Skip to main content

கஜா புயலின் தாண்டவம், வாஜ்பாய் மரணம், எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவு, ஆணவக்கொலைகள்... ஷாக்ஸ் 2018 பகுதி 2

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
vajpaayee


முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் உடல்நிலை சரியில்லாமல் ஆகஸ்ட் 16ஆம் தேதி காலமானார். 
 

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரியோ நகரத்தின் 200 வருட பழமைவாய்ந்த ராயல் அருங்காட்சியம் செப்டம்பர் 2ஆம் தேதி தீக்கிரையானது.
 

கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி பிஹாரிலுள்ள ஒரு மருத்துவமனையில் 11 வயது சிறுவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். அவரின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்காததை அடுத்து இறந்த மகனின் உடலை தோளில் சுமந்தபடி வீட்டுக்கு கொண்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

உலகின் மிகவும் வயதான மோபி டால்பின் தன்னுடைய 58வது வயதில் காலமானது.  
 

ranjan gogai

 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி தந்ததையடுத்து, பம்பை நிலக்கல் போன்ற பகுதிகள் போராட்டக்களமாக மாறியது.​​​


கடந்த அக்டோபர் 9ஆம் தேதி ஆளுநர் மாளிகையின் புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். 

பாரம்பரிய நெல் விதைகளை மீட்டு எடுத்த நெல் ஜெயராமன், கடந்த நவம்பர் மாதம் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாத சிகிச்சையை அடுத்து டிசம்பர் 6ஆம் தேதி காலமானார்.

 

amal hussein



ஏமனில் மனிதாபிமானம் அழிந்துவிட்டது என்பதை அடையாளப்படுத்தும் விதமாக அமல் ஹுசைன் என்கிற 7 வயது சிறுமியின் புகைப்படம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அச்சிறுமி நவம்பர் 1ஆம் தேதி காலமானார்.
 

பல சூப்பர் ஹீரோக்களின் வடிவங்களை உருவாக்கிய மார்வெல் காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ (95) உடல்நலக்குறைவால் கடந்த நவம்பர் 12ஆம் தேதி மறைந்தார். 
 

கடந்த நவம்பர் மாதத்தில் தமிழக டெல்டா பகுதிகளில் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடியது. இந்த புயாலால் பல விவசாயிகள் வீடுகள் இன்றி முகாமுக்கு தள்ளப்பட்டனர். சில கிராமங்களில் இன்றுவரை மின் வசதி வரவில்லை.
 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சூடைக் காந்த பள்ளி எனும் கிராமத்தைச்  சேர்ந்த சுவாதியும்,  இளைஞர் நந்தீஸ் என்பவரும் பல எதிர்ப்புகளை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். திருப்பூரில் தங்களது வாழ்க்கையை நடத்திவந்த இருவரும் 13.11.2018 அன்று கர்நாடகா, மாண்டியா பகுதியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். உடற்கூராய்வில் இருவரும் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதும், சுவாதி மூன்றுமாதக் கர்ப்பிணி என்பதும் தெரியவந்தது. இதுபோல் இன்னும் சில ஆணவக்கொலைகள் நடந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

கடந்த நவம்பர் 26ஆம் தேதி எழுத்தியல் அறிஞர், தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்.
 

gaya cyclone



கஜா புயல் பாதிப்பை உணர்ந்து பல மக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கை கொடுத்தார்கள். ஆனால், இக்கட்டான நிலையிலும் பாதிக்கப்பட்ட ஊர்களை சேர்ந்த சில வியாபாரிகள் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.200க்கும், 1 மெழுகுவர்த்தி ரூ.20க்கும் விற்ற அநியாயங்களும் நடந்தது.
 

தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் விஷால் 7கோடிக்கு முறைகேடு செய்துவிட்டார் என்று விஷாலின் எதிரணி தியாகராய நகரிலுள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். இதனை தொடர்ந்து அடுத்த நாள் அந்த பூட்டை உடைக்க வந்த விஷாலுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் விஷால் கைது செய்யப்பட்டார்.

 

prabanjan

 


வானம் வசப்படும், மானுடம் வெல்லும் போன்ற தமிழ் நாவல்களை எழுதிய எழுத்தாளர் பிரபஞ்சன் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி உடல்நல குறைவால் காலமானார். 
 

ராயபுரம் ஐந்து ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன், கடந்த டிசம்பர் 22ஆம் தேதி காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் முதல் பலர் தங்களது அஞ்சலியை தெரிவித்தனர்.
 

எழுத்தாளரும் தமிழ் அறிஞருமான க.ப.அறவாணன் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி சென்னையில் காலமானார்.
 

தெலுங்கானாவை சேர்ந்த பெண் அனுராதா என்பவர் பெற்றோரை எதிர்த்து கலப்பு திருமணம் செய்துகொண்டார். அதனால் கோபமடைந்த அனுராதாவின் பெற்றோர், அவரை வீட்டிற்கு கடத்தி வந்து தீக்கிரையாக்கி அந்த சாம்பலை நதியில் கலந்தனர். பின்னர், அந்த பெற்றோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இது மட்டும் இந்த வருடத்தில் நடந்த ஆணவக்கொலை அல்ல, தெலுங்கானாவிலேயே மூன்று பயங்கரமான ஆணவக்கொலைகள் இந்த வருடத்தில் நடந்திருக்கிறது.
 

மருத்துவ ஊழியர்களின் கவனக்குறைவினால் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஹெச்ஐவி வைரஸ் பாதித்த இரத்தத்தை ஏற்றினர். இதனால் அப்பெண்ணுக்கு ஹெச் ஐ வி தொற்று ஏற்பட்டது. இதை எதிர்த்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போதுதான் அதேபோல் எங்களுக்கும் நடந்துள்ளது என மெலும் சில பெண்கள் புகார் அளித்தனர். இது தமிழகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

 

முந்தைய பகுதி:

காவிரி தண்ணீர் என்றால் கண்டிப்பாக கிடைக்காது... கண்ணத்தை தொட்ட கவர்னர்... - ஷாக்ஸ் 2018 பகுதி 1

 

 


 

Next Story

ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து அதிரடி தாக்குதல்

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
US,UK incident on Yemen

மத்திய கிழக்கின் செங்கடல் வழியாக ஆப்பிரிக்கா, ஐரோப்பா நோக்கி பயணிக்கும் கப்பல்களுக்கு அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க் கப்பல்கள் அந்த பகுதிக்கு வந்துள்ளதுதான் இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ட்ரோன்களை பயன்படுத்தி கப்பல்களைத் தாக்குவது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து இரு நாடுகளும் தாக்குதல் நடத்துவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதற்குப் பதிலடியாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரான்  ஆதரவு  பெற்ற ஹவுதி இயக்கம் ஏமனிலும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஏமன் நாட்டின் தலைநகரான சனா, அல் ஹுதைதா, சத்தா, தாமர் ஆகிய நகரங்களின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. விமானம் மற்றும் கடற்படைகள் மூலம் ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்ட 12 மையங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் இந்த தாக்குதலுக்கு 10க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தேவைப்பட்டால் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவோம் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் இந்த தாக்குதலால் காசாவில் நடக்கும் போர் தீவிரமடையும் எனவும் அஞ்சப்படுகிறது. 

Next Story

வாஜ்பாய் பயோ பிக்கின் டீசர் வெளியானது

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
vajpayee biopic teaser released

இந்திய சினிமாவில் பல பயோ-பிக் படங்கள் வெளியாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு தற்போது படங்களாகவும், வெப் சீரிஸ்களாகவும் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழக்கையைத் தழுவி படங்கள் எடுக்கப்பட்டன. 

அந்த வரிசையில் பாஜகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் வாழ்க்கை படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் ரவி ஜாதவ் இயக்கியுள்ளார். இப்படத்தில் வாஜ்பாய் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி நடித்துள்ளார். இப்படத்தை பானுஷாலி ஸ்டுடியோஸ் மற்றும் லெஜண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த வருடம் வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி வெளியானது.  

மேலும், படத்தை இந்த ஆண்டு வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்படம் 2024 ஜனவரி 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ‘மெயின் அதல் ஹூன்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலர் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.