Skip to main content

குட்கா, மதுக்கடை வழக்குகளில் வேகம்! காவலர் இடஒதுக்கீடு வழக்கில் மெத்தனம்! -எடப்பாடி அரசின் சுயநலம்! 

Published on 20/05/2018 | Edited on 21/05/2018

 

kaavalar ezhuthu thaervu

 



கடந்த டிசம்பரில், தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 6140 பேரை தேர்வு செய்யவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம். இணையதளம் வாயிலாக மொத்தம் 3.27 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால், மார்ச் 11-ஆம் தேதி நடந்த எழுத்துத் தேர்வில் 2.88 லட்சம் பேர் மட்டுமே கலந்துகொண்டனர். 


காவலர் இட ஒதுக்கீட்டில் பாரபட்சம்! 
 

எழுத்து தேர்வு நடைபெற்ற ஒரு மாதத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, உடல் திறன் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த தடவை, நீதிமன்ற உத்தரவால் தேர்வு முடிவுகளை வெளியிட முடியாமல், காத்திருக்க வேண்டிய நிலையில் இருக்கிறது தமிழக அரசு.  காரணம் என்னவென்றால் - காவல்துறை பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும்போது, காவல்துறையில் பணியாற்றும் வாரிசுகள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்களின் வாரிசுகளுக்கு 9 சதவீதம்,  காவல்துறையில் அமைச்சுப் பணியாளர்களாக தற்போது வேலை பார்ப்பவர்களின் வாரிசுகளுக்கு 1 சதவீதம் என, மொத்தம் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது நடைமுறையாக இருந்தது. கடந்த மார்ச் மாதம் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், ஓய்வு பெற்ற காவலர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது போல், ஓய்வு பெற்ற அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கிட உத்தரவிட வேண்டும் என்று சதீஷ் என்ற இளைஞர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்தார்.   

 

udal thaervu

 

 

பொது சேவையில் அனைத்துக் குடிமக்களுக்கும் சமவாய்ப்பு! 
 

சதீஷின் மனுவானது, கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி நீதியரசர்கள் எஸ்.எம்.சுப்பிரமணியன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதியரசர்கள் ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம். காவலர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது’ என்று குறிப்பிட்டு, காவலர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்தனர். மேலும், பொது சேவையில் நுழைவதற்கு, அனைத்து குடிமக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பில் சுட்டிக்காட்டினர்.  
 

இந்த  தீர்ப்பானது,  தேர்வு எழுதிய  2 லட்சத்து 88 ஆயிரம் பேரின் நிலையை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. ஏப்ரல் 14-ஆம் தேதி எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வெளியிட்ட சீருடை பணியாளர் தேர்வாணையம், இட ஒதுக்கீட்டுக்கான  ‘கட்-ஆப்’ மார்க்கை வெளியிடவில்லை. இதனால், உடல் தேர்வு போன்ற அடுத்தகட்ட தேர்வுகளுக்கு நாம் தகுதி பெற்றிருக்கிறோமா? இல்லையா? என்ற கேள்வி எழுத்து தேர்வு எழுதியவர்களுக்கு எழுந்துள்ளது. 
 

kaavalar thaervu



காவலர்களின் வாரிசுகளுக்காக வரிந்துகட்டவில்லையே!

காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் நம்மிடம்,  “குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். உடனே உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு.  அதுபோல்,  உள்ளாட்சி சாலைகளை வகைப்படுத்தாமல்,  நெடுஞ்சாலையில் திறக்கப்பட்ட 1300 மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். உடனே உச்சநீதிமன்றத்தில்  அப்பீல் செய்தது இதே  எடப்பாடி அரசு. இந்த ஆட்சியாளர்களுக்கு எத்தனை சுயநலம்! அதனால்,  இவ்விரு வழக்குகளும் தள்ளுபடியானது வேறு கதை. 

 

​    ​kaavalar ezhuthu thaervu

 

 

 

குட்கா, மதுக்கடை விஷயத்தில் காட்டிய வேகத்தை, காவலர் இட ஒதுக்கீடு வழக்கிலும் தமிழக அரசு காட்டியிருக்க வேண்டாமா? பல இடங்களிலும்,  காவலர்களைத் தங்களின் ஏவலர்களாக நடத்தி வரும் ஆட்சியாளர்களுக்கு,  காவலர்களுக்கு இதுவரை கிடைத்து வந்த இடஒதுக்கீடு சலுகை, தற்போது  இல்லாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.  இந்நேரம் வரிந்துகட்டி அப்பீல் செய்திருக்க வேண்டும். செய்யவில்லையே?” என்று குமுறலாகச் சொன்னார்.  
 

காவல் இடஒதுக்கீடு வழக்கில் இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்காமலும், மேல் முறையீட்டுக்குச்  செல்லாமலும் மவுனம் காத்து வருகிறது. அதனால், காவலர் பணிக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நொந்துபோய் உள்ளனர். 
 

 


 

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.