Skip to main content

கொலையா; தற்கொலையா? - வட மாநிலத் தொழிலாளி மரணத்தில் நக்கீரன் கள ஆய்வு

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

Sivakanchipuram issue Nakkheeran Field report

 

த்தம் கேட்டு வந்த தொழிலதிபர் மோகனின் மகன் ஜீவன் மற்றும் அவர்களின் ஊழியர்களுடன் சேர்ந்து அந்த மர்ம நபரைப் பிடித்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்து மயங்கி கீழே விழ... இதுகுறித்து சிவகாஞ்சிபுரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸ் எஸ்.ஐ. மகேந்திரன், வட மாநிலத்தவரைப் போலிருந்த அந்த மர்ம நபர், குற்றுயிரும் குலையுயிருமாக இருந்ததால், உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

 

இதையடுத்து போலீசார், அந்த மர்ம நபர் வலிப்பு வந்து இறந்ததாகவும், சம்பவம் நடந்த வீட்டுக்கு வெளியே ராதா பார்ட்டி ஹால் அருகே மயங்கிக் கிடந்ததாகவும், சிகிச்சைக்காக போனபோது அவர் இறந்துவிட்டதாகவும், தற்போது காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அவருடைய பிணம் இருப்பதாகவும், அந்த நபரைப் பற்றிய விவரம் தெரிந்தால் சிவகாஞ்சிபுரம் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருக்கு தகவல் கொடுக்கும்படி, காஞ்சிபுரம் முழுக்க போஸ்டர் ஒட்டி, இந்த கொலை வழக்கை இயற்கை மரணமாக மாற்றிவிட்டனர் என்றும், இதற்கென பெருந்தொகை வாங்கியுள்ளனர் என்றும் பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் நக்கீரனுக்கு தகவலாகக் கொடுத்தார்.

 

இதையடுத்து, இவ்விவகாரம் குறித்து விசாரிக்க நக்கீரன் களமிறங்கியது. சம்பவம் நடந்த இடத்திற்கு அருகாமையிலிருந்த ராதா பார்ட்டி ஹால் வாட்ச்மேன் மணியிடம் இதுகுறித்து விசாரித்தோம். “ஆமாங்க அன்னைக்கு போலீஸ் நிறைய பேர் வந்திருந்தாங்க, ஆம்புலன்ஸ் வந்துச்சு, யாரோ ஒரு ஆளு மோகன் சார் வீட்ல திருடப்போனதாகவும், அப்ப துரத்தியபோது கீழ விழுந்து அடிபட்டதாகவும் சொன்னாங்க” என்று மட்டும் கூறினார்.

 

Sivakanchipuram issue Nakkheeran Field report

 

இதுதொடர்பாக தொழிலதிபர் மோகனின் மகன் ஜீவனிடம் பேசினோம். “சார் யாரும் கொலையெல்லாம் பண்ணல. என்ன சார் காமெடி பண்றீங்க. அன்னைக்கு வீட்டுக்கு யாரோ தெரியல, வடநாட்டுக்காரன் மாதிரி இருந்தான். மாடி ஏறி வந்தான், கீழே கொண்டு வந்துவிட்டு, போலீஸுக்கு ஃபோன் செய்தேன். அதுக்குள்ள மயக்கம் போட்டு விழுந்துட்டான். 108 ஆம்புலன்ஸுக்கு நான்தான் ஃபோன் பண்ணேன். வந்ததும் ஏத்தி அனுப்பி வச்சேன். நான் அடிச்சு கொன்னுட்டேன்னு சொல்றீங்களே? என்ன சார் நியாயம்?” என்று படபடத்தபடி தொடர்பைத் துண்டித்தார். ஜீவன், சம்பவம் நடந்த பழைய ரயில்வே ரோட்டில் திருமலா டிஎம்டி என்ற ஹார்ட்வேர்ஸ் கடையை அவருடைய அப்பாவோடு சேர்ந்து கவனித்து வருகிறார். அங்கே நேரில் சென்று கேட்டபோது இருவரும் வெளியே சென்றுள்ளதாகக் கூறினார்கள்.

 

சம்பவம் தொடர்பாக தொழிலதிபர் மோகனை தொடர்பு கொண்டோம். ஃபோனை எடுத்த பெண் ஒருவர், “என்ன விஷயம்” என்று கேட்டார். “போன ஏப்ரல் 15 ஆம் தேதி உங்க வீட்டுக்கு ஒரு திருடன் வந்ததாகவும், அவனை நீங்கள் அடித்ததால் செத்துப் போனதாகவும் சொல்கிறார்களே?” என்று கேட்டோம். அதற்கு அந்த பெண் “நாங்க அடிச்சதால அவன் செத்துட்டானா?” என்று கேட்டபடி, மோகனிடம் கொடுத்தார். அவரோ, “சார் எதுவா இருந்தாலும் நேர்ல வாங்க, ஃபோன்ல எல்லாம் பேச முடியாது” என்றபடி தொடர்பைத் துண்டித்தார்.

 

சம்பவம் தொடர்பாக சிவகாஞ்சிபுரம், காவல் ஆய்வாளர் விநாயகத்திடம் பேசினோம். “அங்க ஒருத்தர் இறந்து போனார் என்பது உண்மை. ரொம்ப உடம்பு சரி இல்லாததாலன்னு தகவல் வந்துச்சு. போஸ்டர்லாம் ஒட்டி அவரைப்பத்தி விசாரிச்சிட்டு வர்றோம். உடனே கொலைன்னு சொல்ல முடியாது. நாங்க விசாரிச்சு அப்படியிருந்தா கைது செய்வோம்” என்று தொடர்பை துண்டித்தார். சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் எஸ்.பி. சுதாகரை செல்போனில் தொடர்பு கொண்டபோது எடுக்கவேயில்லை. இது தொடர்பாக வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணனை தொடர்பு கொண்டோம். "இவ்வழக்கு தொடர்பாக உடனடியாக விசாரிக்கச் சொல்கிறேன்'' என்று உறுதியளித்தார்.

 

Sivakanchipuram issue Nakkheeran Field report

 

மேலும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிணவறை ஊழியரான முருகனிடம் ரகசியமாகக் கேட்டோம். “பாவம் சார். இந்திக்காரன் போல இருக்கு. செத்து 30 நாள் ஆச்சு. இன்னும் இவனோட சொந்தக்காரன் யாரும் வந்து பாடிய வாங்கல. என்ன பண்ணி சாவடிச்சான்னு தெரியல. பிழைப்பத் தேடி வராங்க. இதுபோல கொலை செஞ்சாக்கூட கேட்க நாதியில்லாம அனாதைப் பொணமா போறாங்க” என்று புலம்பினார். குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டிய காவல்துறையே ஒரு கொலையை இயற்கை மரணமாக மாற்ற முயன்றிருப்பதை உணர முடிந்தது.

 

இந்நிலையில் இவ்விவகாரம் பெரிதாவதை உணர்ந்தவர்கள், 20 நாட்களாகக் கேட்பாரற்று இருந்த உடலை எடுத்துச் சென்று தகனம் செய்துவிட்டனர். இதன்மூலம் இவ்விவகாரத்தில் உண்மை சாம்பலாக்கப்பட்டுள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த குடுமி பிடி சண்டை; காவல் நிலையம் முன்பு  பரபரப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

nn

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரைச் சேர்ந்தவர் வாலிபர் ஒருவர். இவர் நகரின் மையப் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, பெற்றோர், தம்பி ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.

 

இந்நிலையில் வாலிபருக்கும் அவரது நண்பனின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது, நாளடைவில் முறையற்ற தொடர்பாக மாறியதால் வாலிபர் வீட்டை விட்டு வெளியேறி நண்பனின் மனைவியுடன் வேறு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இரண்டு பேரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் வாலிபரின் தந்தை திடீரென உயிரிழந்து விட்டார். தந்தையின் இறுதிச்சடங்குகள் செய்ய வாலிபர் தனது வீட்டிற்கு சென்றார். இறுதி சடங்குகள் முடிந்ததும் வாலிபரின் மனைவி, கணவரை முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணின் வீட்டுக்கு மீண்டும் செல்லவிடாமல் தடுத்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

 

கடந்த ஒரு வார காலமாக வாலிபருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண் அவரை பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை,  அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பெண் வாலிபரை பல இடங்களில் தேடினார். அப்போது அவர் தனது முதல் மனைவியுடன் வேறு ஒரு இடத்தில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற அப்பெண் வாலிபர் வசித்து வரும் வாடகை வீட்டின் கண்ணாடிகளை கல் வீசி தாக்கியதோடு அங்கேயே கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து புகார் அளிப்பதற்காக சம்பந்தப்பட்ட செல்போன் கடை வாலிபர் தனது முதல் மனைவியுடன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு வாலிபர் புகார் அளிக்க வந்திருப்பது குறித்து தெரிந்தது, உடனே அவர் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தார். அப்போது அங்கு வந்து இருந்த  வாலிபரை பிடித்த அந்தப்பெண் 'என்னுடன் வாழு வா' என சட்டையை பிடித்து இழுத்தார். அவர் வர மறுத்ததால் அவரை தாக்கினார்.

 

இதை பார்த்து கோபமான வாலிபரின் மனைவி, 'என் கணவரையா அடிக்கற' என கணவரின் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணை தாக்கினார். இது நகர காவல் நிலையம் முன்பாக  நடைபெற்றது. இரண்டு  பெண்களும் காவல் நிலையம் முன்பாக கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியான போலீசார், அவர்களை சமாதானம் செய்ய வந்து அடித்துக்கொண்ட இருவரையும் விலக்கி விட்டனர். அவர்கள்  போலீசாரையும் தள்ளிவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

 

இதனை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசாரும், அங்கேயே உள்ள அனைத்து மகளிர் பெண் போலீசாரும் ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பினர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பெண் விவசாயியை வெட்டிய வடமாநில இளைஞர்; வெளுத்து வாங்கிய கிராம மக்கள்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

North State Youth attack Female Farmer; Bleached villagers

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று வழக்கம்போல் தனது விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார். அப்போது, அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மனையை கொண்டு திடீரென மகாலட்சுமியின் கையில் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. 

 

இதனை தொடர்ந்து, மகாலட்சுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அந்த ஊர் பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த வடமாநில இளைஞர் அங்கிருந்து தப்பிச்  சென்று அருகில் உள்ள ஒரு வீட்டின் மாடி பகுதியில் ஒளிந்துகொண்டார். இதனையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரை பிடிப்பதற்காக அருகில் சென்ற போது அரிவாள்மனையால் தாக்க முயன்றார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிடிக்க முடியாமல் அந்த இளைஞரிடம், ஹிந்தி மொழி தெரிந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர், இளைஞர் அருகில் சென்று நைசாக பேச்சு கொடுத்து கூல்டிரிங்க்ஸ் கொடுத்து சமாதானப்படுத்தினார். மேலும், இளைஞர் தனது கையில் வைத்திருந்த ஆயுதத்தை சாதுர்யமாக வாங்கி அப்புறப்படுத்தினார்.

 

இதையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்து சரிமாரியாக தாக்கினர். இதில், அந்த இளைஞருக்கு ரத்த காயம் ஏற்பட்டதை அடுத்து ஆட்டோவில் ஏற்றி, அவரை அழைத்து சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, பொதுமக்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டதில் அந்த இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயம் பார்த்து வந்த பெண்மணியை வடமாநில இளைஞர் ஒருவர் அரிவாள்மனையால் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்