Skip to main content

உலகப் பெருமையை பெற்ற இஸ்ரோ சிவன்! 

Published on 12/07/2020 | Edited on 12/07/2020
nagercoil tamil nadu

                                   

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக இருப்பவர் தமிழரான சிவன்! சர்வதேச அளவில் பெருமை மிக்க, வோன் கர்மான் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனை அறிந்து, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பலரும் சிவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 


                       
உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சிகளில் சிறந்து விளக்கும் விஞ்ஞானிகளை தேர்வு செய்து அவர்களை கௌரவப்படுத்தி வருகிறது ஸ்வீடன் நாட்டில் உள்ள இண்டர்நேசனல் அகடமி ஆஃப் அஸ்ட்ரோநாடிக்ஸ் நிறுவனம். 


  
                            
அறிவியல் உலகில் பல அங்கீகாரங்களைப் பெற்றது இந்த நிறுவனம். பெருமை மிகு இந்த அறிவியல் சொசைட்டியின் செயல்பாடுகள் உலக அளவில் பிரசித்திப்பெற்றவை. இந்த நிறுவனம், ஆண்டு தோறும் உலக அளவில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளில் ஒருவரை தேர்ந்தெடுத்து ’வோன் கர்மான் ‘ என்கிற விருது வழங்கி விஞ்ஞானிகளைப் பெருமைப் படுத்தி வருகிறது. 
    


                       
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான வோன் கர்மான் விருதிற்கு இஸ்ரோ சேர்மனான விஞ்ஞானி சிவனை தேர்ந்தெடுத்துள்ளது அந்த நிறுவனம். பிரான்ஸ் நாட்டில் 2021 மார்ச் மாதம் நடக்கும் பிரமாண்ட விழாவில் இந்த விருது சிவனுக்கு வழங்கப்படவிருக்கிறது. விண்வெளித்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் கௌரவ விருது இது! 


                         

சர்வதேச நாடுகளில் உள்ள புகழ்ப்பெற்ற விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினரால், சீராய்வு செய்யப்பட்டு, திறமைகள் அடிப்படையில் சிறந்த விஞ்ஞானியை இந்த விருதுக்கு தேர்வு செய்வர். அதன் அடிப்படையில் பெருமைமிகு இந்த விருதுக்கு சிவன் தேர்வு செய்யப்பட்டிருப்பது இஸ்ரோவுக்குப் பெருமை. விருதுகள் சிவனுக்கு புதிதல்ல ! 35 வருட அறிவியல் பயணத்தில் எண்ணற்ற கௌரவங்கள், பெருமைகள், விருதுகள் பல சிவனை அலங்கரித்துள்ளன. அந்த வரிசையில், இந்த விருது ஓர் உலக அங்கீகாரம்  என்கிறார்கள் தமிழக விஞ்ஞானிகள்!.

 

 

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.