கடந்த மாதம் 29-ஆம் நாள்கண்ணகி பெருவிழாவானது தேனி மாவட்டம்உத்தமபாளையத்தில் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி தலைமை சார்பில் நடந்த கண்ணகி பெருவிழாவில்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேருரை ஆற்றினார். அப்போது அரசியல் மற்றும் தமிழ் தேசியம் மலரவேண்டிய அவசியம் பற்றி பேசினார், இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டார்.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
அப்போது சீமான்பேசுகையில்,
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார்வள்ளலார். பயிருக்கும்உயிர் இருக்கு என்று வாடினார்அதனால்தான் தான் விதைத்த பயிர் வாடியவுடன் வரப்பிலிருந்து வேலைபார்த்த வேளான்குடிமகன் மரத்திலே வேட்டியை கயிறாக கட்டி தொங்கி இறந்துபோறான். தமிழர்களின் உயிர்மைநேயதிற்கு சான்றுபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்று மறைமலை சொன்ன வாக்கு. இதைவேதம் கற்பிக்கவில்லை ஆனால் என்முன்னோன் பாடினான்பிறப்பு ஒக்கும் எல்லா உயிருக்கும் என்று. பகுத்துண்டு பல் உறவுகள் ஓம்புக என்று தமிழ்மறை கற்பிக்கவில்லை பகுத்துண்டு பல் உயிர் ஓம்புக என்று பாடுது. எல்லா உயிர்களுக்கும் உணவளி என்று சொன்னது தமிழினம்தான். பாரி வந்து முல்லைக்கு தேர் கொடுத்தான்அது பைத்திக்காரதனம்தான் தேரை விட்டுட்டுபோயிருக்க கூடாது குச்சியை நட்டு முல்லைக்கொடியை காத்திருக்கலாம்ஆனால் இங்கு பார்க்கவேண்டியதுஅந்த தேருக்கும்மேலாக தெரிகின்றபாரியின் உயிர்மைநேயத்தைதான். பேகன் மயிலுக்கு போர்வை கொடுத்தான் என்றால் அதில் தெரிவது உயிர்நேயம் தமிழர்களின்உயிர்நேயம். எல்லாரும் கல்லுமாவில் கோலம் போட்டுகொண்டிருந்த நேரத்தில் ஈயும்,எறும்பும் பசியாற்ற வேண்டுமென்றுஅரிசிமாவில் கோலம் போட்டவர்கள் நாம். ஈயிற்கும்எறும்புக்கும் உயிர் இருக்கு அவைகளுக்கும் உணவளிக்கவேண்டும் என நினைத்தவன்தான் தமிழன்.
ரஜினிகாந்த் ஒரு பச்சைத்தமிழனா... யாரோ ஒருவன்பெயிண்ட் அடிச்சி விட்டுட்டான் போல. சொந்த இனத்திற்கே உண்மையா இல்லாதவர்வேறு எந்த இனத்துக்க உண்மையாக இருப்பார். என்னை எங்க கொண்டு நிறுத்தினாலும் நான் சொல்லுவேன் என்னை அடித்து உதைத்தாலும் சொல்லுவேன் நான் தமிழன் என்று. நீங்கள் இனம் மாறுவதுஎங்களோடு வாழ்வதற்கா? இல்லை எங்களை ஆள்வதற்கா? என்னோடு வாழ்வதற்கு நீ நீயாகவே இரு. தமிழர்கள் மனிதநேயவாதிகள் அல்ல தமிழர்கள் உரிமைநேயர்கள். தமிழர்கள் போல உயிர்மைநேயம் கொண்டவர்கள் உலக வரலாற்றிலேயேஇல்லை.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
என் பெரும்புலவன் பாரதிசொல்லும்போது ''காக்கை குருவியும் எங்கள் சாதி நீர்கடலும் மலையும் எங்கள்கூட்டம்'' என்று சொல்கிறான். காக்கையும் குருவியும் நம்ம சாதிதாண்டாஅப்படி வாழ்ந்த ஒரு கூட்டம் சகமனிதனைஎப்படிவெறுப்போம் என்பதை நினைத்து பார்க்கவேண்டும். டென்மார்க்கில்வழும் தமிழர்களுக்காகஅந்த நாட்டு அரசுஉங்கள் தாய்மொழியை மறந்துவிட்டால் உங்கள் இனம் அழிந்துவிடும்என்று32 பள்ளிக்கூடங்களை கட்டிக்கொடுத்துள்ளது. தமிழ் கற்பியுங்கள் எனபள்ளிகூடம் கட்டி ஆசிரியர்பணிக்கு ஆட்களைநியமித்துஅவர்களுக்கு சம்பளம் வேற தருகிறது அந்தநாடு. அதைநாங்க இங்க செய்யமாட்டோமா.
நீ என்னவாக இருக்கிறாயோஅந்த அடையாளத்தோடு,மொழியோடு, கலை பண்பாட்டோடு வா ஆனா என்னை ஆளவேண்டும் என்று மட்டும்நினைக்காதே. என் தம்பிமார்கள் குறிப்பிட்டது போல நாம் தமிழர் கட்சியின் அரசியல் எல்லாம் உயிர்களுக்குமானது. நாம் தமிழர் கட்சியின் அரசியல்இந்த மண்ணில் வாழக்கூடிய எல்லா மக்களுக்குமானது. தலைமைஅதிகாரம் எப்போதும் மக்களுக்கானது.என் தாய்மொழி சாவதை பற்றி கன்னடர்கள்கவலைப்படமாட்டார்கள் ஏனென்றால்அவர்கள் மொழி, பண்பாட்டுமரபை காப்பாற்ற அவர்களுக்குகென்றுஒரு மாநிலம் இருக்கிறது. என் தாய்மொழி சாவதை பற்றி மலையாளிகள் கவலைப்படமாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கு அவர்களுடைய மொழியைகாப்பாற்ற ஒரு மாநிலம் இருக்கிறது. என் மொழி சாவதை பற்றி மராட்டியருக்கும் பீகாரியருக்கும்கவலை இருக்காது ஆனால் நான் கவலைப்படுவேன். தமிழனுக்கு ஒரு இடம்தான் இருக்கு இதை விட்டுவிட்டால் நாம் மீள்வதற்கும்மக்களோடு வாழ்வதற்கும் நமக்குவாய்ப்பில்லை. எல்லோரும் ஒருதாய் பிள்ளைகளாக கூடி வாழ்வோம் ஆனால் தமிழர்கள்தான் தாய் நிலத்தை ஆள்வோம். வாழும் உரிமை எல்லோருக்கும் உண்டுஆனால் ஆளும் உரிமை தமிழர்களுக்கு மட்டும் தான் உண்டு.
அறத்தின் வழியில் நின்று ஆள்கின்றஆட்சியே வேண்டும் என் தமிழ் நிலத்தில், அரசியல் பிழைத்தோர்க்குஅறமே கூற்றாகும் என இளங்கோபெருந்தகைபாடியது போலஎங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சி கூர்ந்து கவனிக்க வேண்டும் உறவுகளேஎங்கள் நாட்டில் எங்கள் ஆட்சி என்றுபதிவு செய்யவில்லை ''எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சி''. தமிழனிடம்கொடுத்துப்பாரு ஒரு ஐந்து ஆறு வருடம்அப்படி விட்டுபாரு என்ன நடக்குது என்று பாரு. உலகத்தின் தலைசிறந்த நாடாக பூமியின் சொர்க்கமாக என் தாயகம் புகழ்படைக்குமா என்று பாரு. தொலைக்காட்சி விவாதத்தில்யார் யார் எல்லாம் தமிழன் என்றால் என்ன அர்த்தம் தமிழர் யார் என்று தெரியாமல் நம்மை ஆக்கிவிட்டார்கள் என்றும் அர்த்தம். நீ முல்லைப்பெரியாற்றில் தண்ணி கேளுமலையாளிக்கு தெரியும் யார் யார் தமிழனென்றுசரியாக அடிப்பான். காவிரியில் தண்ணி கேளு அங்கு வாழும் தமிழர்களை தேடிசரியாக அடிக்கிறான். அப்ப அவனுக்கு தெரியுது யார் தமிழனென்றுநமக்கு தெரியவில்லை யாரு தமிழன் என்றுநக்கல், கேலி, கிண்டல்.
திராவிடர்கள்தான் தமிழர், தமிழர்தான்திராவிடர்கள், தமிழர்கள் ஏன் திராவிடர்களாகவேண்டும் தமிழர்கள் தமிழர்களகளாவே இருக்கவேண்டும். தமிழர் என்ற சொல்லேதிரிந்து திராவிடர் என்றானது, திரிந்தபாலையே நாங்க பயன்படுத்தவில்லை திரிந்த சொல்லை ஏன் பயன்படுத்தனும். நாங்கள் ஒன்றுமே சொல்லவில்லை நாங்கள்தமிழர்கள்என்றுதான்முன்வைக்கிறோம் ஆனால் அதற்கு எவ்வளவு பேர் வெந்நீரை காலில் ஊத்தி கொண்டு குதிக்கிறான். தமிழர் நாட்டை தமிழரேஆள வேண்டுமா...தமிழர் நாட்டை தமிழரேஆள வேண்டுமா...ஆமாண்டா தமிழர் தான் ஆள வேண்டும். தமிழர் நாட்டை தமிழன் ஆள்வதுதான் தமிழ்நாட்டின் தேசிய உரிமை. தமிழ் நாட்டை யார் வேண்டுமானலும் ஆளலாம் என்பதுதேசியம் அல்ல அது வேசியம் அதை ஏற்கவே முடியாது. எனக்கு தாயும் ஒன்றுதான் என் தாய்நாடும் ஒன்றுதான். அப்பா சரியில்லை என்றால் வீட்டுல மூத்தவன் இருக்கான் குடும்பத்தை காப்பாத்தி கொண்டுபோவான். அதற்காக அடுத்த வீட்டுக்காரனஎன் வீட்டில வைக்க முடியாது, அது மனங்கெட்ட செயல். செத்தாலும் சாவானே தவிர அடுத்தவன் காலை நக்கி பிழைக்கிற ஈனப்பிழைப்பை தமிழ்மகன் ஒருபோதும் செய்யமாட்டான். கழுத்தை அறுத்துக்கொண்டு சாவானே தவிர அப்படியொன்றை ஒருபோதும் தமிழன் செய்யமாட்டான். சேகுவாரா சொல்கிறான்ஒருவன்காலில் விழுந்து தான் நீ பிழைக்க வேண்டிய நிலை இருந்தால் நீ எழுந்து நின்று இறந்து போ என்கிறான். என் தலைவன் கற்பிக்கிறான் சரணடைந்து வாழ்வதை விட சண்டையிட்டு சாவது மேலானது போராடாம இருந்தாலும் இறந்துபோவாய்போராடினாலும் இறந்துபோவாய் ஆனால்போராடினால் ஒருவேளைவாழ்வதற்கு வாய்ப்பு இருக்கு அதானல் போராடியாவதுஇறந்து போ.
ஹச்.ராஜா சொல்றாருஇந்துதான் தமிழன். இதை எங்கவச்சு ஆராய்ச்சிபண்ணிகண்டுபிடித்தார் என்று தெரியல. அப்ப அமித்ஷா தமிழரா, ஹச்.ராஜா தமிழரா என்றுகேட்டா பதிலில்ல ஆவுன்னாநான் கும்பகோணம் போறேன் கும்பகோணம் போறேன்னுஇவங்களுக்கு இந்த கும்பகோண களம் ஒன்று மாட்டிக்கிச்சு. நாட்டை ரஜினிகாந்த் கிட்ட கொடு, இல்ல கமல்கிட்ட கொடு இல்ல செயல் தலைவர் ஸ்டாலினிடம் இல்ல தினகரன்கிட்ட கூட நாட்டை கொடுத்துதான் பாரு. நாங்க அப்படியே வேடிக்கை பாக்குறோம். நீ எவ்வளவு வேணாலும் போய் மேயி ஆனா மாட்ட கட்டிப்போட்ட மாதிரிமுளைகுச்சி இங்க அடிச்சி வைச்சிருக்கும் அய்யயோ எல்லாம் கொள்ள அடிச்சுட்டாங்களேன்னு கடைசியிலஎங்கிட்டதான் வந்துநிக்கணும். எங்களை போல் பேரன்பு கொண்டு நேசிக்கிற கூட்டம் வேறு எங்கும் கிடையாது. எல்லா பிரச்சனையை சொல்லுவான் போராடுவான் தீர்வுகாண கூடிய வலிமை, ஆற்றல் எங்களிடம் தான் உள்ளது. காவிரில தண்ணீர் இல்ல எப்படி வரவைப்பது என்று எனக்கு தெரியும். மீனவனை கைது பண்றான் கைது பண்ணமா எப்படி தடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும்என்று பேசினார்.