Skip to main content

மகனா? மச்சானா? -திமுக , தேமுதிக கள நிலவரம் !  

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

"பொன்முடி மகனுக்கு சீட் கொடுத்தால் தேர்தல் வேலை பார்க்கமாட்டோம்' -என வேட்பாளர் அறிவிப்புக்கு முன் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் தி.மு.க. ஒ.செ.க்கள் பத்து பேர், கட்சித்தலைமைக்கு கடிதம் எழுதி பகிரூட்டினார்கள். "சரி... அவருக்குப் பதிலா யாரை வேட் பாளரா போடலாம்' என தலைமை ஆலோசித்தபோது, நினைவுக்கு வந்தவர் மவுண்ட் பார்க் பள்ளி முதலாளியான மணிமாறன். இந்த மணிமாறன் 2014- தேர்தலில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்தவர். ஆனால் இப்போதோ அவரின் நிதி நிலைமை சரியில்லை. விழுப்புரம் மாவட்டத்திற்குள் வரும் மூன்று தொகுதிகளில் மட்டும் ஓரளவு செலவு பண்ணமுடியும். முதல்வர் எடப்பாடியின் சேலம் மாவட்டத்திற்குள் வரும் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு தொகுதிகளில் செலவு பண்ணுவது ரொம்ப கஷ்டம் என்பதால் மணிமாறன் பின்வாங்கிவிட்டார். 

 

gowthama sigamani



"சரி, இதுக்கு மேல யாரய்யா தேடுறது' என ஒ.செ.க்களிடம் தலைமை கேட்ட போது... பத்துபேரும் சொன்ன பேர் ஐ.ஜே.க. தலைவர் பாரிவேந்தர். இங்கதான் ஒரு சூட்சுமமே இருக்கு. பாரிவேந்தர் முதலில் குறி வைத்தது கள்ளக்குறிச்சி தொகுதியைத்தான். அதனால்தான் பொன்முடி மகனுக்கு எதிராக தி.மு.க. ஒ.செ.க்களே பீதி கிளப்பினார்கள். இதையெல்லாம் ஸ்மெல் பண்ணிய தி.மு.க. தலைமை, "நம்ம கட்சியிலிருந்து யாரையாவது சொல்லுங்கன்னா, வேற கட்சி ஆளை ரெகமெண்ட் பண்றீங்க' என ஸ்டாலின்  கடுமை காட்டியதும் கப்சிப்பாகிவிட்டனர். 
 

sudhish



பாரிவேந்தருக்கு பெரம்பலூர் தொகுதியை உறுதி செய்துவிட்டு, கனிமொழி மூலமாக சீட்டுக்கு காய் நகர்த்திய வக்கீல் செல்வநாயகத்தை சரிப்படுத்திவிட்டு,  பொன்முடி மகன் கௌதம சிகாமணியை கள்ளக்குறிச்சி வேட்பாளராக அறிவித்தார் ஸ்டாலின். சிகாமணியை அறிவிப்பதற்கு முன்னால் இருந்த எதிர்ப்பு கோஷத்தையெல்லாம் கப்சிப்பாக்கிவிட்டார் பொன்முடி. தங்கு தடையின்றி பணம் பாயும் என்பதால் உ.பி.க்கள் மத்தியில் உற்சாகம். 

 

ponmudi



"அ.தி.மு.க.வில் பணத்துக்கு பஞ்சமில்லாத சேலத்தைச் சேர்ந்த பாசறை இளங்கோவனோ, விழுப்புரம் மா.செ. குமரகுருவின் மகன் நமச்சிவாயமோ களம் இறங்கினால், இப்போதைக்கு நமது கஷ்டம் தீரும்' என்ற நம்பிக்கையில் ஆளும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர். ஆனால் பிரேமலதாவோ தனது தம்பி சுதீஷுக்காக கள்ளக்குறிச்சியை விட்டுக் கொடுக்காமல் வாங்கிவிட்டார். இதனால் டென்ஷனில் இருக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் வேலைகளில் படுஸ்பீடாக இறங்கியுள்ளார் சுதீஷ். 

2009-ல் இதே கள்ளக்குறிச்சியில் போட்டியிட்டு, கணிசமான ஓட்டுகளை வாங்கியிருப்பதாலும் இந்த முறை அ.தி.மு.க. ஓட்டுக்கள் போனசாக கிடைப்பதால், தனது தம்பி ஈஸியாக ஜெயித்துவிடலாம் என்ற கணக்குடனும் இருக்கிறார் பிரேமலதா. தனது மச்சானை கரையேற்றுவதற்காக மாவட்ட நிர்வாகிகளை சென்னைக்கு வரவழைத்து பேசியுள்ளார் தே.மு.தி.க.வின் தலைவர் விஜயகாந்த். 

மகனின் வெற்றிக்காக பொன்முடியும் மச்சானின் வெற்றிக்காக விஜயகாந்தும் வரிந்து கட்டுகிறார்கள். 

 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.