Skip to main content

இலங்கை! அரசியலமைப்பு சட்டத் திருத்தம்! வானளாவிய அதிகாரம் பெற்ற கோத்தபாய!

Published on 05/09/2020 | Edited on 05/09/2020
dddd

 

இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கு வானளாவிய அதிகாரம் வழங்கும் வகையில் ஸ்ரீலங்கா அரசியலைப்பில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம், சர்வ வல்லமைப் பெற்ற அதிபராக சர்வாதிகாரியாக உயர்ந்திருக்கிறார் கோத்தபாய ராஜபக்சே! 

 

இலங்கை நாடாளுமன்றத்திற்கு அண்மையில் தேர்தல் நடந்தது. கோத்தபாய ராஜபக்சேவின் சகோதரர் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவிக்கு போட்டியிட்டார்.  ராஜபக்சே சகோதரர்களின் ஸ்ரீலங்க பொதுஜன பெரமுனா கட்சி, மூன்றி இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி அசூர வெற்றி பெற்றது. பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்சே! 

 

தம்பி அதிபர்; அண்ணன் பிரதமர் என்கிற கோதாவில் இலங்கை ஆட்சியும் அரசியலும் சிக்கியது. இனி, இவர்கள் வைத்ததே சட்டம் என்கிற பயம் சிங்களவர்கள் அல்லாத மக்களிடம் உருவானது. இருப்பினும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளாக வெற்றிப் பெற்றவர்களால் எந்த அரசியலையும் முன்னெடுக்க முடியவில்லை! 

 

இப்படிப்பட்ட சூழலில் தான், அதிபருக்கே அனைத்து அதிகாரமும் என்கிற வகையில், அரசியலமைப்பின் 20-வது சட்டத்திருத்தத்தை செய்திருக்கிறார் கோத்தபாய ராஜபக்சே! கடந்த 2015-ல் நிறைவேற்றப்பட்ட 19 -வது சட்டத்திருத்தத்திற்கு பதிலாக நிறைவேற்ற வேண்டிய 20 -வது சட்டத் திருத்தம் தொடர்பான நடைமுறைகள் குறித்து கடந்த 15 நாட்களாக ஆராய்ந்திருந்தார் கோத்தபாய! 

 

இந்த நிலையில், அதிபரின் நிறைவேற்றும் அதிகாரம் குறிந்த 20-தாவது சட்டத் திருத்தம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று இரவு கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது. 

 

கெஜட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘’இலங்கை நாடாளுமன்றம் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற பிறகு அதிபர் விரும்பினால் நாடாளுமன்றத்தை கலைக்கலாம். இரட்டை குடியிரிமைப் பெற்றவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம். பிரதமர் உள்பட அமைச்சர்களை பதவியிலிருந்து அதிபர் நீக்கலாம். இதற்காக, அதிபருக்கு எதிராக விசாரணை நடத்த யாரும் உத்தரவிட முடியாது. அமைச்சர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் நியமிக்க வேண்டும் என்கிற வரையறை நீக்கப்படுகிறது.

 

தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற 3 ஆணையங்களும் கலைக்கப்படும். இவைகளின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் அதிபருக்கு மட்டுமே உண்டு. அடிப்படை உரிமை எனச் சொல்லி அதிபருக்கு எதிராக யாரும் வழக்கு தொடர முடியாது‘’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

 

கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ள இந்த திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதங்கள் நடத்தப்பட்டு பிறகு சட்டமாக்கப்படும் என்கின்றன இலங்கையிலிருந்து கிடைக்கும் தகவல்கள். சட்டத்திருத்தத்தின் மூலம் வானளாவிய அதிகாரத்துடன் சர்வாதிகாரியாக வலிமையடைந்திருக்கிறார் கோத்தபாய ராஜபக்சே!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.