Skip to main content

இடவசதி குறைவு... தவிக்கும் வாசகர்கள்...

Published on 28/08/2019 | Edited on 28/08/2019

 


கள்ளக்குறிச்சி நூலகம் இடப்பற்றாக்குறையால் பல மாதங்களாக மலைபோல் புத்தங்கள் குவிந்துள்ளன. இவற்றை கிளை நூலகங்களில் அடுக்கி வைக்க, போதிய இட வசதி இல்லாமல் உள்ளதுடன், வாசகர்கள் அமர்ந்து படிக்கவும் முடியாத அவல நிலையுடன் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், பட்டதாரி இளைஞர்கள் உள்பட பெரும்பாலானவர்கள் நூலகங்களில் வாசிப்பதற்காக வருகிறார்கள். பொழுது போக்கிற்காகவும், ஆன்மிகம், கவிதை மற்றும் கட்டுரைகள் இலக்கியம் படிக்கும் இடமாகவே இருந்து வந்தது நூலகம். தற்போது யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., ஆசிரியர் போட்டித் தேர்வு உட்பட பல அரசுப் பணி தேர்வுகளுக்கான பாடப் புத்தகங்கள் படிக்கவும் நூலகங்களை பயன்படுத்துகிறார்கள். வேலை தேடுவோர் அதிகளவில் நூலகங்களுக்கு வருகின்றனர். நூலகங்கள், பொது மக்கள் அதிகமாக பயண்படுத்தும் இடமாகவும் மாறி வருகிறது.

 

book

 

இணையதளம் வசதிக்காக கம்ப்யூட்டர்களும், நகல் எடுக்க ஜெராக்ஸ் மிஷின்களும்,  நூலகங்களில் உள்ளன. குறைந்த கட்டணத்தில் சேவைகள் கிடைப்பது, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவியாக உள்ளது.

 

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட நூலகங்களுக்கு சொந்த கட்டங்கள் உள்ளன.  ஆனால் மாவட்ட  அளவிலுள்ள கள்ளக்குறிச்சி நூலகத்திற்கு மட்டும் சொந்த கட்டடங்கள் இல்லை. வாடகை கட்டிடத்தில் நூலகங்கள் இயங்கி வருகின்றன. இதனால் பொது மக்கள் எளிதில் சென்று பயன்படுத்திக் கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். கள்ளக்குறிச்சி்யை தனியாக பிரித்து மாவட்டத்தின் தலைநகராக மாறிவுள்ள நிலையில், இங்குள்ள நூலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்குவது வாசகர்களுக்கும், கள்ளக்குறிச்சி பகுதி மக்களுக்கும் மிகுந்த வருத்ததை ஏற்படுத்தியுள்ளது. இந்த நூலகத்திற்க்கு விரைவில் சொந்தக் கட்டடம் அமைக்க வேண்டும். இந்த கிளை நூலகத்தைமாவட்ட மைய நூலகமாக்க வேண்டும் மற்றும் ஒரு கிளை நூலகம் அமைக்க வேண்டும்.



 

ஆண்டு தோறும்  நூலகத்திற்கும்  நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அரசு மூலம் வழங்கப்படுகின்றன. இவற்றை கிளை நூலகத்தில் அடுக்கி வைப்பதற்கே இடம் இல்லாமல், தற்போது இயங்கி வரும் நூலகம் குறைவான இடத்திலேயே இயங்குகிறது.  இட வசதியுடன் கூடிய புத்தகங்களை உரிய முறையில் அடுக்கி வைத்து, வாசகர்கள் பயன்படுத்தும்  நிலையில் இட வசதியுடன் தற்க்காலிகமாக வாடைகை கட்டடத்தை ஏற்படுத்தி தரப்பட வேண்டும்.

 



கள்ளக்குறிச்சியில் மாவட்ட மைய நூலகம் ஏற்படுத்தவும் தற்போது  வாடகை கட்டத்தில் இயங்கும் நூலகத்திற்க்கு சொந்த கட்டடங்கள் கட்டவும்,  நூலகங்களை விரிவான பகுதிகளுக்கு மாற்றவும் மாவட்ட ஆட்சியர், கோட்டாச்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வழக்கறிஞரான இல.ஜெயச்சந்திரன்(எ)வெற்றி நிலவன், தமது கருத்தை பதிவு செய்துள்ளார். மேலும் புத்தகம் படிப்பதன் மூலம் பல அறிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் மனிதன் படித்து எத்தனை பட்டங்கள் வாங்கியிருந்தாலும் பல்வேறு புத்தககங்களை வாசிப்பதன் மூலம் அறிவு விசாலாமடையும், மனித நேயம் வளரும், எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் திறமை, துணிவு வரும். மொத்தத்தில் சிகரம் தொட்ட மனிதர்கள் சாதனையாளர்கள் உலகம் பாராட்டிய தலைவர்கள் எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் என அனைவருமே புத்தக வாசிப்பின் மூலமே வெற்றி பெற்றனர் என்பது வரலாறு சொல்லும் உண்மை. எனவே கள்ளக்குறிச்சி தனிமாவட்ட மாக உதயமாகப் போகிறது மாவட்ட நூலகமாக மாறப்போவதை இப்போதே அதை சரி செய்யலாமே என்கிறார்கள் வாசகர்கள்.

 

 

 

Next Story

“மதுரை எய்ம்ஸ் போல் இல்லாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும்” - முதல்வர் பதிலடி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Unlike AIIMS Madurai will be completed in time CM response 

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி இன்று வரை நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தொடரில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 19 ஆம் தேதி (19.02.2024) தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார். மேலும் கடந்த 20 ஆம் தேதி (20.02.2024) 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட விவசாயிகள் தொடர்புடைய திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அதே சமயம் பொது நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்தன.

அந்த வகையில் சட்டபேரவையில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவையில் நூலகம் அமைக்கப்படுவது தொடர்பாக நேற்று (21.02.2024) கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பதிலளிக்கையில், “சட்டமன்றப் பேரவையில் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றி இருக்கக்கூடிய உறுப்பினர்களுக்கு எல்லாம் மிகத் தெளிவாக, விளக்கமாக, விரிவாக அமைச்சர் தங்கம் தென்னரசு  பதிலளித்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரிய வகையில் அமைந்திருக்கிற காரணத்தால் என்னுடைய வாழ்த்துகளையும் மனதார நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நேற்றைய தினம் விவாதத்தின்போது சில குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த வினாவிற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார். ஆனால் அதேநேரத்தில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்  வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கைக்கு ஏன் பதில் சொல்லாமல் விட்டுவிட்டார் என்று எனக்குப் புரியவில்லை. அவர் ஒரு கோரிக்கையை வைத்திருந்தார். கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்துவிட்டு அது எங்கே அமையவிருக்கிறது, எவ்வளவு நிதி ஒதுக்கப் போகிறீர்கள், எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள், எப்போது அந்தப் பணிகள் முடிவடையும் என்று கேள்விகளைக் கேட்டிருந்தார். அது நிச்சயமாக உடனடியாக செயலாக்கத்திற்கு வரும். ஏனென்றால், இந்த ஆட்சி சொன்னதைச் செய்யும், சொன்னதைத் தாண்டியும் செய்யும், சொல்வதைத்தான் செய்யும்.

மதுரையில் எவ்வாறு உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறதோ, சென்னையில் கலைஞர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக ஏறுதழுவுதல் அரங்கம் அமையப் பெற்றிருக்கின்றனவோ, இன்னும் சில தினங்களில் நம்முடைய கலைஞர் நினைவிடம் அமையவிருக்கிறதோ, அதேபோல் அதுவும் சொன்னபடி நிச்சயமாக இந்த ஆட்சியில் நடக்கும். ஆனால்  வானதி சீனிவாசனுக்கு நான் ஒன்றை மட்டும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நிச்சயமாக மதுரையில் எய்ம்ஸ் (AIIMS) அறிவிக்கப்பட்டதைப்போல் இல்லாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும். அதுவும் குறிப்பிட்ட நாளையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அது திறக்கப்படும். திறப்பு விழா நிகழ்ச்சிக்கு உங்களுக்கு முறையாக அழைப்பு வரும். நீங்களும் வந்து விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டு விடைபெறுகிறேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

68 ஆண்டுகளைக் கடந்த பழமை வாய்ந்த நூலகத்திற்கு புதிய கட்டடம்!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
68 years old library in Chidambaram gets new building at Rs 48 lakh
கோப்புப்படம்

சிதம்பரம் நகரத்தின் 68 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த  காசு சிதம்பரம் கிளை நூலகம் முதலில் காசுகடைத்தெரு, பின்னர் சின்ன காஜியார் தெருவில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அந்தக் கட்டிடம் பழுது ஏற்பட்டு மழைக்காலங்களில் மழை நீர் ஒழுகி பல லட்ச எண்ணிக்கையில் இருக்கும் புத்தகங்கள் வீணாகும் சூழல் ஏற்பட்டது. மேலும், நூலகத்திற்கு ஏற்ற சரியான இடவசதி இல்லாததால் நூலகத்தை அரசு இடத்தில் நவீன முறையில் அமைக்க வேண்டும் எனத் தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை தொடந்து 2014-ல் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போது மாநில செயலாளராக இருக்கும் கே. பாலகிருஷ்ணன் அதே நேரத்தில் சிதம்பரம் நகர மன்றத் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த பெளஜியா பேகம் இருந்த போது, நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே நகராட்சிக்கு சொந்தமான  4 ஆயிரம் சதுர அடி காலி இடத்தை நூலகம் கட்டுவதற்கு இலவசமாக தர வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதனடிப்படையில் அப்போதிருந்த நகர்மன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தீர்மானத்தின் பெயரில் 2014- ஆம் ஆண்டு நூலகம் கட்ட 4 ஆயிரம் சதுர அடி இடம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிளை நூலகமாக செயல்பட்ட நூலகம், வருவாய் கோட்ட நூலகமாக தரம் உயர்த்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில்  நூலகம் கட்ட அதிமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால், நூலகம் கட்டமுடியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சிதம்பரம் சார் ஆட்சியராக பணியாற்றிய மதுபாலன் சிதம்பரத்தில் நவீன முறையில் நூலகம் அமைய வேண்டும் என்ற நோக்கில் நமக்கு நாமே திட்டம் மூலம் சிதம்பரம் பகுதியில் உள்ள வணிகர்கள் சங்கம், நகை வியாபாரிகள் சங்கம், பொதுநல அமைப்புகளை ஒருங்கிணைத்து நூலகம் கட்டுவதற்கு மக்கள் பங்களிப்பு நிதியாக ரூ 16 லட்சம் நிதி திரட்டினார் .பின்னர் அவர் பணி உயர்வு பெற்று மதுரைக்கு சென்றுவிட்டார். 

இதனை தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுக்கு முன் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நூலகம் கட்ட நமக்கு நாமே திட்டத்தில் ரூ 32  லட்சம் மாணியமாக அரசு வழங்கியதால் மொத்தம் ரூ 48 லட்சத்தில் 1800 ச.அடியில் நூலகத்திற்கு தரைதளம் நவீன முறையில் கட்டப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 5-ந்தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நூலகத்தை திறந்து வைத்தார். இதனையொட்டி நூலகத்திற்கான சாவியை சம்பந்தபட்ட நூலகத்துறை ஆலுவலர்கள் அருள் மற்றும் ரகுநந்தனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதிய நூலக கட்டிடத்தில் ஜன 12-ந்தேதி மாலை நடைபெற்றது.

இதில் சிதம்பரம் நகர் மன்ற தலைவர் கே.ஆர் செந்தில்குமார் கலந்து கொண்டு நூலக சாவியை வழங்கினார். நகர்மன்ற துணைத்தலைவர் முத்துகுமரன், நகராட்சி ஆணையர் பிரபாகரன், பொறியாளர் மகாராஜன், நகர் மன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், ராஜன், கல்பனா மற்றும் திமுக நகர துணைச்செயலாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள், நகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.