Skip to main content

பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்று சொல்லவிட்டு வீடு போய் சேர முடியுமா?; குஜராத் மக்களுக்கு ஆழந்த அனுதாபங்கள்.." - காந்தராஜ் பேட்டி

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

பரக

 

குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் குஜராத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ள பாஜக, இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் தோல்வி அடைந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் இரண்டு மாநிலங்களிலும் பாஜகவே வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாகக் காங்கிரஸ் இமாச்சல் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் விமர்சகர் மருத்துவர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இரண்டு மாநில தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் வரலாற்று வெற்றியை பாஜக பெற்றுள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

தேர்தலுக்கு முன்னாடியே ரிசல்ட் குஜராத்தில் இப்படித்தான் வரும் என்று எதிர்பார்த்தது தானே, இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. பாஜகவுக்கு எதிராக வாக்கு அளிக்க நினைத்தால் கூட முடியாது, அதான் தேர்தலுக்குப் பிறகு பாஜக கண்டிப்பாக வெற்றிபெறும் என்று சொன்னார்களே, அதுமாதிரி தான் நடந்திருக்கு. குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக யாராவது நினைத்தாலும் வாக்களிக்க முடியுமா? நான் பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளேன் என்று வெளியே வந்து கூறினால் அவரால் வீட்டிற்குச் செல்ல முடியுமா? தங்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று தெரிந்த எவரையும் ஓட்டுப்போடவே விடமாட்டார்கள். இதுதான் அங்கு நடந்திருக்கும். ஆனால் பத்திரிகைகளில் அதெல்லாம் வந்திருக்காது. அவங்க கையில்தான் எல்லாமே இருக்கிறதே.

 

இதற்குச் சின்ன உதாரணம் சொல்கிறேன், பெஸ்ட் பேக்கரி சம்பவத்தில் பலரை உயிரோடு கொளுத்தினார்கள். அப்போது அந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த பெண் நடந்த சம்பவத்தை முதலில் நீதிமன்றத்தில் கூறினார், ஆனால் அதன் பிறகு அவரே நீதிமன்றத்தில் அந்த மாதிரியான ஒரு சம்பவத்தை நான் பார்க்கவே இல்லை என்று மாற்றிக் கூறினார். அந்த மாதிரி அனைத்தையும் மாற்றும் வல்லமை அவர்களுக்கு உண்டு. குஜராத் என்பது ஆர்எஸ்எஸ் தாயகம். எனவே அவர்கள் என்ன நினைத்தாலும் செய்வார்கள்.அதை யாராலும் மாற்ற முடியாது. அவர்கள் நினைத்ததை எல்லாம் செயல்படுத்துவார்கள். 

 

மாநில தேர்தல் ஆணையமும் அவர்களுடையது; இந்தியத் தேர்தல் ஆணையமும் அவர்களுடையது என்ற நிலையில் முடிவு அவர்களுக்குச் சார்பாகத்தான் வரும். வாக்கு வித்தியாசத்தை பாருங்க, எப்படி ஜோதி பாசு அவர்களை எதுவுமே செய்ய முடியால் இருந்ததை போல் இவர்கள் இருக்கிறார்கள். எப்படி அங்கு மம்தா பானர்ஜி என்ற ஒருவர் வந்து அவர்களைக் காலி செய்தாரோ அதைப்போல இங்கும் ஒருவர் வருவார்; அதுவரை பொறுத்திருங்கள். அதுவரை குஜராத் மக்கள் காத்திருக்க வேண்டியதுதான். அந்த நாள் வரும் வரை குஜராத் மக்களுக்கு நம்முடைய அனுதாபங்கள். தொடர்ந்து யாருமே கஷ்டத்தில் இருக்கமாட்டார்கள்; எனவே அவர்களுக்கும் கூடிய சீக்கிரம் விடிவு காலம் வரும். 

 

நான் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே கூறியிருந்தேன். தேர்தல் முடிவுகள் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதானே, எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்த 25, 30 இடங்களில் வந்திருப்பார்களா? இதுவே பெரிய ஆச்சரியம். இந்த அளவுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு எப்படி விட்டுக்கொடுத்தது என்றால், நாங்களும் தேர்தலை ஒழுங்கா நடத்தினோம் என்ற பேருக்காக இத்தனை இடங்களை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கியிருக்கிறார்கள் போல, தெளிவாக ஒன்றைச் சொல்கிறேன் மக்கள் வாக்களிப்பது வேறு, தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்கிறது வேறு. இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் பிரதமர் மோடி நடைப்பயணம் எல்லாம் போய் இருக்கிறார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நான் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டேன் என்பதைக் காட்டிக்கொள்ளும் பொருட்டு இதைச் செய்துள்ளார்.

 

இந்த முடிவு பெரும்பாலும் அரசியல் அறிந்த யாருக்கும் பெரிய அதிர்ச்சியைக் கொடுக்காது. இந்த தேர்தல் முடிவில் எனக்குச் சிறிய அதிர்ச்சி என்றால் வழக்கமாக குஜராத் தேர்தல் முடிவுகள் என்பது ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகள் அதிகமாக வெற்றிபெறுவதைப் போல் காட்டி மதியம் இருவரும் சமம் என்பதைக் கொண்டு வந்து முடிவில் பாஜக வெற்றிபெற்றது என்று சொல்லுவார்கள். ஆனால் தற்போது எடுத்த எடுப்பிலேயே பாஜக வெற்றி பெற்றுள்ளது என்று கூறிவிட்டார்கள். இதுதான் இந்த முறை நடைபெற்ற புதிய ஆச்சரியமான விஷயம். மற்றபடி இந்த வெற்றி என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். குஜராத் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 

 

 

Next Story

பிரதமர் இல்லம் முற்றுகை; ஆம் ஆத்மியினர் குண்டுக்கட்டாக கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Siege of Prime Minister's House; Aam Aadmi Party Arrested for Bombing

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சியினர் எடுத்து வருகின்றனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர்  முற்பட்டனர். ஆனால் காவல்துறை சார்பில் அதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாக உள்ளது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.