Skip to main content

“அமெரிக்காவில் கெஞ்சிக் கூத்தாடித்தான் மோடிக்கு மரியாதை இருப்பதுபோல் காட்டுகின்றனர்” - ஷான் சங்கரன்

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

Shan Sankaran interview about Narendra Modi's US visit

 

மணிப்பூர் கலவரத்துக்குப் பிறகு இந்தியா குறித்த உலக நாடுகளின் பார்வை குறித்து ஷான் சங்கரன் நம்முடன் சில கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அவை பின்வருமாறு....

 

“அமெரிக்காவில் அனைவரும் சுதந்திரமாகப் பேச முடியும். தங்களுடைய அரசாங்கத்தையே விமர்சிக்க முடியும். இப்போது இங்கு மணிப்பூர் சம்பவத்துக்காக மோடியை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர்கள் உண்ணாவிரதம் இருக்கிறோம். எங்களுடைய போராட்டத்தில் பலர் கலந்துகொண்டனர். மணிப்பூர் விவகாரம் குறித்து அமெரிக்க பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் நடைபெறுகிறது. மணிப்பூர் விவகாரம் என்பது நம் அனைவருக்கும் ஒரு அபாய எச்சரிக்கை தான்.  மனிதாபிமானமே இல்லாத ஒரு சமூகமாக நாம் மாறி வருகிறோம் என்பதற்கான எச்சரிக்கை தான் மணிப்பூர் சம்பவம். 

 

தமிழ்நாட்டு மக்களே இந்தப் பிரச்சனை குறித்து நீண்ட காலம் பேசவில்லை. எங்கெல்லாம் பாஜக ஆட்சிக்கு வருகிறதோ, அங்கெல்லாம் இப்படிப்பட்ட கலவரங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பனான எனக்கு மணிப்பூர் கலவரம் குறித்த வீடியோ வெளிவந்த பிறகு தூக்கம் வரவில்லை. இங்கு காங்கிரஸ் கட்சியோடு இணைந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம். ராகுல் காந்தி அமெரிக்கா வந்தபோது அவருக்கான நிகழ்ச்சியை நான் ஒருங்கிணைத்தேன்.

 

மோடி என்பவர் பாசிசத்தின் குரலாக இருக்கிறார். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை. அதற்காகவும் சேர்த்தே நாங்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறோம். இந்துத்துவ அமைப்புகள் அமெரிக்காவில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அமெரிக்க அரசியல்வாதிகள் பலருக்கு அவர்கள் நிதியுதவி செய்கின்றனர். பலரிடம் கெஞ்சிக் கூத்தாடி தான் மோடிக்கு இங்கு மரியாதை இருப்பது போல் அவர்கள் காட்டுகின்றனர். நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற பிரதமர்கள் அமெரிக்கா வந்தபோது அவர்களுக்கு இங்கு மிகப்பெரிய மரியாதை கிடைத்தது. 

 

ராகுல் காந்தியின் அமெரிக்க வருகை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதை மறைப்பதற்காகத் தான் மோடியின் வருகையை இவர்கள் பெரிதுபடுத்தினர். ராகுல் காந்தி இங்கு வந்து பேசிவிட்டுச் சென்ற பிறகு அவர் மீது மக்களுக்கு நிறைய அன்பு ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் மோடியைக் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரை பாஜகவினர் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கினர். ஆனால் ராகுல் காந்தி மக்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தார். மோடி தனக்கு அனைத்துமே தெரியும் என்பது போல் நடந்துகொள்வார். ஆனால் ராகுல் காந்தி எது பற்றியாவது தனக்குத் தெரியவில்லை என்றால் அதை ஒப்புக்கொள்வார். 

 

ராகுல் காந்தி அமெரிக்கா வந்தபோது அவருக்கு எவ்வளவு வரவேற்பு இருந்தது என்பதற்கு அப்போது வெளிவந்த வீடியோக்களே சாட்சி. அவருடைய கருத்துக்கள் வெளிவராமல் தடுப்பதற்கு பாஜக அரசு எவ்வளவோ முயற்சி செய்தது. அதையும் மீறி இவ்வளவு பேருக்கு அது ரீச் ஆனது. மக்களிடம் அவருக்கு இருக்கும் மதிப்பு என்பது இயற்கையாக உருவானது. மோடிக்கு இருக்கும் மதிப்பு என்பது கட்டமைக்கப்பட்ட ஒன்று. அதற்காக அவர்கள் நிறைய பணம் செலவு செய்கின்றனர். அவர்கள் கட்டமைத்த பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக இப்போது சரிந்து வருகிறது. 

 

மணிப்பூரில் போராட்டங்கள் எப்போதும் நடைபெற்று வந்திருக்கின்றன. ஆனால் இதுபோன்ற படுகொலைகள் இப்போதுதான் நடக்கின்றன. அதானி போன்றவர்களுக்கு அங்கு இருக்கும் கனிம வளங்களின் மீது ஆசை வந்திருக்கிறது. அதற்காகவும் தான் இந்த இன அழிப்பு என்பது அங்கு நடத்தப்படுகிறது. இவ்வளவு நடந்தாலும் மோடி எதைப்பற்றியும் கருத்து சொல்லவில்லை. அவருக்கு அதானி தான் முக்கியம். 2024-ல் தான் வெளியே செல்வதற்கு முன் அதானியிடம் அனைத்தையும் கொடுத்துவிட வேண்டும் என்று அவர் நினைக்கிறார். முதல்வன் படத்தில் வரும் ரகுவரன் போல் தான் கலவரம் நடக்கட்டும் என்று மோடி வேடிக்கை பார்க்கிறார்”.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.