Skip to main content

அற்பம், அற்பம் ஆணாய் பிறப்பது அற்பம், அதிலும்... 

Published on 02/08/2018 | Edited on 02/08/2018
harassment


 

 

 

பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி கால,காலமாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது, வெவ்வேறு வடிவங்களில். அது இன்றும் அப்படியேதான் இருக்கிறது, நவீனமயமாக்கப்பட்டு. இன்னும் சொல்லப்போனால் அது ஒருபடி மேலேயே சென்றுள்ளது. கடந்த சிலநாட்களாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அதிகமாகியிருக்கிறது, ஏழு வயதான குழந்தை முதல், ஏழு மாதக் குழந்தைகள் வரை பாரபட்சமின்றி இந்த அத்துமீறல்கள் நடந்து வருகின்றன. 8 பேர் சேர்ந்து கர்ப்பிணி ஆட்டை கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கொலை செய்துள்ளதாக என்று சிலநாட்களுக்கு முன்பு ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

 

 

 

இது காவல்துறையினரை மட்டுமல்ல, செய்தியைக் கேள்விபட்ட அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. அந்தளவிற்கு ஆண்களின் மனநிலை கேவலமாகிவிட்டதா இல்லை அந்த அளவிற்கு பாலியல் வறட்சி இருக்கிறதா என்ற கேள்வி இங்கே எழுகிறது. வேலைக்கு செல்லும் பெண்கள் முதல் விளையாடச்  செல்லும் குழந்தைகள் வரை அனைவருக்கும் ஆபத்து இருக்கிறது. இதனால் பெண் குழந்தைகளை வெளியில் அனுப்புவதேற்கே பயப்படுகிறார்கள். தேசிய குற்ற ஆவணப் பணியகம் (NCRB) தகவலின்படி, 2014ம் ஆண்டில் 89,000க்கும் அதிகமான பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன. 2015ம் ஆண்டில் 94000 அதிகமான வழக்குகளும், 2016ம் ஆண்டில் 1,00,000 ற்கும் அதிகமான வழக்குகளும், பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

போக்ஸோ சட்டத்தின் கீழ் பல்வேறு தண்டனைகளும், அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் சிறப்புகளில் ஒன்று, இச்சட்டத்தின்படி, பாதிக்கப்பட்டவருக்கு தெரியாதவர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதைவிட, தெரிந்தவர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் அவர்களுக்கு தண்டனை அதிகம். 12 வயதிற்குட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டால் இனி தூக்கு தண்டனை வழங்கப்படும், முன் ஜாமீன் வழங்கப்படமாட்டாது என்று சட்டம்  தற்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடுமையான சட்டங்களும், பாலியல் வன்முறைகளை தடுக்க அரசு எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்கிறதோ அதைவிட பத்து மடங்கு அதிகமாக ஒவ்வொரு தனிமனிதனும் தனது சுயஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்ற தொடர் தலைப்பில் உள்ளது போல் மாறிவிடும்.

 

 

 

 

 

Next Story

கோவிலுக்குச் சென்ற போது நேர்ந்த சோகம்; பெண்கள், மாணவிகள் 4 பேர் பலி

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
4 women who went to the temple drowned in the water and passed away

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா( 45) அவரது மகள் லலிதா (22). அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காவியா (18) அவரது 17 வயது தங்கை   உட்பட 4 பெண்கள் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுள்ளனர். வழிபாடு முடிந்த நிலையில் முனீஸ்வரன் கோவிலுக்கு அருகே உள்ள வேப்பூர் ஏரியில் உள்ள தண்ணீரில் நான்கு பெண்களும் இறங்கி உள்ளனர் 

ஏரியில் உள்ள சுழலில் சிக்கி நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கி கூச்சலிட்டுள்ளனர். மேலும் நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கிய நிலையில் அக்கம் பக்கத்தினர் இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா, ஆகிய நான்கு பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே பகுதியைச் சேர்ந்த அம்மா, மகள் மற்றும் சகோதரிகள் என நான்கு பெண்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

சகோதரிகள் இருவரை 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 Police arrested 4 people for misbehaving with two sisters

அருப்புக்கோட்டை - கல்லூரணியைச் சேர்ந்த பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘என்னுடைய தங்கை,  அருப்புக்கோட்டை பெர்கின்ஸ்புரத்தில் வசித்து வருகிறார். நாங்கள் இருவரும் குறிஞ்சாங்குளத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், எனது சம்பளப் பணத்தை வாங்குவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள என்னுடைய தங்கை வீட்டிற்குச் சென்றபோது, எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர் எங்களிடம், ‘உங்க மாமாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு.’ என்று கூறி, எங்களை அழைத்துக் கொண்டு வாழ்வாங்கி காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்றார்.  அங்கு  மறைந்திருந்த  நான்கு பேரும், ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கி, அவர் கண் முன்னே எங்கள் இருவரையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.’  எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். டிஎஸ்பி ஜெகந்நாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர், இளம் பெண்களை அழைத்துச் சென்று விசாரணை  நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சேதுராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, ராஜ்குமாரும், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மற்ற நான்கு பேரும் கூட்டாளிகள் என்பதும், அதிலொருவன் 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ராஜ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த 17 வயது சிறுவன், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (வயது 26), சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலாஜி (வயது 26) மற்றும் இளம் பெண்களை அழைத்துச் சென்ற ராஜ்குமார்(24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பந்தல்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரைத் தேடி வருகின்றனர்.