Skip to main content

“இன்னும் 10 நாட்களில் ஷிண்டே வெளியேற வாய்ப்பு...” - காந்தராஜ்

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

“Shinde likely to leave in 10 days..” - Kandaraj

 

மஹாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் குறித்து அரசியல் விமர்சகர் மருத்துவர் காந்தராஜை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம். அவர் நமக்கு அளித்த பதில்கள்.

 

எதிர்க்கட்சியான சரத் பவார் கட்சியிலிருந்து அஜித் பவார் வெளியே போய்விட்டாரே?

 

சரத் பவார் தன்னுடைய சொந்த மகளை உள்ளே சேர்த்தார். அதனால் அண்ணன் மகனான அஜித் பவார் இனி கட்சியில் இருந்து பிரயோஜனம் இல்லை என்று வெளியே சென்றுவிட்டார். இதோடு அஜித் பவார் மூன்றாவது முறையாகப் பதவி ஏற்றிருக்கிறார். அவர் அடிக்கடி வேறு வேறு கட்சிக்கு மாறுவார். இப்போது ஷிண்டே வெளியே போகப் போகிறார் என்று செய்தி வருகிறது. எத்தனை துரோகிகளைத் தான் பா.ஜ.க உருவாக்குவார்கள். முதலில் ஷிண்டே என்ற துரோகியை உருவாக்கினார்கள். அதே போல் இப்போது அஜித் பவார் என்ற துரோகியை உருவாக்குகிறார்கள். இதனுடைய விளைவு, பா.ஜ.க கட்சியில் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் இருக்கப் போவதில்லை மற்ற கட்சியினர் தான் இருக்கப் போகிறார்கள். இதன் மூலம், பா.ஜ.கவினர் தன்னுடைய தலையில் தானே மண்ணை வாரி இரைக்கப் போகிறார்கள்.

 

அந்த காலத்தில் கம்யூனிஸ்ட்கள் இந்தியாவிற்கு வரவே முடியாத நிலை இருந்தது. அப்போது வெற்றி பெறும் கட்சியில் இணைந்து அதிகாரத்தைக் கைப்பற்றி கம்யூனிசக் கொள்கைகளை பரப்பலாம் என்று திட்டம் போட்டார்கள். அந்த திட்டத்தினால் தான் மோகன் குமார் போன்றோர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்கள். அதில் வெற்றியும் பெற்று முக்கியமான இலாக்காக்கள் அனைத்தும் தன்வசம் வைத்திருந்தார்கள். அதே மாதிரி ஷிண்டேவும் அஜித் பவாரும் அந்த கட்சியில் இணைந்து அவர்களது கொள்கைகளை பரப்பக் கூடும்.  குலாம் நபி ஆசாத் போன்றோர்களை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். அவர் பரம்பரை பரம்பரையாக  காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர் தான். அவர்கள் உள்ளே சென்று காங்கிரஸ் கொள்கைகளை தான் பேசுவார்கள். அதனால் பா.ஜ.க கட்சி நீர்த்துப் போகப் போகிறது. இனி வரும் காலங்களில் பா.ஜ.க வில் உள்ளவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களாக தான் இருப்பார்கள்.

 

அஜித் பவார் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது போல் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்களுக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என்று முறையிடுகிறார்கள் என்று தகவல் வெளியாகியிருக்கிறதே?

 

ஏக்நாத் ஷிண்டே கூட அந்த கட்சியிலிருந்து வெளியே வர வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் பதவி வேண்டும் என்ற காரணத்தினால் தானே உத்தவ் தாக்கரை விட்டு வெளியே வந்தார். இப்போது அந்த பதவியையும் பாதி அஜித் பவாருக்கு கொடுத்துவிட்டால்  ஏக்நாத் ஷிண்டேவிற்கு என்ன மரியாதை இருக்கிறது. அதனால் இன்னும் 10 நாள்களில் வெளியே வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அஜித் பவார் கொண்டு வந்த ஆதரவாளர்களுக்கு பதவி கொடுத்து தன்னுடைய ஆதரவாளர்களுக்கு பதவி கொடுக்கவில்லை என்ற எண்ணம் ஷிண்டேவிற்கும் இருக்கும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.