Skip to main content

பாடகி பவதாரிணி மறைவு; கலங்கி நிற்கும் திரையுலகினர்!

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
Singer Bavatarini  issue The film industry is worried

பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாகப் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இலங்கையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி ஜனவரி 25 ஆம் தேதி மாலை உயிரிழந்துள்ளார். கடந்த 1984 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மை டியர் குட்டிச்சாத்தான் என்ற திரைப்படம் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பவதாரிணி.

அதன் பின்னர் கடந்த 1995 ஆம் ஆண்டு பிரபுதேவா நடித்த ராசய்யா படத்தின் மூலம் தமிழில் பாடல்கள் பாடத் துவங்கினார். அந்தப் படத்தில் மஸ்தானா மஸ்தானா என்ற பாடலைப் பாடி அசத்தியது மட்டுமல்லாமல் முதல் பாடலிலேயே தனக்கென பல ரசிகர்களை உருவாக்கினார். இவ்வாறு, தமிழ் சினிமாவில் பல சிறப்பான பாடல்களைத் தன்னுடைய தந்தை மற்றும் சகோதரர்களின் இசையிலும் மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் அழகாகப் பாடியிருக்கிறார். கேட்பவர்களை எல்லாம மயக்கும் குரலுக்குச் சொந்தக்காரரான இவருக்கு, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல ஆண்டுகளாகப் பின்னணி பாடகியாக மட்டுமே வலம் வந்த பவதாரிணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இசையமைக்கவும் தொடங்கினார். இவ்வாறு மொத்தம் 10 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து தன்னை ஒரு இசையமைப்பாளாராகவும் நிரூபித்துக் காட்டியவர்.

vck ad

இதனையடுத்து, கடந்த 2005 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த ஆர். சபரிராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர் பிரபல பத்திரிகையாளர் ராமச்சந்திரனின் மகன் ஆவார். கணவர், சபரிராஜ் சென்னையில் பிரபல விளம்பர நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். மேலும், ஹோட்டல் பிசினசிலும் ஈடுபட்டுள்ளார். ஆனால், இந்தத் தம்பதியருக்கு பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லை. ஆனாலும் இருவரும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்தனர். பவதாரிணி, பாரதி என்ற திரைப்படத்தில் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு பாடல் பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானது. அதுமட்டுமல்லாமல் இந்தப் பாடலுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

Singer Bavatarini  issue The film industry is worried

கடந்த 2002 ஆம் ஆண்டு ஆங்கிலப்படம் ஒன்றிற்கு இசை அமைத்து இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தார் பவதாரிணி. பின்னர், 2003 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அவுனா படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்தியில் ஷில்பா ஷெட்டி நடித்த பிர்மிலேஜ் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படியே பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வந்த பவதாரிணி, கடைசியாக 2019 ஆம் ஆண்டு வெளியான மாயநதி படத்திற்குப் பிறகு 3 படங்களுக்கு இசை அமைக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அதற்குள் இந்தக் குயில் பாட்டுக்கு சொந்தக்காரரை காலம் எடுத்துக்கொண்டது. இசைஞானி இளையராஜாவின் செல்ல மகளான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்கோலாறு ஏற்பட்டது.

இது தொடர்பாக மருத்துமனைக்கு சென்றபோது அவருக்கு புற்றுநோய் வந்திருப்பதாகக் கூறி மருத்துவர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இதனால், அதிர்ச்சியில் உறைந்த இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தார், அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டுமென்று தீவிர முயற்சி எடுத்துள்ளனர். அதன்படி, இந்த நோய்க்கு இலங்கையில் சிறந்த மருத்துவம் அளிப்பதாகத் தெரிந்துள்ளது. இதனையடுத்து, பவதாரிணிக்கு ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்வதற்காக அவரது குடும்பத்தினர் இலங்கை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி கடந்த 26 ஆம் தேதி மாலை 5.20 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தியைக் கேட்டு அவரது குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

Singer Bavatarini  issue The film industry is worried

இந்தச் செய்தி தமிழ் திரையுலகத்தினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே, இசைஞானி இலங்கையில் இருந்த காரணத்தால் இந்தத் தகவல் வெளியான உடனே, மகள் சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து, அவரின் குடும்பாத்தார் அனைவரும் இலங்கை சென்றுள்ளனர். அங்கிருந்து 26 ஆம் தேதி மாலைக்குள் சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு உடலை எடுத்து வருவார்கள் எனச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இளையராஜாவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாகக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள். பிரபல பாடகி பவதாரிணி மறைந்த செய்தி திரைத்துறையினரை மட்டுமல்லாது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

- அருள் வைரா 

Next Story

மரணத்திற்குப் பிறகும் உலகை காணும் டேனியல் பாலாஜி 

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
 Daniel Balaji sees the world again

வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, பைரவா, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் டேனியல் பாலாஜி(48). திருவான்மியூரில் தனியாக வசித்து வந்த நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். டேனியல் பாலாஜியின் மறைவு செய்தி அறிந்த இயக்குநர்கள் கௌதம் மேனன், வெற்றிமாறன், அமீர் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது. டேனியல் பாலாஜியின் மறைவு திரைத்துறை வட்டாரத்தில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். டேனியல் பாலாஜி ஏற்கனவே கண்களை தானம் தானம் செய்திருந்த நிலையில் அவருடைய கண்கள் தானமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

Next Story

12 வயது நவ்யா உமேஷ் பாடியுள்ள இறைவி பாடல்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
12 year old Navya Umesh sung iraivi album

சர்வதேச செஸ் ஒலிம்பியாட், குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட், கேலோ இந்தியா என குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மட்டுமல்லாது மாவீரன், ஜெயிலர், ஜவான் மற்றும் லால் சலாம் படங்களின் ஆடியோ லான்ச், எனப் பல நிகழ்வுகளை வெற்றிகரமாக நிகழ்த்திய கலை இயக்குநரும் நிகழ்வு மேலாளருமான உமேஷ் ஜே குமார் மற்றும் நிகழ்வு மேலாளர் ராகிணி முரளிதரன் ஆகியோரின் மகள் நவ்யா உமேஷ்.

ஏழாம் வகுப்பு படித்து வரக்கூடிய இவர், பாடி நடித்த ‘இறைவி’ பாடல் மகளிர் தின கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது. வெங்கடேசன் இயக்கியுள்ள இப்பாடலை நவ்நீத் சுந்தர் இசையமைத்துள்ளார். சமூக தொழில் முனைவோர் தீப்தி வரிகளை எழுதியுள்ளார். ‘என்ஜாய் எஞ்சாமி’ மற்றும் ‘கட்சி சேரா’ போன்ற வைரல் வீடியோக்களுக்கு நடனம் அமைத்த ‘தி டான்சர்ஸ் கிளப்’ இந்தப் பாடலுக்கான நடனம் அமைத்துள்ளனர். சோனி மியூசிக்கில் மகளிர் தினத்தன்று வெளியாகியுள்ள இந்தப் பாடலை, இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.