றிலுமாக தமிழர் தேசம் நிராகரித்துள்ள பொழுதும், தமிழர் வாக்குகள் ஏதுமின்றி சிங்கள வாக்கு மட்டுமே பெற்று தமிழர் தேசத்தினை 'ஜனநாயகம்' என்ற பெயரில் சூறையாட முடியும், தமிழர்களின் இறையாண்மையை பறிக்க முடியும், இனவழிப்பு நடத்திட முடியும்!

sri lanka tamil thesiyam and votes strategy rajapaksa

இங்குதான் 2005 தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களது தேர்தல் புறக்கணிப்பு சித்தாந்தத்தைப் புரிந்துக்கொள்ளலாம்.
 

முதலில், பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிறுவ முயன்றதே, தமிழீழத்தின் தேச அடையாளத்தையும் அதன் இறையாண்மையையும். அரசியல் தீர்விற்கான மற்றும் தமிழின அழிப்பின் நீதிக்கோரலுக்கான பேச்சுவார்த்தைகள் முற்றுப் பெறாமல் சிங்களத் தேசத்தின் தலைவருக்கான தேர்தலில் தமிழர் தேசம் எங்கனம் பங்குக்கொள்ள முடியும்! அப்படியே, பங்குப்பெறினும் தமிழர்களின் வாக்குகள் அவசியமற்ற சிங்களத் தேர்தல் எத்தகைய ஜனநாயகத்தை நிலைநிறுத்திட முடியும் என்ற கேள்விகளே புறக்கணிப்பின் பதில்.
 

ரணில் வந்திருந்தால் நல்லது, கடும்போக்கு மகிந்த வந்ததாலே இனவழிப்பு என்பதெல்லாம் அரசியல் அரிச்சுவடிக்கூட அறியாதார் வாதாம்.

sri lanka tamil thesiyam and votes strategy rajapaksa


2009இல் போரில் தலைமை தாங்கிய சரத் பொன்சேகாவை 2010இல் பொது வேட்பாளரை ஆதரித்தும், 2015இல் பொது வேட்பாளர் அடையாளத்தோடு, 'நல்லாட்சி' முழக்கத்தோடு வந்திறங்கிய மைத்திரியை ஆதரித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனை நிலைநிறுத்த முடிந்ததென சிந்தித்தால் மட்டுமே இலங்கைத்தீவில் ஸ்ரீ லங்கா ஜனாதிபதிக்கான தேர்தல் தமிழர் தேசத்திற்கானது அல்ல என்பதையும் நாம் சேர்த்தே உணரலாம்.

sri lanka tamil thesiyam and votes strategy rajapaksa


தமிழர் தேச மக்கள் சிங்களத் தலைமையின் தேர்விற்கு எதிராக ஒருமித்த அடையாளத்தை தங்கள் வாக்குகள் மூலம் நிலைநிறுத்தி வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை எனினும் அதே வாக்கு தமிழர் சார்பிலான பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும் நிறுவ முடியும், ஆனால், சிங்களத் தேசத் தலைவருக்கானத் தேர்தலில் தமிழர் தேசம் பங்குபெறாமல் இருப்பதே தமிழர் தேசத்தின் அரசியல் வேணவாவினை நிலைநிறுத்தும் முதற்படியாகும். இதனை புரிந்துக்கொண்டால் மட்டுமே 2005 தேர்தல் புறக்கணிப்புக் கோரிக்கையைப் புரிந்துக்கொள்ளலாம்.



- முனைவர் விஜய் அசோகன்


 

 

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார். 

Next Story

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ்க்கு இலங்கையில் தீவிர விசாரணை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
 Police arrested 3 people including Murugan who arrived in Sri Lanka

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 7 தமிழர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில் திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். இதனைத்தொடர்ந்து மூவரையும் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து நேற்று திருச்சி முகாமில் இருந்து மூவரும் சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில், மூவரும் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதனையடுத்து  முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மூவரும்  கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியுள்ளனர்.  அப்போது மூன்று பேரையும் இலங்கை காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்றது குறித்து வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.